பிரெஞ்சு நாவல்: காதலன் (4, 5, 6, 7, 8 & 9)

காதலன் – 4

- மார்கெரித் த்யூரா; தமிழில -  நாகரத்தினம் கிருஷ்ணா -நாகரத்தினம் கிருஷ்ணாஎனது இளைய சகோதரன் 1942ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறந்திருந்தான். 1932ம் ஆண்டிலிருந்து 1949ம் ஆண்டுவரை சைகோனில் இருப்பதென்பது பெண்மணியின் திட்டம். இளைய சகோதரின் இறப்பு அவள் வாழ்க்கையை முடக்கிவிட்டது. அவள் வார்த்தையில் சொல்வதென்றால், ‘வீடு, வீட்டை விட்டால் இளைய சகோதரனின் கல்லறை,’ முடிந்தது. பிறகு ஒருவழியாக பிரான்சுக்குத் திரும்பினாள். நாங்கள் இருவரும் திரும்பவும் சந்தித்தபோது என் மகனுக்கு இரண்டுவயது. இச்சந்திப்பு கூட காலம் கடந்ததே. அவளது மூத்த மகனைத் தவிர்த்து, எங்களை இணைக்க வேறு விஷயங்கள் இல்லை என்பதால், எங்கள் சந்திப்பு அர்த்தமற்றது என்பதைப் பார்த்த்வுடனேயே புரிந்துகொண்டோம். ‘லுவார்-எ-ஷேர்'(Loire-et-Cher) என்ற இடத்தில் பதினான்காம் லூயிகாலத்து அரண்மனை மாதிரியான ஓர் இடத்தைப் பிடித்து தன் வாழ்நாளின் எஞ்சிய நாட்களை அங்கே கழிப்பதென்று, வேலைக்காரி ‘தோ’வுடன் குடியேறினாள். .அங்கும் இரவென்றால் அவளுக்குப் பயம், வேட்டைக்கான துப்பாக்கியொன்றை விலைகொடுத்துவாங்கி பாதுகாப்புக்கு வைத்துக்கொண்டாள். மேல்மாடியிலிருந்த மச்சுகளில் ‘தோ’ காவல் இருந்தாள். தனது மூத்த மகனுக்கு ஆம்புவாஸ்(Amboise) அருகே சொத்தொன்று வாங்கினாள். அங்கு சுற்றிலும் ஏறாளமாய் மரங்கள். ஆட்களை ஏற்பாடுசெய்து மரங்கள் முழுவதையும் வெட்டிச் சாய்த்தான். பாரீஸில் இருந்த பக்காரா சூதாட்டவிடுதிக்குச் சென்றான். ஒர் இரவிலேயே மரத்தை விற்றுச் சம்பாதித்த பணம் அத்தனையும் தொலைந்தது. கணத்தில் நினைவுகள் வேறுதிசைக்கு பயணிக்க, எனது விழிகள் கண்ணீரில் மிதக்கின்றன, அக்கண்ணீருக்கு மூலம் எனது சகோதரனாக இருக்கலாம். மரங்களையும், அதற்குண்டான பணத்தினையும் இழந்தபிறகு நடந்த சம்பவம் நினைவில் இருக்கிறது. ‘மோன் பர்னாஸில்'(Montparnasse) லா கூப்போல்(La Coupole)1 எதிரே, மோட்டார் வாகனத்திற்குள் அவன் படுத்துக்கிடந்தாய் நினைவு. அதுத் தொடர்பாக வேறு எதையும் நினைவுபடுத்த இயலவில்லை. பணத்தை எப்படிச் சம்பாதிப்பது என்பதை அறிந்திராத ஐம்பது வயது குழந்தையான மூத்தமகனுக்கென்று, அவ்வளவு பெரிய கோட்டையை வைத்துக்கொண்டு அவள் செய்த காரியங்கள் கற்பனைக்கு எட்டாதது. கோழிக்குஞ்சுகள் பொறிக்கவென்று எந்திரங்கள் வாங்கினாள், கீழே இருந்த பெருங்கூடமொன்றில் அவற்றைப் பொருத்தினாள். திடுமென்று, அருநூறு குஞ்சுகள், நாற்பது மீட்டர் பரப்பளவுகெண்ட கூடம் கோழிக்குஞ்சுகளால் நிறைந்தன. எந்திரத்தின் வெப்ப அளவை எவ்வாறு கையாளுவது என்பதை அறியாததால் குஞ்சுகளின் அலகுகள் பொருத்தமின்றி இருந்தன, அவைகளை மூட இயலாலாமல் குஞ்சுகள் தவித்தன, பசியில் வாடின. கோழிக்குஞ்சுகள் பொறிக்க இருந்த நிலையில் கோட்டைக்குச் சென்ற ஞாபகம், அதன்பிறகு செத்துக்கிடந்த குஞ்சுகளும், அவற்றுக்கான தீனியும், கெட்டு துர்நாற்றமெடுத்தபோது அங்கு மறுபடியும்போயிருக்கிறேன், வாந்தி எடுக்காமல் அப்பொழுது சாப்பிட்டதில்லை.

Continue Reading →

தொடர் நாவல்: வேர் மறந்த தளிர்கள் (8, 9 & 10)

8.   சித்தப்பா
 
வே.ம.அருச்சுணன் – மலேசியாநான் பிறந்த சிலாங்கூர் மாநிலம் சிறப்பான மாநிலம் என்பார்.அதைக் கேட்டு மகிந்து போவேன்! கிள்ளானில் பிறந்ததற்காகப் பெருமையும் அடைவேன்.கிள்ளான் அரசர் வாழும் ‘அரச நகரம்’ .அந்தகைய நகரில் நான் வாழ்வது எனக்குப் பெருமை அல்லவா….! மலேசியாவில், சிலாங்கூர் மாநிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்றால் அது மிகையில்லை! காப்பார் பட்டணத்தில்தான் மலேசியாவிலேயே அதிகமாக தமிழர்கள் வாழும் இடம் என்ற தகவலையும் சித்தப்பா கூறக்கேட்டிருக்கிறேன். பொதுத்தேர்தலில் காப்பார் தொகுதியில் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகப் போட்டியிட்டாலும் கண்டிப்பாக ஒரு தமிழர்தாம் போட்டிப்போடுவது வழக்கமாகும்! அப்படியொரு பாரம்பரியம் அங்கே எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்து வருகிறது.  அறுபதாம் ஆண்டுகளில்,ஆளும் பாரிசான் கட்சியைச் சேர்ந்த ‘தொழிலாளர் அமைச்சர்’ டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தொடங்கி இன்றைய ‘மக்கள் கூட்டணி’ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக வீற்றிருக்கும் மாணிக்கவாசகம் வரையில் அதுவே இன்றுவரை நடைமுறையாகும்!

Continue Reading →

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!

சிங்களக் குடியேற்றங்களால் விழுங்கப்பட்டு வரும் தமிழீழ மண்! வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றம்! தலைக்கு மேல் வெள்ளம்!  -  நக்கீரன் -ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்பது போல திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்துக்கு எதிராக தமிழர் தரப்பு காட்டுகிற எதிர்ப்பைப் பற்றிக் கிஞ்சித்தும் சிங்கள – பவுத்த பேரினவாத அரசு மனதில் கொள்ளாது மேலும் மேலும் சிங்களக் குடியேற்றத்தைத் துரிதகெதியில் முடுக்கி வருகிறது. முன்னைய காலத்தில் சிங்களக் குடியேற்றம் காதும் காதும் வைத்தாற் போல் ஓசைப்படாமல் மேற்கொள்ளப்பட்டது. அதுவும் பெரும்பாலும் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் சிங்களக் குடியேற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று அது தலை கீழ் மாற்றம் பெற்றுள்ளது. இன்று சிங்கள – பவுத்த பேரினவாத அரசு  பகிரங்கமாக அறிவித்துவிட்டு தமிழர்களுக்குச் சொந்தமான நிலத்தில் சிங்களக் குடும்பங்களைக் குடியேற்றி வருகிறது. கேட்டால் அவர்கள் போர் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று சொல்கிறது. இரண்டு நாள்களுக்கு முன் செய்தி ஏடுகளில் வெளிவந்த செய்தியின் படி வடக்கில் 18,000 சிங்களக் குடும்பங்களைக் குடியேற்ற அரசு முடிவு செய்து அதற்கான ஆயத்தங்கள் செய்யப்படுகிறதாம். வரும் யூன் மாதத்திற்கு முன்னர் வடக்கில் 18 ஆயிரம் சிங்கள குடும்பங்களைக் குடியேற்றத் திட்டம்! என்ற தலைப்பிட்டு வெளிவந்திருக்கும் அந்தச் செய்தியின் படி வட மாகாணத்தில் எதிர்வரும் யூன் மாதத்திற்கு முன்னர் 18 ஆயிரம் தென்பகுதி சிங்களக் குடும்பங்களை குடியமர்த்தவும் அவர்களுக்கு பிரத்தியேகமாக நிரந்தர வீடுகளையும் காணிகளையும் வழங்கவும் சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பான சிறப்புக் கலந்துரையால் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

Continue Reading →

மலேசியா: மிட் லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 14-ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம்

சங்கத்தின் தலைவர் உயர்திரு.வே.ம.அருச்சுணன் அவர்களின் தலைமையில் சங்கத்தின் 14 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டம் 21.4.2013 ஆம் நாள் காலை 9.00 மணியளவில் பள்ளிச் சிற்றுண்டிச்சாலையில் நடைபெறவிருக்கிறது. ‘நியாட்’…

Continue Reading →

அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ஆவணப்பட திரையிடல் & கலந்துரையாடல்.

அரங்கநாதனும் கொஞ்சம் கவிதைகளும் ஆவணப்பட திரையிடல் & கலந்துரையாடல்.

நாள்: 21-04-2013, ஞாயிற்றுக் கிழமை
இடம்: பவள விழா அரங்கம், மெரினா கேம்பஸ், சென்னை பல்கலைக் கழகம், வள்ளுவர் சிலை எதிரில்
நேரம்: மாலை 5 மணிக்கு.

நண்பர்களே ஞாயிற்றுக் கிழமையை (21-07-2013) மறந்துவிடாதீர்கள். ஞாயிற்றுக் கிழமை மாலை ஜாலியாக மெரினா பக்கம் குடும்பத்தோடு வந்து, கடற்கரையில் கொஞ்சம் நேரம் கழித்துவிட்டு, அப்படியே இந்த நிகழ்விற்கு வந்து விடுங்கள். மா. அரங்கநாதன் தமிழின் முக்கியமான எழுத்தாளர். அவரோடு நேரிடையாக கலந்துரையாடும் வாய்ப்பை தவற விடாதீர்கள். நண்பர்களுக்காகவே, அவர் புதுவையில் இருந்து வரவிருக்கிறார். இந்த ஆவணப்படத்தின் இயக்குனர் ரவிசுப்ரமணியன்.

Continue Reading →