கணினி வழி தமிழ் கற்றல் ,கற்பித்தல்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்-பாரதி.

அமிழ்தினும் இனிய தமிழ்மொழி கணினியிலும், இணையப் பயன்பாட்டிலும் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படினும், தமிழ்மொழி தரவுகள் முழுமையாகப் பாதுகாக்கப்படாதநிலை காணப்படுகிறது. இந்நிலை மாற்றம் பெறுவதற்கு தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவர்களைத் தமிழ்க்கணினி இயக்குவதில் தேர்ச்சி பெற்றவர்களாக மாற்றம்பெற வைக்கவேண்டும். தொழில்வசதிகள் பெருகிட தாய்மொழிக்கல்வி மிகவும் இன்றியமையாததாகும். இதற்குப் பள்ளிக்கல்வியில் கணினிவழி தமிழ் கற்பித்தல் அவசியம் என்பதை இவ்வாய்வுக்கட்டுரை விளக்குகிறது.

முக்கியக் குறிப்புகள் – ஆங்கிலவழிக் கல்வியின் தாக்கம், தமிழ்வழிக் கல்வி, தமிழ்க்கணினி, குறுஞ்செயலிகள், அறிவியல்கருவிகளில் தமிழ்மொழி

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி பணிவாய்ப்பினை முழுமையாகப் பெற்றுத் தருவதால் மக்கள் ஆங்கிலவழிக் கல்வி முறையினைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களிடம் முழுமையான  ஆங்கிலவழிக்கல்வி இருப்பினும் அவர்களால் தாய்மொழியில் புரிந்து படிக்கும் அளவு  படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர முடிவதில்லை. இதனால், மனப்பாடம் செய்து பயிலும் முறை பெரும்பான்மையான மாணவர்கள் மத்தியில் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலை காணப்படுவதால் படைப்பாற்றல்திறன் குறைவாக அவர்களிடம் காணப்படுகிறது. தாய்மொழியில் கல்வி பெறும் மாணவர்களிடம் தமிழ்வழிக் கணினிக் கல்வியை முழுமையாக அளித்திடும்போது படைப்பாற்றல் திறனுடன் பல மென்பொருட்களையும், சமுதாயத்திற்குப் பல சாதனைகளையும் அளிக்க இயலும். தமிழ்க்கணினி என்பது வெறும்இலக்கியம், உரைநடை, கட்டுரை, கடிதங்கள், பண்பாடு போன்றவற்றை மட்டும் கற்றுத் தருவதன்று.

Continue Reading →

ஆய்வு: கடவுள் வரலாறு

கடவுளைத் தேடுதல்
கடவுளால் உலகம் படைக்கப்பட்டது. உலக உயிரினங்களுக்கு வாழ்க்கை அருளப்படுவதும், காக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் கடவுள் செய்த விதி வழியாகவே நிகழ்கின்றன. கடவுள் ஒருவரே, அவரை அடைகின்ற வழிமுறைகள்தான் வெவ்வேறு. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கடவுள், பல்வேறு கடவுள்களுக்கு பல்வேறு வழிமுறைகள். ஒவ்வொரு நெறிமுறையும் ஒவ்வொரு மதமாகும். ஆண் கடவுளே  ஒவ்வொரு மதத்திற்கும் தலைமை கடவுளாக இருக்கிறார். பெண் கடவுள் ஒன்றுகூட மதத்தின் தலைமை கடவுளாக இருக்கவில்லையே ஏன்? ஆண் கடவுள்கள் மதத்தின் அடையாளங்களாக நீடித்தபோதும், இயற்கையில் அடையாளங்களை ஆண் கடவுள்களால் கைப்பற்ற முடியவில்லையே ஏன்? நிலம், கடல், வனம், நதிகளின் பெயர்கள் ஆகியன தாய்மையின் அடையாளங்களாகவே இன்றும் சுட்டப்படுகின்றன. இவைகளுக்கு ஆண்மையின் அடையாளங்கள் ஏன் பொருத்தப்படவில்லை.  கண்ணகி என்ற கற்புக் கடவுளை கொற்றவை, கானமர் செல்வி, காளி, துர்கை என்ற பல பெயர்களில் வழிபட்டார்கள் என்பதாக சில ஆய்வாளர்கள் கருதுகிறார்களே, அந்த பெண் கடவுளர்களுக்கு கணவன்மார்களாக யார் இருந்தார்கள்? பொதுவாக, உலகைப் படைத்ததாக சொல்லப்படுகின்ற கடவுள், இந்த உலகில் எப்போது, எதற்காக, எப்படி உருவானார்? கடவுள் பிறந்து வளர்ந்த கதைதான் என்ன? கடவுள் பற்றிய சுவாரசியமான, குழப்பமான, முரண்பாடான பல்வேறு கதைகளைக் கடந்து, பொதுவான சில உண்மைகளை உணர்வதற்காக இக்கட்டுரை முயல்கின்றது. அறிவியல் தத்துவம் விளக்கும் சமூக வரலாறிலிருந்து கடவுளின் ஜாதகத்தை எழுத முயற்சிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.     கடவுளைத்தேடி காலம் கடந்து பயணித்த, காதலிலிருந்து கடவுள்வரை என்ற கலை இலக்கிய அனுபவத்திலிருந்து இக்கட்டுரையின் விவரிப்புகளை அமைக்க முயல்கிறேன். சமூக வரலாற்றில் கடவுளின் வழிபாடுகள் நான்கு நிலையில் கட்டமைந்துள்ளன.

1.இயற்கை வழிபாடு
2.தாய் தெய்வ வழிபாடு
3.தந்தை தெய்வ வழிபாடு
4.பத்தினி வழிபாடு

இயற்கையை வழிபடுதல்
கடவுள் தோன்றாத பழைய உலகின் எல்லை, மனித சமூகம் தோன்றாத ஓர் உலகமாக இருந்தது. உண்பதற்கும் வாழ்வதற்கும் பாதுகாப்பிற்கும் எந்த வசதிகளும் செய்யப்படாத நிலைமைகளே சூழ்ந்திருந்தன. இயற்கை ஆடையின்றி இயங்கிக்கொண்டிருந்தது. திட்டமிட்டு செய்யப்பட்டவையாக எந்தப் பொருள்களும் இல்லை. செயற்கையின் அடையாளமாக சிறு கோமணம்கூட கிடையாது. செயற்கையற்ற அந்தப் பழங்கால உலகின் பிரமாண்டங்களாகப் பலவித உயிரினங்கள் திரிந்துகொண்டிருந்தன.

Continue Reading →

ஆய்வு: காலந்தோறும் உழவு

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
மனிதனுக்குப் பொருளாதார நோக்கினைக் கற்பித்து மேம்படுத்தி அவனை நாகரீக வளர்ச்சியை நோக்கி நடைபயிலச் செய்தவை உழவாகும். தமிழக வரலாற்றின் ஒவ்வொரு கட்டத்திலும் அவை ஒன்றினை ஒன்று மிஞ்சியும்,ஒன்றோடு ஒன்று இணைந்தும் வளர்ந்துள்ளன. உழவு என்பது நிலம் சார்ந்த உற்பத்தித் திறனாகும். உழைப்பு என்ற கருத்தின் அடிப்படையில் உழவு என்னும் சொல் பிறந்திருக்க வேண்டும். உழவர், சதுர்த்தர், வளமையர், களமர், மேழியர், வேளாளர், ஏரின் வாழ்நர், காரகளர், புனைஞர், பின்னவர், கடையர், தொழுவர், மள்ளர் என்று பல பெயர்களைச் சங்க இலக்கியங்களும், நிகண்டுகளும் உழவர்களுக்குத் தருகின்றனர்.தொடக்கத்தில் வேளாளர் என்ற சொல் பெருந்தகையாளர் என்ற பொருளில் பயன்பட்டுப் பிறகு உழவர்களைக் குறிக்கத் தொடங்கியது. இன்று விவசாயிகள் என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் இச்சொல் பயிலப்படவில்லை. எனவே இச்சொல்லைப் பின்னாளில் வழக்கிற்கு வந்ததாகவே கொள்ள முடியும். இத்தகைய சிறப்பு வாய்ந்த உழவினை காலந்தோறும் எவ்வாறு வளர்ந்தனர் என்பதைப் பற்றி விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

உழவின் தொன்மை
உழவுத் தொழிலின் தொன்மைப் பற்றிப் புறநானூறு பாடல் பின்வருமாறு விளக்குகின்றது. அவை,
“உணவு எனப்படுவது
நிலத்தொடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு”
(புறம் பா.எண் 18)

என்ற இப்பாடலில் இவ்வுடல் நீரின்றி அமையாது உணவால் அமைவது உணவையே முதன்மையாகவும் உடையது, உணவு தந்தவர் உயிரைத் தந்தவர். எனவே உணவு எனப்படுவது நிலத்துடன் நீரும் ஆகும் என்று கூறுகின்றது. மனிதனுக்கு இன்றியமையாத தேவையான உணவு தொடக்க நிலையில் தேடப்பட்டுச் சேகரிக்கப்பட்டது. அடுத்த நிலையில் உற்பத்தி செய்யப்பட்டது. தொடக்கநிலையில் இயற்கையாக விளைந்த பழங்கள் ,கிழங்குகள், வரகு, மூங்கில் அரிசி முதலியவை உட்கொள்ளப்பட்டனர். உணவைச் சேமித்து வைத்திருந்து உண்ண வேண்டி வந்த போது உணவு தேடல் நிலையிலிருந்து உற்பத்தி நிலைக்கு மாறியது இந்நிலையில் கடினமான நிலம் கிளரப்பட்டு வித்திடப்பட்டது. மழைநீர் பயன்படுத்தப்பட்டது. உற்பத்தி அதிக அளவில் தேவைப்பட்ட போது ஆற்றோரப் பகுதிகளுக்குக் குடியேறி உற்பத்தியில் ஈடுபட்டனர். இந்த முறையில் தான் உற்பத்தி வளர்ந்தது என்பதை அறிய முடிகின்றது.

Continue Reading →

முனைவர் சி.திருவேங்கடம் கவிதைகள் ஐந்து!

- முனைவர் சி.திருவேங்கடம் இணைப்பேராசிரியர்,  இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர். -

1. வேழத்தின் ஓலம்

அடர்ந்த பெருங்காட்டிலிருந்து
வேட்கை மிகுதியால்
நீர் தேடி அலைந்து
திரிந்து திசைமாறி

கணப் பொழுதில்
பாதுகாப்பற்ற
தண்டவாளத்தை
யாதுமறியாமல்
கடந்து செல்ல
முனைகிறது
பேருருவம் கொண்ட
யானை.

Continue Reading →

வேதா. இலங்காதிலகம் (டென்மார்க்.) கவிதைகள் மூன்று!

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

1. பகல் வேடக்காடு….

நன்மதியைத் துன்மதி ஆக்குபவர்
வன்முறையாளர் பழிவாங்கும் சிந்தனையாளர்
இன்பமில்லா விடமேறிய சொற்களுடன்
அன்புக்காட்டைக் கொலைக்காடு ஆக்குபவர்
புன்னகையில் மர்மங்கள் புதைத்துள்ள
தென்பற்ற உறவுகள் விலக்குதற்குரியன.

பூச்சொரியும் என்று புறப்பட்ட
பாதங்கள் பாவிசை கேட்காது
பரவச மொழியை இழந்தால்
பந்தம் அறுத்திடும் ஒரு
பகல் வேடக்காடு தானே
பகிரங்க வாழ்வு மேடை.

முகத்தை முகம் பார்த்து
முக்காடற்று நிமிர்ந்து நேராக
முகம் கொடுப்பதே சுயநடை
முனகி விம்மும் மனமுகடு
முரணாகிச் சரிவதும் இயல்பு.
தரமற்ற நிலையின் தழுவலேயிது!

Continue Reading →

மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண்,. அவுஸ்திரேலியா ) கவிதைகள் இரண்டு!

- மகாதேவஐயர் ஜெயராமசர்மா (மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) -1. காந்திசொன்ன தத்துவங்கள் கதிகலங்கி நிற்குது !

– அண்ணல்காந்திக்குச் சமர்ப்பணம் –

கண்ணியத்தை வாழ்வாக்கி
காந்திமகான் வாழ்ந்திருந்தார்
காசுபற்றி எண்ணாமால்
கடமைவழி அவர்சென்றார்
காசுபற்றி எண்ணாதா
காந்திமகான் தனையிப்போ
காசுகளில் இருத்திவைத்து
கறுப்புப்பணம் ஆக்குகிறார் !

காந்திமகான் பெயராலே
காரியங்கள் ஆற்றுகிறார்
கயமைநிறை அத்தனையும்
கவலையின்றி செய்கின்றார்
கயமைதனை அகற்றுதற்கு
காந்திபட்ட துன்பம்
கண்ணீரின் கதையாக
ஆகியதை மறந்திட்டார் !

Continue Reading →

மனக்குறள் -25 , 26 & 27 :கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்

மனக்குறள் 9 & 10

மனக்குறள் -25 கண்ணதாசன் என்னும் காலக்கவிஞன்

கண்ணதாசன் இன்பக் கவியரசன் காலெடுத்துக்
கண்;ணில் மலர்ந்தேன் கவி !

எண்ணிப் பரந்த இதயக் கருவறைக்குள்;
எண்ணம் வகுத்தான் இதயம் !

வேதாந்தம் சைவம் விளங்கும் மறைமொழிபோல்
நாதாந்த மிட்டான் நயம் !

ஏடு வரைந்து எடுத்தபெயர் கண்ணதாசன்
வேகும் அரசியலின் வேர்!

அர்த்தமுள்ள இந்துமதம் ஆன்மக் கருந்துகளைக்
கற்றுவிட வைத்தானே கண்!

Continue Reading →

நேர்காணல்: ஓவியர் கெளசிகனுடன் ஒரு நேர்காணல்!

– அண்மையில் ஓவியர் கெளசிகனுடன் மின்னஞ்சல் மூலம் நடைபெற்ற நேர்காணலிது. – பதிவுகள் –


ஓவியர் கெளசிகன் தன்னைப்பற்றி……..

1963ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 திகதி பதுளையில் பிறந்தேன். கொழும்பு கொட்டாஞ்சேனையில்  U.C. மெதடிஸ்ட் கல்லூரியில் G.C.E. O/L வரை கல்விகற்றேன். 1980 களில் சிந்தாமணி பத்திரிகையில் பகுதிநேர ஓவியராக கடமையாற்றினேன். அதன்பின்னர், 1990 களில் தினகரனில் பத்திரிகையில் பகுதிநேர ஓவியராக கடமையாற்றினேன். 1994 முதல் தொழில்முறை ஓவிய ஆசிரியராகவும், 1998 முதல் ஒரு  தொழில்முறை கணினி வரைகலைஞராகுவும், இணையத்தள பக்க வடிவமைப்பாளராகவும் கடமையாற்றி வருகிறேன். 2003 இலிருந்து தொடர்ச்சியாக 11 ஓவியக்கண்காட்சிகளை எனது மாணவர்களை இணைத்துக் கொண்டு நடாத்தியுள்ளேன். 2018 இல் முதன் முதலாக இந்தியாவில் கொல்கத்தாவிலுள்ள சாந்திநிகேதனில் எனது கண்காட்சி ஒன்று அரங்கேறியது. இலங்கையிலிருந்து சாந்திநிகேதன் சென்று ஓவிய கண்காட்சி ஒன்றை நடாத்திய முதல் இலங்கையர் என்பதில் பெருமிதம். சென்ற மாதம் தமிழ் இலங்கையின் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளின் கலைஞர்களுக்கான 2019 மாநில விருது வழங்கும் விழாவில் தேசிய ஒருங்கிணைப்பு, உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத மற்றும் கலாச்சார  விவகாரங்கள் திணைக்களம் ஆகியவற்றால் “கலைச்சுடர்” என்ற பட்டத்தை கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் எனக்கு வழங்கப்பட்டது.

கேள்வி: உங்களுக்கு ஓவியத்துறை மீதான ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? ஏன்?

Continue Reading →