நண்பர்களின் இனிய கவனத்திற்கு,

1. மொழிவது சுகம்-ஆகஸ்டு 25 : அண்மையில் பார்த்த பிரெஞ்சுத் திரைப்படம் 2. மொரீஷியஸ் கண்ணகி சிறுகதை -மறு பிரசுரம் 3. எழுத்தாளன் முகவரி  (தொடர்)  http://nagarathinamkrishna.wordpress.com/4.…

Continue Reading →

வாழ்வியலில் இலக்கியமும் விஞ்ஞானமும்

நுணாவிலூர் கா. விசயரத்தினம் (இலண்டன்) -இலக்கியங்கள் எந்த மொழியில் எழுந்தாலும் அவற்றுள் சிலவற்றில் அறிவியல் சார்ந்த கருத்துச் செறிவுகள்; பற்றிப் படர்ந்திருப்பதை நாம் காணலாம். அன்று, நம்மில் அதிகமானோர் இவ்வாறான இலக்கியங்களை, இலக்கியக்கண்கொண்டு மாத்திரம் பார்த்ததினால், இலக்கிய நயத்தை மட்டும்தான் உள்வாங்கிக் கொண்டனர். அவற்றில் அமைந்த அறிவியல் அவர்களுக்கு அன்று புலப்படவில்லை. இன்றைய மக்களின் வாசிப்புப் பழக்கம் மாறுபட்டதனாலும், அறிவியல் ஆர்வம் கூடியதனாலும், அவர்கள் விஞ்ஞானத்தையும் இலக்கியத்தையும்  ஒரே தட்டில் வைத்து ஆய்வு செய்யப் பழகி வருகின்றனர். இதனால், விஞ்ஞானிகள் இலக்கியத்தில் செறிந்துள்ள அறிவியலைத் தங்கள் ஆய்வுகளுக்கு உட்படுத்திப் பல புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளைப் புரிந்து அரும் பெரும் சாதனைகளை நிலைநாட்டி வருகின்றனர். விஞ்ஞானிகளுக்கு ஆய்வின்பொழுது பலபல சந்தேகங்கள் எழுவது இயல்பு.  இவற்றை ஒவ்வொன்றாக நிவர்த்தி செய்யும் பொழுது ஆய்வின் தரம் உயர்நிலை அடைகின்றது. 

Continue Reading →

அப்புக்கல்லு தொல்லியல் அகழாய்வு

[இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான ‘அருங்கலைச் சொல் அகரமுதலி’ உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி]

இச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரிஅப்புக்கல்லு வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டுப் பகுதிக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அணைக்கட்டில் இருந்து 7 அயிர் மாத்திரி (kilo meter) தொலைவில் கிடக்கின்றது. இது சிறு குன்றுகளாலும், நெல்வயல்களாலும் அதோடு ஒரு கால்வாயாலும் சூழப்பட்டு உள்ளது. இது குன்றின் அடிவாரத்தே அமைந்த ஒரு செழிப்பான சிற்றூர். புதியகற்காலக் குடியேற்றங்கள் மலையைச் சுற்றிலும் இருந்தன.   புதிய கற்கால மக்கள் வழக்கமாக குன்றின் அடிவாரத்திலோ அல்லது குன்றுகளின் உச்சி மீதோ வாழ்ந்தனர். அவர்கள் தம் குடியிருப்பிடத்தை ஊன்றுவதற்காக குன்றின் உச்சியில் ஒரு இடத்தைத் தெரிவு செய்வர். இக்குன்றுகள் சரிவாகவும் கால்களால் ஏறத்தக்கனவாகவும் இருக்கும்.

Continue Reading →