வாசிப்பும் யோசிப்பும்! – 1

வாசிப்பும் யோசிப்பும்!அவ்வப்போது வாசிக்கும் விடயங்களின் யோசிப்பு, மற்றும் யோசிப்பு (நனவிடை தோய்தல்)  பற்றிய சிறு குறிப்புகளிவை.  எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘உயிர்மை’ மாத சஞ்சிகையில் ‘பறவைக்கோணம்’ என்றொரு பத்தி எழுதிவருகின்றார். இம்முறை (செப்டம்பர் 2012) உயிர்மை இதழில் வெளியான பத்தி ‘வல்லவன் ஒருவன் – பளிங்கினால் ஒரு மாளிகை’ என்னும் தலைப்பில் வெளிவந்திருந்தது. அதில் ராமகிருஷ்ணன் ‘பளிங்கினால் ஒரு மாளிகை’ பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தது என் கவனத்தைக் கவர்ந்தது.
அதிலவர் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: ‘பளிங்கினால் ஒரு மாளிகை. பருவத்தால் மணி மண்டபம் என்ற வல்லவன் ஒருவன் படப்பாட்டைப் பல ஆண்டு காலமாகத் திரும்பத்திரும்பக் கேட்டுக்கொண்டேயிருக்கிறேன். ஒவ்வொரு முறையும் இப்பாடல் தரும் அனுபவம் புத்துணர்வூட்டுவதாகவே இருக்கிறது.’ ஒரு பாடல் எவ்விதம் கேட்பவரைப் பொறுத்து வித்தியாசமான விளைவுகளை எற்படுத்துகிறதென்பதற்கு ராமகிருஷ்ணனின் மேற்படி பாடலைப் பற்றிய கருத்துகள் எடுத்துக்காட்டு.

Continue Reading →

இர. சிவலிங்கத்தின் தமிழகச் ‘சிறைக்குறிப்புகள்’

இர.சிவலிங்கம்[தனது முகநூல் பக்கத்தில் ‘பாலன் தோழர்’ மலையக விடுதலைக்காகச் செயற்பட்டவரான இர.சிவலிங்கத்தின் தமிழகத் தடுப்பு முகாம் அனுபவங்களை விபரிக்கும் ‘சிறைக்குறிப்புகள்’ நூலினைப் பதிவு செய்திருந்தார். அதனை நாமும் ‘பதிவுகள்’ வாசகர்களுக்க்காக இங்கு பதிவு செய்கின்றோம். – பதிவுகள்-]

இலங்கை மலையகத்தைச் சேர்ந்த இர.சிவலிங்கம் என்பவர் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டார். அங்கு தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து “சிறைக் குறிப்புகள்” என்னும் தலைப்பில் அவர் எழுதியுள்ளார். அவற்றை இங்கு பதிவு செய்ய உள்ளேன்….அவர் பற்றி மு.நித்தியானந்தன் அவர்கள் எழுதிய முன்னுரையில் இருந்து சில பகுதிகள் கீழே தரப்ட்டுள்ளது. ‘அடிமை இருளில் சிக்கியிருந்த மலையக சமுதாயத்தின் விடுதலைக்காக ஓயாது சிந்தித்துச் செயற்பட்ட பெருமகன் இர.சிவலிங்கம். இருண்ட வரலாற்றின் விளைபொருளாயும் அதே நேரத்தில் அச் சமுதாய மாற்றத்தின் நெம்புகோலாகவும் திகழ்ந்த அறிஞர் அவர்.  நூற்றாண்டுகளாய் அடிமைப்பட்டிருந்த மலையகத்தின் சமூக வாழ்வில் அறுபதுகளில் ஒரு அசிரியனின் குரல் அட்டனிலிருந்து எழுந்தது. வெங்கொடுமைச் சாக்காட்டில் வீழ்ந்து பட்ட சமூகத்தின் துயரத்தையெல்லாம் சுமந்த ஒரு குரல். ஆண்டாண்டு காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூகத்தின் மனட்சாட்சியின் குரல். பரிகசிக்கப்பட்டு இழிந்துரைக்கப்பட்ட தனது சமுதாயத்தின் மேன்மையைப் பாடுவேன் என்று உறுதி பூண்ட குரல். அடிப்படை உரிமைகள் அனைத்துமே மறுதலிக்கப்பட்ட ஒரு சமூகக் கூட்டத்தின் விலங்குகளை ஒடிக்க முனைந்த வீராவேசக் குரல்.

Continue Reading →