சிறுகதை: எழுச்சி

“வெள்ளம் ஏறிடுச்சாம்…..! வெள்ளம் ஏறிடுச்சாம்……!”

“வெள்ளம்…….எங்க  ஏறிடுச்சு?  விவரமா……..சொல்லு மணியம்….!”

“வேற எங்க ஜீவா ….! நம்ம…… தமிழ்ப்பள்ளியிலதான்…..வெள்ளம் ஏறிடுச்சாம்….!”

“ நேத்துப் பேஞ்ச செம மழைல…….வெள்ளம் ஏறாம இருக்குமா…..?”

-  வே.ம.அருச்சுணன் – மலேசியா தாழ்வு பகுதியிலே அமைந்திருந்த அப்பள்ளி மழைக்காலங்களில் வகுப்பறைகளில் தண்ணீர் ஏறிவிடுவது வழக்கமான ஒன்றுதான்.கடந்த இருபது வருடங்களாக அப்பள்ளி வெள்ளப் பிரச்னையால் நொந்து நூலாகிப் போனது! பள்ளியின் முன்னாள்  மாணவர் சங்கத்தலைவர் மணியமும் செயலாளர் ஜீவாவும் பள்ளிக்கு விரைகின்றனர். இவர்களுக்கு முன்னதாகவே தலைமையாசிரியர் இராமநாதன்,தன் அலுவலகத்தில் ஏறிப்போயிருந்த வெள்ள நீரை ‘பிளாஸ்டிக்’  வாளியில்  அள்ளி  வெளியில் ஊற்றிக்கொண்டு இருந்தார். பள்ளி  ஆசிரியர்கள் சிலரும் அவருக்கு உதவுகின்றனர். பள்ளிப் பணியாளர்கள்  மற்ற வகுப்புகளில்  ஏறிப்போயிருந்த நீரைச்  சிரமப்பட்டு இறைத்துக் கொண்டிருந்தனர்! பல மணி நேர போராட்டத்தின் எதிரொலியை களைத்துப்போன  அவர்களின் முகங்கள் தெளிவுபடுத்திக்கொண்டிருந்தன!
        

Continue Reading →

அசோகனின் வைத்தியசாலை (10 , 11, 12 & 13)

அத்தியாயம் 10

நோயல் நடேசன்சுந்தரம்பிள்ளைக்கு தொடர்ச்சியாக இரண்டு பகல் வேலை செய்துவிட்டு அதன் பின் தொடர்ந்து இரவு வேலை செய்ததால் ஏற்பட்ட சோர்வு, அதன் பின்பாக இரண்டு நாட்கள் கிடைத்த ஓய்வின் பின்னர் நீங்கியதோடு புத்துணர்வை அளித்தது. வேலை இடத்தில் வேலை செய்பபவர்களை மனத்திற்கு பிடித்துக் கொண்டுவிட்டதும் அதற்கு ஒரு காரணமாக இருந்தது.  காலையில் வழக்கம் போல் வோட் றவுண்ட் செய்ய வேண்டியதாக இருந்தது. சாமுடன் தீவிர சிகீச்சை பிரிவுக்கு சென்ற போது அங்கேயுள்ள கூட்டில் பக்கவாட்டில் படுத்தபடியே ஆவுஸ்திரேலியாவில் மாட்டுப் பண்ணைகளில் வேலை செய்யும் ஒரு ஆண் நாய் படுத்து கிடந்தது. அது சுந்தரம்பிள்ளை சாமுடன் உள்ளே வந்ததால் ஏற்பட்ட கதவின் ஓசை கேட்டு தலையைத் திருப்பி பார்த்தது. அதன் கண்களில் வரவேற்பு உணர்வு தெரியாத போதும் வெறுப்பு தெரியவில்லை. பெரிய மருத்துவ ஆஸ்பத்திரிகளில் கான்சர் என்ற குணமடையாத நோய் பீடித்தவர்கள் இருக்கும் வாட்டின் பக்கம் போய் நாம் பார்க்க போனவரை பார்த்து விட்டு மற்றவர்களைப் பார்த்தால், அவர்கள் கண்களில் எதையும் பொருட்படுத்தாத ஏகாந்தமான தன்மை தெரிவதை அவதானிக்க முடியும். நாங்கள் எப்படியும் சில நாட்களில் இறக்கப்போகிறோம். இந்த மனிதனின் அறிமுகம் நமக்கு தேவையற்றது என்ற உணர்வு அவர்கள் கண்களில் தெரியும். அதே மாதிரியான உணர்வைத்தான் சுந்தரம்பிள்ளையால் அந்த நாயின் கண்களில் உணரமுடிந்தது. வந்தவர்களை அடையாளம் கண்டுகொண்டேன் என நினைத்து விட்டு கூண்டின் உட்பக்கம் மீண்டும் தலையை திருப்பிக் கொண்டது .

Continue Reading →