அகஸ்தியரின் ‘மானுட தரிசனங்கள்’ நூலிலிருந்து…

அகஸ்தியரின் 'மானுட தரிசனங்கள் [எஸ் அகஸ்தியர் அவர்களின் நினைவையொட்டி (29.08.1926  — 08.12.1995)  அவரது ‘மானிட தரிசனங்கள்’ என்ற விவரணச் சித்திரத்திலிருந்து தரிசனம் 23 ஐத் தருகின்றோம். ‘பதிவுகள்’ இதழுக்கு அனுப்பியவர் அவரது மகள்: நவஜோதி யோகரட்ணம் – பதிவுகள் ]

      லெக்ஷனெண்டா தமிழருக்க தமிழர்தான் போட்டியெண்டில்லை.
      அந்த நசல் வந்து முடிஞ்சாலும் தமிழருக்கு, ‘நான்  
      உயர்ந்தவன்,  நீதாழ்ந்தவ’னெண்ட போட்டி பொறாமை   
      பெருமைதான் முதிசச்  சொத்து. வீண் பெருமை பேசி
      அநியாயமாக அழியிறதுக்கும் பந்தயம் கட்டுவினம்.
      இவேதான், தமிழர் ஒற்றுமையா இருக்கவேணு’மெண்டு சும்மா
      ஓயாமல் கத்துறது. இந்தப் புலுடா சிங்களச் சனத்துக்கும்
      வடிவாத் தெரியும்.
    
யாழ்ப்பாண நகரசபைக் கோபுர முகப்பு வாசலை மருவிய வெட்டை மைதானம் சன நெருக்கடிக்குள் திமிலோகப்பட்டது. வட மாகாணக் கனதனவான்கள், அப்புக்காத்து புரக்கிராசியார், பேர்போன டாக்குத்தர்மாரும், நொத்தாரிஸ், உடையார், மணியம், விதானைமாரும், இந்திய ஆமை வாய்க்குள் அபின் திணித்துக் கடத்தல் வியாபாரம் செய்கிற பெரும் புள்ளிகள், நகைக் கடைக்காறர்கள், சம்மாட்டிமார், கத்தோலிக்கச் சுவாமிமார் என்று தங்கள் தங்கள் சீவியத்துக்காகத் தவம் செய்ய வந்தவர்களாட்டம் மேடையைச் சூழ்ந்து ஓர் அரண்மனை ஏவலாளர்கள்போல் புட்டுவங்களில் வீற்றிருந்தனர்.

Continue Reading →

(105) – நினைவுகளின் சுவட்டில்

- வெங்கட் சாமிநாதன் -கொஞ்ச நாட்கள் கழிந்தன. எந்த இடத்திலிருந்தாவது ஏதும் ஆர்டர் வருமா என்று காத்திருப்பு. இன்னும் wanted column-ல் ஏதும் எனக்கு ஏற்ற விளம்பரங்கள் வருமா என்ற காத்திருப்பு. ஒரு மாதம் இரண்டு மாதங்கள் கழிந்திருக்கும். முதலில் வந்தது Northern Railway-யிலிருந்து. எனக்கு வேலை கிடைத்துவிட்டது. சந்தோஷமாக இருந்தது. முதல் தடவையாக நானே முயன்று பெற்ற வேலை அல்லவா? இங்கு யாரும் ராஜாவோ, செல்ல ஸ்வாமியோ சொல்லி ஒரு முரளீதர் மல்ஹோத்ரா கருணை மனம் கொண்டு, ”boys service-ல் எடுத்துக்கொள்,” என்று தனிச் சலுகை காட்டிப் பெறவில்லையே. எத்தனையோ பேருடன் போட்டி போட்டல்லவா கிடைத்திருக்கிறது. அந்த சமயத்தில் அந்த சந்தோஷம் தகுதியில் பெற்றதாகத்தான் தோன்றியது. எல்லோரிடமும் சொல்லிச் சந்தோஷப்பட்டேன். அவர்களுக்கும் சந்தோஷம் தான். ஆனால், ”இன்னம் பொறு. மூன்று இடங் களுக்குப் போய் வந்திருக்கிறாயே, அவை என்ன ஆகிறது என்று பார்க்கலாம்,” என்று மிருணாலும், என் செக்‌ஷன் அதிகாரி தேஷ் ராஜ் பூரியும் சொல்லவே, அது சரியாகத்தான் பட்டது. இரண்டாவது நான் வேலைக்குச் சேர பிக்கானீர் போகவேண்டும். பாலைவனம். வெயில் வறுத்து எடுக்கும். இங்கேயே ஆறு வருடங்கள் அஸ்பெஸ்டாஸ் ஷீட் போட்ட கூரையில் காய்ந்து வரண்டாயிற்று. பிக்கானீர் போவதா என்ற தயக்கம் ஒரு மூலையில் எட்டிப் பார்த்தது. இங்காவது ஆறு வருடங்களோடு போயிற்று. பிக்கானீர் போனால் ஆயுள் முழுக்க அல்லவா கஷ்டப் படவேண்டும். இந்த நினைப்பு மற்ற இடங்களிலிருந்து என்ன வருகிறது என்று பார்க்கலாம் என்று ஆலோசனை சொன்னதால் வந்ததா இல்லை, பிக்கானீர் பாலைவன தகிப்பின் காரணமாக மற்றவர்கள் சொன்ன ஆலோசனைப்படி காத்திருக்கத் தீர்மானித்தேனா தெரியவில்லை. இரண்டுமே இருக்கலாம்.

Continue Reading →

லண்டனில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

லண்டனில் ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்நவஜோதி ஜோகரட்னம் - லண்டன்.லண்டன் மேடைகள் கடந்த சில மாதங்களாக பரதநாட்டியம், பாட்டு, மிதங்கம், வயலின், வீணை, புல்லாங்குழல் என்று களை கட்டி கலைப் பூரிப்புடன் பிரகாசித்துக் கொண்டிருந்தன. ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளான சர்ப்பதனா நாகேஷ்வரன், சஜந்தனா நாகேஷ்வரன் சகோரதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் லண்டன் வெயர் வில்ட் மண்டபத்தில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. ‘புஷ்பாஞ்சலி,  விநாயகர் ஸ்துதி, அலாரிப்பு, ஜதிஸ்வரம், வர்ணம், கணபதி தலாட்டு, கீர்த்தனம், சிவ தாண்டவம், தில்லானா என்ற ஒழுங்கில் விறுவிறுப்பு, கவர்ச்சி, கர்ச்சிதம் நிறைந்த நடன உருப்படிகளோடு பார்வையாளர்களை கட்டி வைத்த பெருமை ஸ்ரீமதி விநோதினி பரதனின் மாணவிகளான சர்ப்பதனா நாகேஷ்வரன், சஜந்தனா நாகேஷ்வரன் சகோதரிகளை பெருமையாக நோக்க வைக்கிறது என்று பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த London  Oriental Examination Board இன் Director கானபூஷணம் ஸ்ரீமதி அம்பிகா தாமோதரம் அவர்கள் தெரிவித்திருந்தார். திறமையான பக்கவாத்தியக் கஞைர்களாhல் அரங்கு சிறப்படைந்திருந்ததையும் மேலும் அவர் பாராட்டியிருந்தார்.

Continue Reading →

உயிரின் வாசம் – “பெயரிடாத நட்சத்திரங்கள்”

போர்ப்பகைப்புலத்தில் இருந்த பெண்கவிஞைகளின் வரிகளாக உயிரின் வாசத்தோடும், உணர்வு கொப்பளிக்கும் வார்த்தைகளோடும் வந்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்களின் கவிதைகள்.  பெண் படைப்புக்களுக்கு இருக்கக்கூடிய தனித்துவத்தோடு எளிய மாந்தர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான வார்த்தைகளோடு தாய்மையுணர்வுமுதல் தாயகநேசிப்பு வரையான கவிதைகளைக் கொண்டிருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள்.  சு. குணேஸ்வரன் போர்ப்பகைப்புலத்தில் இருந்த பெண்கவிஞைகளின் வரிகளாக உயிரின் வாசத்தோடும், உணர்வு கொப்பளிக்கும் வார்த்தைகளோடும் வந்திருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்களின் கவிதைகள்.  பெண் படைப்புக்களுக்கு இருக்கக்கூடிய தனித்துவத்தோடு எளிய மாந்தர்களும் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையான வார்த்தைகளோடு தாய்மையுணர்வுமுதல் தாயகநேசிப்பு வரையான கவிதைகளைக் கொண்டிருக்கிறது பெயரிடாத நட்சத்திரங்கள்.  ஊடறுவும் விடியல் பதிப்பகமும் இணைந்து வெளியிட்டுள்ள இத்தொகுப்பில் 26 கவிஞைகளின் 70 கவிதைகள் உள்ளன. அதிகமும் அறியப்பட்ட கவிஞைகளான அம்புலி, ஆதிலட்சுமி, கஸ்தூரி, வானதி, பாரதி ஆகியோருடன் அலையிசை, மலைமகள், தூயவள், நாமகள், சூரியநிலா, சுதாமதி, தமிழவள் ஆகிய ஒவ்வொருவரினதும் மூன்றுக்கு மேற்பட்ட கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. மேலும்; காந்தா, ஜெயா, கலைமகள், கனிமொழி, ஞானமதி, புரட்சிகா, கிருபா, நகுலா, நாதினி, பிரேமினி, பிரமிளா, ரூபி மார்க்கட், சிரஞ்சீவி, தயாமதி ஆகியோரின் ஒவ்வொரு கவிதைகளைக் கொண்டதாகவும் தொகுப்பு உள்ளது.

Continue Reading →

மீள்பிரசுரம்: யாழ் – மாணவர்களுக்கு சார்பாக தொடரும் சிங்கள சகோதரர்களின் போராட்டங்கள் யாழ் – மாணவர்களுக்கு சார்பாக தொடரும் சிங்கள சகோதரர்களின் போராட்டங்கள்

 இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும்  நடைபெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். மேலும், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைக் காலவரையறையின்றித் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. – சனிக்கிழமை 01, டிசம்பர் 2012 – இலங்கை அரச படைகளின் அடவாடித்தனங்களும், மாணவர் தலைவர்களை கைது செய்வதும் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும்  நடைபெறுகிறது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழகத்திலும் விடுதிகளிலும் பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாகக் கூறியே இம்மாணவர்கள் வெளியேறி வருகின்றனர். மேலும், யாழ். பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளில் பெரும்பாலானோர் அங்கிருந்து வெளியேறி விட்டதாகவும் ஆண்கள் விடுதியைச் சேர்ந்த மாணவர்களும் தற்போது வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன் பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்ற சம்பாவிதங்களை அடுத்து, மாணவர்களால் அறிவிக்கப்பட்டிருந்த வகுப்பு பகிஷ்கரிப்பைக் காலவரையறையின்றித் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Continue Reading →

NEWS RELEASE :Making Canada’s Asylum System Faster and Fairer! New Asylum System Comes into Force December 15, 2012!

Making Canada’s Asylum System Faster and Fairer New Asylum System Comes into Force December 15, 2012Ottawa, November 30, 2012 — Canada’s new asylum system, which was included in the Protecting Canada’s Immigration System Act, will come into force on December 15, 2012, Citizenship, Immigration and Multiculturalism Minister Jason Kenney announced today.  “Our changes will make Canada’s asylum system faster and fairer,” said Minister Kenney. “For too long, Canada’s generous asylum system has been vulnerable to abuse.  Under the new asylum system, genuine refugees fleeing persecution will receive protection more quickly.  At the same time, bogus asylum claimants and those who abuse our generous system at great expense to taxpayers, will be removed much faster.”  All eligible asylum claimants will continue to receive a hearing at the independent Immigration and Refugee Board of Canada (IRB) based on their individual circumstances. Under the new system, asylum claimants will receive a hearing within 60 days after their claim is referred to the IRB. In contrast, claimants currently wait, on average, close to 600 days to receive a hearing. 

Continue Reading →