பொறியியல் பீட மாணவி லிண்டா ஷாவை நினைவூட்டிய கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டியின் மரணம்!

கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டிLinda Shawஹைதராபாத்தில் கால்நடை வைத்தியர் பிரியங்கா ரெட்டி பயணித்த ‘ஸ்கூட்ட’ரின் ‘டய’ரொன்றினைப் ‘பங்ச’ராக்கி, , அவருக்கு உதவுவதுபோல் நடித்து, அவரைப்பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்த செய்தியானது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. விரைவிலேயே கொலையாளிகள் நால்வரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். பிரியங்கா ரெட்டி இறப்பதற்கு முன்னர் தனது சகோதரியை அழைத்துள்ளார். தனக்குப் பயமாகவுள்ளதாகவும், தன்னுடன் பேசிக்கொண்டிருக்கும்படியும் வேண்டியுள்ளார். நிலைமையின் தீவிரத்தைச் சகோதரி  உணர்ந்திருக்கவில்லை. பிரியங்கா ரெட்டியும் சகோதரியை அழைத்ததற்குப் பதில் காவல்துறையினைரை அழைத்திருந்தால் ஒருவேளை தப்பியிருக்கக்கூடும். இது போன்ற சந்தர்ப்பங்களைப பெண்கள் தவிர்க்க வேண்டும். இரவுகளில் தனிமையாக  நேரங்கெட்ட நேரங்களில் ‘அண்டர்கிரவுண்ட்’ வாகனத்தரிப்பிடங்களில் வாகனத்தை நிறுத்தச் செல்லல், தனிமையாகத் தொலைதூரத்துக்குப் பயணித்தல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். செல்லும் வழியில் ஏதாவது வாகனத்துக்கு நடந்து விட்டால் , நிராதரவான நிலையில் , தவிக்கும் நிலை ஏற்படும் சாத்தியமிருப்பதால் இதுபோன்ற சந்தர்ப்பங்களைத்  தவிர்க்க வேண்டும்.

‘டொரண்டோ’ நகரில் இளம் பெண் வைத்தியரொருவர் தான் வசிக்கும் ‘கொண்டோ’வின் ‘அண்டர்கிறவுண்ட்’ வாகனத்தரிப்பிடத்துக்கு நள்ளிரவில் தனது வாகனத்தைக் கொண்டு சென்றபோது அங்கிருந்த வீதி மனிதனிருவனால் தாக்கப்பட்டுக் கொலை  செய்யப்பட்டது நினைவுக்கு வருகின்றது.

Continue Reading →

முகநூற் பதிவுகள் சிலவும் , எதிர்வினைகள் சிலவும்!

கோகிலம் சுப்பையாவை எழுத்தாளர் நந்தினி சேவியர் முகநூலில் நினைவுபடுத்தியிருந்தார். வீரகேசரி பிரசுரமாக வெளியான இவரது ‘தூரத்துப்பச்சை’ மலையக இலக்கியத்துக்கு, தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த, சேர்க்கும் முக்கியமானதொரு படைப்பு. நாவலில் வரும் வள்ளி என்னும் பாத்திரம் மறக்க முடியாத பாத்திரம். தகழியின் தோட்டியின் மகனை வாசித்தபொழுது ஏற்பட்ட உணர்வு எனக்கு இந்நாவலை வாசிக்கையிலும் ஏற்பட்டது. இரு நாவல்களுமே மானுட வாழ்வின் குழந்தையிலிருந்து முதுமை வரையிலான போராட்டத்தை, சமூக, அரசியற் சூழல்கள் ஏற்படுத்தும் தாக்கத்தின் விளைவுகளை வெளிப்படுத்துவதாக அமைந்த நாவல்கள். மீண்டும் அவரது ‘தூரத்துப் பச்சை’ நாவலினைப் வாசிக்க வேண்டுமென்ற உணர்வினை நந்தினி சேவியரின் நினைவூட்டல் ஏற்படுத்திவிட்டது.


நந்தினி சேவியரின் பதிவில் எழுத்தாளர் ஜவாத் மரைக்கார் அவர்கள் ‘தூரத்துப்பச்சை’ (வீரகேசரி பிரசுரம்) அட்டையினைப் பகிர்ந்திருந்தார்.அதனை நன்றியுடன் இங்கு பகிர்கின்றேன்.

ஆய்வு: காட்டுநாயக்கர் பழங்குடிகளின் சடங்கும்,வழக்கும் (கூடலூர், நீலகிரி மாவட்டம்)

தமிழகத்தின் மேற்கே,மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைமாவட்டம் நீலகிரியாகும். இம்மாவட்டம் பல்வேறு தனிச்சிறப்புகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. அவற்றுள் முதன்மையானது யுனெஸ்கோவால் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள காப்பகமும் அவை உள்ளடங்கிய உயிர்க்கோள மண்டலமும்  நீலகிரியாகும். தவிரவும் இந்தியாவெங்கும் இனங்காணப்பட்ட அருகிவரும்  தொன்மையான 75 பழங்குடி குழுக்களில் ஆறுவகையான தொல் பழங்குடிகளின்  ஒருமித்த வசிப்பிடமாகவும், பழங்குடிகள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுமக்கள் வாழும் பகுதியாகவும்,15 க்கும் மேற்பட்டதிராவிட மொழிகள் பேசப்படும்  திராவிட மொழிகளின் நுண்ணுலமாகவும், சமூகவியல் , மானுடவியல், மொழியியல்,புவியியல்,சூழலியல் முதலான பல்துறை சார்ந்த  ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வுக்களங்களின்  ஆவணப் பெட்டகமாகவும் நீலகிரி விளங்கிவருகிறது.

உயிர்சூழல் மண்டலம்
பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றுள் மனித இனமும் ஒன்றாகும். உயிர்க்கோளத்தில் உயிர் வாழ தேவையான சூழலை உருவாக்கித்தரும் அரிய இயற்கை அமைப்புகள் சில இடங்களில் மட்டுமே இருக்கும். இந்த இடங்களே உயிர்க் கோளத்தில் தேவையான சூழலை உருவாக்கித்தரும் என்பதால், அத்தகைய இடங்கள் உயிர்க்கோள் காப்பகங்கள் என ‘யுனெஸ்கோ’ அமைப்பு இனங்கண்டு  வருகிறது . அவ்வாறு யுனெஸ்கோ அமைப்பால் 1986 இந்தியாவில் அறிவிக்கப்பட்ட முதல் உயிர்க்கோள் காப்பகமும்  நீலகிரியாகும். இங்கு  இலையுதிர் மற்றும் முட்புதர் காடுகள் ,ஈரப்பதம் மிகுந்த  பசுமை மாறாக் காடுகள் , சோலை புல்வெளிகள் ,சவானா புல்வெளி காடுகள்  முதலானவை இங்குள்ளன.அவற்றுள் உலகில் உள்ள 3238 பூக்கும் இனத்தாவரங்களுள் சுமார் 135 இனங்களும்  தவிரவும் அரியவகை பூச்சியுண்ணும் தாவரமான, டொசீ இமயமலைக்கு அடுத்தப்படியாக இங்குதான் உள்ளது.

Continue Reading →

ஊடக அறிக்கை: இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

Communist Party of India (Marxist)


30.11.2019

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (29.11.2019) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், அ. சவுந்தரராசன், பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை

இலங்கை அரசு உறுதி செய்திட வேண்டும்

இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த அரசு ராஜினாமா செய்த பின்னணியில் இவரது சகோதரர் மகிந்திர ராஜபக்சே பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு புதிய அமைச்சரவையும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியின் போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் அச்சம் கலந்த சூழல் ஏற்பட்டுள்ளது.
ராஜபக்சே அரசின் அதிகார வர்க்க, மக்கள் விரோதப் போக்கின் காரணமாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்து புதிய கூட்டணி அரசு ஏற்பட்டது. ஏற்பட்ட புதிய அரசு மக்களுக்கு அளித்த குறிப்பாக, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதுடன், இவ்வாட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. 

Continue Reading →