மனக்குறள் -19 -20 -21!

மனக்குறள் 9 & 10

மனக்குறள் -19  தெய்வத் தமிழ்மொழி

தமிழா உலகந் தனையே வரித்த
அமிழ்தின் மொழியாய் அறிக!

பேசும் மொழியே பெரிதாம் புரிதமிழ்
தேசம் வழங்கும் துணை!

மக்கள் மொழியே வணங்கல் மொழியாமே
புத்திக் கிதுவே புகல்!

வணங்கும் மறைமொழி மண்ணின் அறிவாய்
இணங்கும் இறைமொழி என்ப!

செய்யுள் இலங்கும் சிவனார் மொழியைப்
பொய்யில் அமிழ்த்தால் பிசகு!

முதன்மொழி மூத்த முகையெனப் பூமிப்
பதமொழி சொல்வர் பகர்!

எதுசொல நின்றும் புரிதலே காணாய்
விதிமொழி என்றே விளம்பு !

தெரியா மொழியினைத் தெய்வம் துதிக்கும்
சரிமொழி என்பதா சாற்று?

பிள்ளை அகவல் பெருமானார் வாசகம்
வள்ளலா ருந்தமிழ் வான்!

திருக்குறள், காப்பியம் தேவாரம் ஆழ்வார்ப்
பிரபந்தங் கூறும் தமிழ்

Continue Reading →

சிறுகதை: அக்கா + அண்ணை + நான்..?

முல்லைஅமுதன்இந்த வாடகை அறைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடமாகிவிட்டது.

‘அப்பாடா’

பல நாட்கள் பலரிடமும் சொல்லிவைத்து கிடைத்த அறைக்கு வந்து சிலநாட்களிலேயே பிடித்துப்போய்விட்டது என்பதை விட பழகிக்கொள்ள மனிதர்கள் கிடைத்ததும் மகிழ்வைத் தந்ததென்றுதான் சொல்லவேண்டும். சாப்பாட்டுடன் அறைக்குமாக கிழமை வாடகையாகத் தரவேண்டும் என்பதே பேச்சு. எனினும் அவ்வப்போது கிழமை தவறியும் விடுகிறது.ஊருக்குப் பணம் அனுப்பவேண்டும்…அம்மாவின் அறுவைச் சிகிச்சைக்கு, அப்பாவின் ஆஸ்துமாவிற்கு மருந்தெடுக்க… கல்லூரிக்குப் போகமிதிவண்டி வாங்க பிரியப்பட்ட தங்கைக்கு…இன்னும் இன்னும் தேவைகள் அதிகமாகவே  மனதை அரிக்கும்..இரவு வேலை..பகலில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் பகுதிநேரவேலை என தும்படிக்கவேண்டியிருந்தது…சம்மலமும் வரத் தாமதமாகும்.சண்டைபோடவும் முடியாத இக்கட்டு..இவற்றையெல்லம் அறிந்து எனக்கென விட்டுக்கொடுத்து சமாளித்தபடி …வாடகை கேட்டு நெருக்கடி தராமல் இருக்கும்படியான வீட்டுக்காரர்…மணியண்ணை..கம்பீரம் என்று சொல்லமுடியாவிட்டாலும் மனிதன் என்கிற உயிர்க்கூட்டைச் சுமந்தவாறு தானுண்டு தன்வேலையுண்டு என்றிருப்பவர்.அவரின் மனைவியோ எப்போதும் அலைபேசியை நோண்டியபடியே இருப்பவள்.சமைத்தபடியே காதுக்குள் அலைபேசியை செலுத்தி…தலையை ஒருக்கழித்தபடி பேசிக்கொண்டுப்பார்..கை அலுவலில் இருக்கும்…உடுப்புத் தோய்க்கும்போதும் யாருடனாவது பேசிக்கொண்டிருப்பார்…கலகலப்பானவர்.  

‘தம்பி சாப்பிட்டியே..கறி பிடிச்சுதோ?..’

‘ஓமோம்’ தலையசைப்பேன்..

மணியண்ணை கொடுப்புக்குள் சிரித்தபடி நகர்வார்.

மனைவியின் சாப்பாட்டின் ருசி அவருக்குத்தான் தெரியும்.

குறை சொல்லும்படியாக இல்லை..

நன்றாகத் தான் அவர் சமைப்பார்.

‘அக்கா’

‘கடைப்பக்கம் போறன்..என்ன வேணும்?..’

சிலவற்றைச் சொல்லுவார்..சில சமயங்களில் வேண்டாம் என்பார்..

Continue Reading →

மரணத்தின் விளிம்பில் நின்று….மாதாவுக்கு மடல் காவியம் ! (இந்திய சுதந்திரதினக் கவிதை)

ஶ்ரீராம் விக்னேஷ்எனை  ஈன்ற  மாதாவே….!
உன் மகன் எழுதுகிறேன்….!

வீட்டைப்  பாரு : நாட்டைப்  பாரு
என்பார்கள் !     
வீட்டைப்  பார்ப்பதற்காகவே…. நான்,
நாட்டைப்  பார்க்கின்றேன் !

பெற்ற  சுதந்திரத்தைப்,
பெருமையுடன்  காத்துவிட ,
பெறற்கரிய  குடியரசின்,
பேரதனை  நிலை நிறுத்த,

நாட்டைக்  காப்பதற்காய்,
எல்லைப்  புறத்தில், 
இராணுவப்  படையில்,
இன்று  நானும்  ஒருவன் !

பனிபடர்ந்த  மலைகளின் சாரலில்,
மரணத்தின்  விளிம்பினில் – நான்,
நின்றபோதிலும்  எனக்குள்  சுழல்வது,
உந்தன்  நினைவுகளே !

Continue Reading →