பதிவுகளில் அன்று: வாசகர் கடிதங்கள் – கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் – புதிய நாளை இனிய நினைவுகளுடன் வரவேற்போம்!

வாசகர் கடிதங்கள்

கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் : புதிய நாளை இனிய நினைவுகளுடன் வரவேற்போம்!

[பதிவுகள் விவாதக்களம் இயங்கிக்கொண்டிருந்த காலத்தில் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்  பற்றி ‘இந்திரன் சந்திரன்’ என்பவர் அவரைக்களங்கப்படுத்தும் வகையில் பதிவுகளை இட்டிருந்தார். அவை பற்றிக் கவிஞர் தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கடிதமொன்றினை எழுதியிருந்தார். பின்னர் பதிவுகள் விவாதத்தளத்திலிருந்து ‘இந்திரன் சந்திரன்’ எழுதியவை பொய் என நிரூபிக்கப்பட்டதால்  நீக்கப்பட்டன. அது பற்றிய கவிஞரின் மின்னஞ்சலிது. ஒரு பதிவுக்காக இங்கு பிரசுரமாகின்றது.]


From: “Jayapalan” <visjayapalan@yahoo.com>
To: “NAVARATMAM GIRITHRAN” <ngiri2704@rogers.com>
Sent: Tuesday, November 01, 2005 2:38 AM
Subject: DepavaL Wal vAzththukkalOdu

புதிய நாளை இனிய நினைவுகளுடன் வரவேற்போம்! – கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன் –

அன்புக்குரிய நண்பர் கிரிக்கு, நான் கேட்டுக் கொண்டபடி என்னால் கவிதைப் பரிசோதனையாக எழுதப் பட்ட வரிகளை நீக்கியதற்க்கு நன்றி. பதிவுகளில் வெளியான உங்கள் கடிதம் தொடர்பாக எனக்கு நிறைய கடிதங்கள் வந்துள்ளன. பெரும்பாலான விடயங்களில் பலரும் மகிழ்ச்சியும் திருப்தியும் தெரிவித்துள்ளனர். எனினும் சில விடயங்கள் தொடர்பாக அவர்கள் வருத்தப் பட்டு எழுதியிருந்தார்கள். இதுதொடர்பாக “நான் பதிவுகள் ஆசிரியரின் கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன். சம்பவம் தொடர்பான நிலைபாடு ஆசிரியரின் பிரச்சினை”  என்றும் அவர்களுக்கு பதில் அனுப்பினேன். உங்கள் கருத்து நிலைபாடு தொடர்பாக தலையிடுவது எனது நோக்கம் இல்லை. அவை வெளியிடப் பட்டதில் எனக்கு ஆட்சேபனையும் இல்லை. என்மீது அக்கறை உள்ள நண்பர்கள் மின் அஞ்சலிலும் தொலை பேசியிலும் அடிக்கடி குறிப்பிட்ட மூன்று முக்கியமான விடயங்களை தகவலுக்காக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.

Continue Reading →

காலத்தால் அழியாத கானங்கள்: “ஒரு வருசம் காத்திருந்தா கையிலொரு பாப்பா”

காலத்தால் அழியாத கானங்கள்: "ஒரு வருசம் காத்திருந்தா கையிலொரு பாப்பா"

பட்டிக்காட்டுப் பொன்னையா வந்தது தெரியாமல் போன எம்ஜிஆர் திரைப்படங்களிலொன்று. இலங்கையில் திரையிடப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ஆனால் இப்பாடலை யு டியூப்பில் கேட்டபோது உடனடியாகவே பிடித்துப்போனது.. முதற் காரணம் டி.எம்.எஸ் & பி.சுசீலா குரலினிமை. அடுத்தது கே.வி.மகாதேவனின் இசை. அடுத்த காரணம் ஒன்றுமுண்டு. அது எம்ஜிஆர் & ஜெயலலிதாவின் நடிப்பு. பாடலுக்கேற்ப பாடலைச் சுவையாக்குவதில் இருவரின் பங்கும் முக்கியமானது. பாட,ல் வரிகளைப்பொறுத்தவரை குறிப்பிடத்தக்கதாக எவையுமில்லை, சந்தத்துக்கு எழுதியவை என்பதைத்தவிர.

பாடலில் எனக்கு மிகவும் பிடித்த கட்டமாக “நித்திரையை நீ மறக்க!” என்று வாத்தியார் (டி.எம்.எஸ்) கூற ஜெயலலிதா “ம்ஹூ’ (சுசீலா) என்பார். தொடர்ந்து ‘நீல விழி தான் சிவக்க’ என வாத்தியார் கூற , ஜெயலலிதா ‘ஓஹோ’ என்பார். மீண்டும் வாத்தியார் “நித்திரையை நீ மறக்க!” என்று கூற, ஜெயலலிதா ‘ஆகா’ என்பார். மீண்டும் “‘நீல விழி தான் சிவக்க” என்று வாத்தியார் தொடர, ஜெயலலிதா ‘ம்ஹூ’ என்பார். மேலும் டி.எம்.எஸ் ‘முத்திரையை நான் பதிக்க!’ என்று தொடர்ந்து ‘முந்நூறு நாள் நடக்க!; என்று முடிக்க, ஜெயலலிதா சிரிப்பார். சிரித்தது ஜெயலலிதாவா சுசீலாவா என்பதில் எனக்கொரு சந்தேகமுண்டு. தொடர்ந்து ஜெயலலிதா “உன் முகம் போலே” என்பார். பதிலுக்கு வாத்தியார் ‘ஆகா” என்பார். மேலும் ஜெயலலிதா ‘ என் மடி மேலே” என்பார். வாத்தியார் ஓகோ’ என்பார். பாடலின் இப்பகுதியை நடிகர்களுக்காகவும்,. பாடகர்களுக்காகவும் மிகவும் இரசித்தேன். நீங்களுமொரு தடவை அப்பகுதியைக் கேட்டுப்பாருங்கள். மயங்கி விடுவீர்கள்.

Continue Reading →

எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் ‘கந்துலு நிம வன துரு’. – கண்ணீர் வற்றும் வரை – (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு)

எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் 'கந்துலு நிம வன துரு'. - கண்ணீர் வற்றும் வரை - (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு)ஜி.ஜி,சரத் ஆனந்த

– எழுத்தாளர் ஜி.ஜி,சரத் ஆனந்தவின் மொழிபெயர்ப்பில் ‘கந்துலு நிம வன துரு’. – கண்ணீர் வற்றும் வரை – (சிங்கள மொழியில் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு) –

நண்பர் ஜி.ஜி.சரத் ஆனந்த தகவலொன்றை அனுப்பியிருந்தார். அதில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

“உங்கள் சிறுகதையொன்றும் அடங்கியுள்ள புதிய தொகுப்பொன்று உடனே வெளிவரும் உங்கள் ‘உடைத்த காலும் உடைத்த மனிதனும்’ கதை தான். உங்கள் நல்லூர் ராஜதானி நூலை வெளியிட்ட அஹஸ மீடியா’ வேர்க்ஸ் பப்ளிஷர்.  வட கிழக்கு, ,தோட்ட பகுதி, முஸ்லிம், அத்துடன் வெளிநாட்டில் வாழும் ஈழத்து எழுத்தாளர்களின் கதைகள் அடங்கியுள்ளன. நான்கு பெண் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். 12 எழுத்தாளர்கள் ( மூன்று தலைமுறையில்). ‘கந்துலு நிம வன துரு’.. ‘கண்ணீர் வற்றும் வரை’ என்பது நூலின் பெயர். நூலில் இடம் பெறும் எழுத்தாளர்கள்: மு.சிவலிங்கன், நயீமா சித்திக், நீர்வை பொன்னையன், அழகு சுப்பிரமணியம், ராணி சீதரன், கே. ஆர்.டேவிட், ஆர்.ராஜேஸ்கண்ணன், ஆர். எம். நௌஷாத், வ.ந..கிரிதரன், பாலரஞ்சனி ஷர்மா, எம்.ரிஷான் ஷெரீப், மாதுமை சிவசுப்பிரமணியம்.”

Continue Reading →