NEWS RELEASE : An Immigration System That Works For Canada’s Economy Moving to a Fast, Flexible Just-in-Time Immigration System

An Immigration System That Works For Canada’s Economy Moving to a Fast, Flexible Just-in-Time Immigration SystemToronto, November 2, 2012 — Today, Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney announced that by the end of 2013, Canada’s immigration system will be transformed from one that was plagued by backlogs into one that is fast, flexible, and responsive to the labour market. Citizenship and Immigration Canada (CIC) announced today it will admit up to 55,300 persons in the Federal Skilled Worker (FSW) category in 2013. Combined with previous actions taken to manage the backlog, this means by the end of 2013 we will be able to process new applications as they are received – a “just in time” system – and aim to process them in less than a year, instead of up to eight years under the old FSW program. In addition, CIC expects to clear the FSW applications received to date by the end of 2014, three years earlier than originally expected.  This will allow for the introduction of an Expression of Interest (EOI) system to be put in place for FSW and possibly other economic immigration streams.  CIC is moving to a just-in-time system that recruits people with the right skills to meet Canada’s labour market needs, fast tracks their applications, and gets them working in a period of months, instead of years.

Continue Reading →

விகடன்.காம்: “நேற்று… நான் விடுதலைப் போராளி! இன்று… பாலியல் தொழிலாளி.” ஒரு பெண் புலியின் வாக்குமூலம் இது ஒர் உண்மைக் கதை

இந்த நேர்காணல் முன்னாள் பெண் போராளிகள் சரணடைந்த நிலையில் அனுபவித்த பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்துவதாலும், அவர்களது சிலரின் இன்றைய நிலையினை வெளிப்படுத்துவதாலும் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.[விகடனில் வெளிவந்த இந்த நேர்காணல் முன்னாள் பெண் போராளிகள் சரணடைந்த நிலையில் அனுபவித்த பாலியல் வன்முறைகளை வெளிப்படுத்துவதாலும், அவர்களது சிலரின் இன்றைய நிலையினை வெளிப்படுத்துவதாலும் ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது.. – பதிவுகள்

வித்யா ராணி… 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ‘ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ‘சோதியா படையணி’யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற…வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி… கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.

Continue Reading →

சிங்கப்பூர்: தமிழிலக்கியத்தில் ஜே.எம்.சாலி

சிங்கப்பூர்: தமிழிலக்கியத்தில் ஜே.எம்.சாலி

வாழ்க்கையிலிருந்து மட்டுமே இலக்கியம் பிறக்கிறது, என தீவிரமாக நம்பிய காலகட்டத்தில் எனக்கு அறிமுகமானவர் திரு.ஜே.எம்.சாலி அவர்கள். இவரைப்பற்றி  ஒரு கட்டுரை வேண்டுமென்று   அழைத்துக்கேட்டபோது,  நேரமில்லாத நெருக்கடியில், திணறத்திணற நான் ஒரு மலையாள ஆய்வுக்கட்டுரையில் மூழ்கியிருந்த நேரம்,என்பதை எப்படிச்சொல்வது என்று தெரியவில்லை. அதைவிட குடும்ப சகிதம் இன்னும் ஒருவாரத்தில் லண்டனுக்குப் போகும் பயண அவசரம் வேறு. முடியாது என்றே சொல்லிவிடலாமா என்று கூட நினைத்தேன். ஆனால் யோசித்துப்பார்த்தபோது, பொறி தட்டிய ஒரு வசனம்—-. சாலி சாரைப்பற்றி   எழுதாமல் வேறு யாரைப்பற்றி தான் எழுதுவது? அவ்வளவுதான், அனைத்து வேலைகளையும் தூக்கி எறிந்துவிட்டு, கணிணிக்கு முன்னால் அமர்ந்தபோது , சாலி அண்ணன் அவர்களின் எழுத்துப்படிவங்கள் தான் கண்முன்னே விரிந்து நின்றன.

Continue Reading →

லெ. முருகபூபதி – மறக்க முடியாதவர்களின் இருப்பிடம்!

எழுத்தாளர் முருகபூபதிஅநேகமாக கவனத்தைக் கோருவதும் குவிப்பதும் விலகல்களும்  வேறுபடல்களும் ஆச்சரியங்களுமே. குறிப்பாக எழுத்தாளர்கள் இந்த வகை விலகல்களாகவும் ஆச்சரியங்களாகவும் இருப்பதுண்டு. அதனால் அவர்கள் கவனத்தைக் குவிப்பவர்களாகவும் அவர்களால் பல மையங்கள் கவனத்துக்குரியனவாகவும் அமைகின்றன. கவனத்தைக் குவிக்கும் விலகல்களில் ஒருவராக லெ. முருகபூபதியும் இருக்கிறார். அவருடைய இலக்கியப் பங்களிப்பு, எழுத்து என்பவற்றுக்கு அப்பால், இலக்கியத்தின் வழியாக அவர் கொண்டிருக்கும் அக்கறைகளும் செயற்பாடுகளும் இந்த விலகலை அடர்த்தியாக்குகின்றன. எனவேதான் முருகபூபதி கூடிய கவனத்தைப் பெறுகிறார். தன்னுடைய அக்கறைகளுக்காகவும் பங்களிப்புக்காகவும் முருகபூபதி இயங்குகின்ற வேகமும் நுட்பமும் அசாதாரணமானது. துடிப்பும் ஒருங்கு குவிந்த கவனமும் அவரையும் அவருடைய செயற்பாடுகளையும் முன்னகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதனால் அவர் சோர்வின்றி உழைக்கிறார். எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார். பிறரையும் இயக்குகிறார். பிறரும் இயங்கத்தூண்டுகிறார். இதில் பெரும்பாலானவை பொதுப்பணிகள். உதவிப்பணிகள். ஊக்கப்பணிகள். மறு பக்கத்தில் “எழுதுங்கள் – செயற்படுங்கள்“ என்று ஊக்கப்படுத்தும் காரியங்கள்.

Continue Reading →