பதிவுகளில் அன்று: எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாகப் பதிவுகளில் வெளியான மூன்று கட்டுரைகள்!

சுந்தர ராமசாமி– பதிவுகளி’ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் ஒரு பதிவுக்காக இங்கு அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும்.  இணையத்தில் தமிழை ஏற்றியதில் பதிவுகளின் பங்களிப்பு முக்கியமானது. சிறுகதை, கவிதை, கட்டுரை, நாவல் எனப் பதிவுகளில் பல படைப்புகள் வெளியாகியுள்ளன. உலகின் பல பாகங்களிலிருந்தும் எழுத்தாளர்கள் பதிவுகளுக்குத் தம் படைப்புகளை அனுப்பி வைத்தனர். — ஆசிரியர்  –


பதிவுகள் மார்கழி 2005 இதழ் 72
1. சு.ரா – ஒரு சாமன்யனின் குறிப்புகள்! – நேசகுமார் –

சுந்தர ராமசாமி இறந்ததை எனக்கு முதலில் அறிவித்தது அரவிந்தன் நீலகண்டன் தான். நாகர்கோவிலிலிருந்து அழைத்து, “சுரா இறந்துவிட்டாராம்” என்றார். நான் அவரது குரலில் வேறேதேனும் தொணி தென்படுகிறதா எனக் கவனிப்பதில் மும்முரமானேன். எதிர் முனையில் தென்பட்ட அமைதி, அவரும் என் மனவோட்டத்தை கணிக்க முற்படுகின்றார் என்பதைக் காட்டிற்று. அதன் பின்னரே ஏனைய நண்பர்களின் தொலைபேசிகள், சன் டிவி செய்தியில் அவரது கண்ணாடிக்குள்ளிருக்கும் உடல், மிகச் சிலரே அவ்வுடலைச் சுற்றியிருக்கும் காட்சி போன்றவற்றைக் காணவும், மத-சாதி அடையாளங்களும் சம்பிரதாயங்களுமின்றி அவரது இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டும் என்பது அவரது விருப்பம் என்பதை சன் டிவி செய்தி வழியாக கேட்டறியவும் முடிந்தது.

சுந்தர ராமசாமி பற்றி எப்போது அறிந்தேன்? காலச்சுழலில் பின்னோக்கிப் பயணித்தால்  வைதேகிக்கும் ஷோபனாவுக்கும் இடையே இருந்த பகைமைதான் சு.ராவை எனக்கு அறிமுகப் படுத்தி வைத்தது என்பது நினைவிற்கு வருகிறது. வைதேகி தனது தாழ்வுணர்ச்சிகளை மீறி வெளிவருவதற்கு பயன்படுத்திய பல ஆயுதங்களுள் சுந்தர ராமசாமியும் ஒன்று – அவரது “.ஜே சில குறிப்புகளையும்”, புளியமரத்தின் கதையையும் அடிக்கடி கையில் வைத்திருப்பார் – என் போன்ற ஞானசூன்யங்களுக்கும் அவற்றை அறிமுகப் படுத்தி வைத்தார். வைதேகி, தொண்டாம்புதூர்க்காரர். ஷோபனாவோ, திருச்சிக்காரர். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பாக நவநாகரிக நங்கைக்கான குணாதிசயங்கள் மற்றும் அழகென நாங்கள் கருதிய அம்சங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்தவர் – பாலகுமாரன் ரசிகை.

Continue Reading →

ஆய்வு: மலையாளிப் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியப் பண்பாடு

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


சமுதாயத்தின் அனுபவ முதிர்ச்சியையும் அறிவுக்கூறுகளையும் பண்பாட்டு உள்ளோட்டங்களையும் நாட்டார் வழக்காற்று இலக்கியங்கள் கொண்டு திகழ்கின்றன. இவ்விலக்கியப் பரப்பில் கல்வராயன் மலைவாழ் மலையாளி பழங்குடிகளின் பழமொழிகள் இக்கட்டுரையில் விளக்கம்பெறும்.

மூதறிவிலிருந்து தோன்றிய மொழி பழமொழி. நினைப்பிற்கும் எட்டாத பழங்காலத்திலிருந்தே மக்கள் வாழ்வில் வாழ்ந்து வருபவை என்பதை அதன் பெயரே உறுதிப்படுத்துகிறது.

தமிழில் பழமொழிக்கு மூதுரை, முதுமை, மொழிமை, முன்சொல், முதுசொல், பழஞ்சொல் என ஆறுபொருள் இருப்பதாகச் சேந்தன் திவாகரம் கூறுகின்றது.

பழமொழி என்ற சொல்லே பழமொழி பற்றிய சிறந்த வரையறையாக அமைந்துள்ளது என்கிறார் ஜான் லாசரஸ் அவர்கள். பழமொழி என்பது உலகுக்கு உணர்த்தும் உண்மையை ஒரு சிறிய வாக்கியத்தின் மூலம் சுருக்கிக் கூறுவது ஆகும் (2003:104).

தொல்காப்பியர் பழமொழியை, ‘முதுசொல்’ ‘முதுமொழி’ என்று குறிப்பிடுகிறார்

Continue Reading →

குறுந்தொகையில் பண்பாட்டுப் பதிவுகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


முன்னுரை:

மனிதர்களின் அகவாழ்வை எடுத்துரைக்கும் அற்புத இலக்கியமான குறுந்தொகையில் நிறைந்திருக்கும் பண்பாட்டுப் பதிவுகளைப் பார்வையிடும் நோக்கில் இக்கட்டுரை பயனிக்கின்றது.

பண்பாடு:

‘பண்பாடு’ என்பதைப் பொதுவாக நோக்கினால் பண்பினை வெளிப்படுத்துதல் என்று பொருள்படும். ஆனால் ‘பண்பு’ என்பது வேறு. ‘பண்பாடு’ என்பது வேறு. தனிமனிதனின் குணங்களைக் குறிப்பது பண்பு. ஒரு கூட்டத்தின் நிலைப்பாட்டைக் குறிப்பது பண்பாடு. ‘பண்படு’ என்பதே ‘பண்பாடு’ என்று மாறியிருக்கக்கூடும்.

பண்பாட்டுப் பதிவுகள்:

பண்டைக்காலத்தில் மணமாகாத பெண்கள் தம் காலில் ஒருவகைச் சிலம்பினை அணிந்திருந்தனர். மணமான பின்பு அதைக் கழற்றி விடுவார்கள். இதற்கெனச் ‘சிலம்புகழி நோன்பு’ எனும் சடங்கு உண்டு. பெண்ணின் காலை நோக்கிய அளவிலேயே அவள் திருமணமானவளா? இல்லையா? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Continue Reading →

ஆய்வு: குறிஞ்சிப்பாட்டில் இயற்கை பண்பாட்டு வாழ்வியல் நெறிமுறை

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


முன்னுரை

மானிடரின் காதல் ஓவியங்களுக்கு மிகச் சிறந்த பண்பாட்டுப் பின்னணியாக அமைவது இயற்கைக் காட்சி. இவ்வகையில் ஐந்து நிலத்துக் காட்சிகளையும் அழகுபடத் தீட்டியுள்ளர் சங்ககாலப் புலவர்கள். ஆயின், அவற்றைக் காதல் நாடகத்துக்கு ஏற்ற அரங்கு என்ற அளவோடு அவர்கள் நிறுத்திவிடவில்லை. துலைவன் தலைவியர் தம் உள்ளத்தே தோன்றும் திளைப்பையும் களைப்பையும் இயற்கைக் காட்சிகளிலே கண்டார்கள். சூழ்ந்துள்ள இயற்கையெல்லாம் அவர்களோடு ஒன்றிவிட்டதாக உணர்ந்தார்கள். தலைவன் தலைவியரின் உள்ளத்து உணர்வுகளை இயற்கை உணர்ந்து, இயைந்து ஒன்றித்துவிட்டதுபோல் அவர்கள் உணர்ந்தனர். அவர்கள் மகிழ்ந்தபோது இயற்கையும் துயரால் துவண்டது என்றனர். காதலரின் களிப்பைப் பெருகவிட்டது. அவர்களோடு ஒன்றிவிட்ட இயற்கை, காதலர்கள் வாடி வருந்தியபோதும் அந்த இயற்கையும் சேர்ந்து வாடியது. தனி இதயங்களின் துடிப்பைப் பரந்து விரிந்திருக்கும் புறவுலகம் புரிந்து கொண்டது போன்ற ஒருவகை அனுபவம் இந்த நிலையில் ஏற்படுகின்றது. இந்த அனுபவம் கைவரும் போது இயற்கையும் மனிதனும் இரண்டறக் கலந்திடும் ஒன்றிய நிலை ஏற்படுவதைக் காணலாம். சில வேளைகளில் தலைவி முதலானவர்களின் உணர்ச்சிகளை இயற்கையோடு இயைந்து விடுவதற்காக இயற்கைப் பொருள்களுக்கு உயிரும் உணர்வும் கொடுத்துப் பாடுவது உண்டு. இதுபோன்ற பாடல்களில் உள்ளத்து உணர்வின் ஆழமும், அதனோடு பிணைந்த நம்பிக்கையின் உறுதிப்பாடும் புலப்படும். மேலும் மனித உணர்வின் மறு பதிப்பாகவே இயற்கை வருணிக்கப்படுவது தமிழ் இலக்கியங்கியங்களில் உண்டு. அது போலவே குறிஞ்சிப்பாட்டில் இயற்கையோடு மனிதன் கொண்ட பண்பாட்டுப் பிணைப்புகளையும்இ இயற்கை நெறிகளொடு சோந்த தமிழர்ப் பண்பாட்டு வாழ்வியல் முறைகளும் இக்கட்டுரையில் தரப்படுகின்றன.

Continue Reading →

ஆண்டாளும் தமிழும்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


முன்னுரை

தமிழ்நாட்டின் அரசு முத்திரையாக விளங்கக்கூடியவை ஆண்டாள்கோவில் கோபுரம் ஆகும். இது வரலாற்று புகழ்பெற்ற ஒரு தலமாக விளக்குகிறது. இத்தலம் மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் நடுவில் அமைந்துள்ளது. சென்னை செங்கோட்டை இருப்பாதையில் இவ்வூரில் ஒரு புகைவண்டி நிலையம் அமைந்துள்ளது. வியாபாரத்தலமான இராஐபாளையத்திற்கும் புகழ்பெற்ற சங்கரநாராயணர் வீற்றிற்கும் சங்கரன் கோவிலுக்கும் நடுவில் அமைந்துள்ளது. இன்றும் என்றும் சித்தர்கள் உலவிவரும் சித்தர்மலை எனப் பெயர்பெற்ற சதுரகிரி மலைக்கு அருகில் இவ்வூர் அமைந்துள்ளது.

திருவில்லிபுத்தூர் உருவான வரலாறு

ஒரு சாபத்தின் காரணமாக வில்லி, புத்தன் என்ற இரு முனிவர்கள் வேடர்களாகப் பிறந்தனர். புத்தன் என்பவரை ஒரு நாள் ஒரு புலி அடித்துக் கொன்றுவிட்டது. புத்தனைத் தேடியலைந்த வில்லி ஆல மரங்கள் நிறைந்த இக்காட்டில் திருமால் சிலையொன்றையும் அருகில் புதையலையும் கண்டெடுத்தான். தங்கப் புதையலைக் கொண்டு ஒரு கோவில் கட்டி அதில் திருமாலை பிரதிஷ;டை செய்தான். காட்டைத் திருத்தி நகரினை உண்டாக்கினான். அதுவே புத்தன் பெயரில் புதுவை என்றும். அவனது பெயரில் வில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டது. மல்லி அறை அரசியார் ஆண்டு வந்த மல்லி நாடு இதுவாகும் இவ்வூரின் அருகில் ‘மல்லி’ என்ற சிற்றூர் உள்ளது. இதை மெய்ப்பிக்கிறது அங்கிருந்தபட பெருங்கோவிலே வடபத்ரசாயி திருக்கோவில் என்பர். வில்லி – கண்டெடுத்த திருமால் சிலை 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனலாம்.

Continue Reading →

சிலப்பதிகாரத்தில் மருதத்திணை

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?

– ‘உண்மை! உழைப்பு! வெற்றி!’ என்பதைத் தாரக மந்திரமாகக்கொண்டியங்கும் ‘தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி’யின் தமிழாய்வுத்துறையும் , ‘அனைவருடனும் அறிவினைப்பகிர்ந்து கொள்வோம்’ என்பதைத் தாரகமந்திரமாகக் கொண்டியங்கும் ‘பதிவுகள்’ பன்னாட்டு இணைய ஆய்விதழும் இணைந்து “தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப்பதிவுகள்” என்னும் தலைப்பில்  25.09.2019 அன்று நடத்திய  தேசியக்கருத்தரங்கில் சமர்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரைகள் ‘பதிவுகள்’ இணைய இதழில் தொடராகப்பிரசுரமாகும். கட்டுரைகளை அனுப்பியவர் முனைவர் வே.மணிகண்டன். பதிவுகள்


சங்க இலக்கியங்களில் காணப்படும் தொன்மைகளை காப்பியக்காலத்திற்கு கொண்டு செல்லும் பாலமாக சிலப்பதிகாரம் அமைகிறது. அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் மருதத்திணையின் முதற்பொருள் கருப்பொருளைப் பற்றிமட்டும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

மருதம் என்பதுவயலும் வயல் சார்ந்த இடமும்,வைகறைபொழுது மருதத்தின் சிறுபொழுது, தெய்வம் இந்திரன் எனவும்,வாழும் மக்கள் உழவர்,உழத்தியர், கடையர்,கடைசியர். இம்மக்கள் செந்நெல் அரிசி வெண்ணெல் அரிசிபோன்ற உணவுகளை உட்கொண்டனர். பறவைகள், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, குருகு,தாராஆகும். விலங்குகள் எருமைநீர்நாய் ஆகியனவாகும். பேரூர், மூதூர் என்னும் ஊர்களும் உள்ளன. பூக்கள் தாமரைப்பூ, குவளைப்பூ, கழுநீர்ப்பூ முதலியவையாகும். நெல்லரிகிணை பறை, மணமுழவுபறைகளும் மருதயாழ், மருதப்பண் போன்றவைகள் காணப்படுகின்றன. இந்நிலத்தில் வயற்களைக்கட்டல் நெல்லரிதல் போன்றதொழில்கள் முதன்மையானதாகும். மருதம் என்பதுவயலும் வயல் சார்ந்தபகுதியாகும்.

Continue Reading →