நிறைவாக நடந்த ஒரு நிறைவு விழா

நிறைவாக நடந்த ஒரு நிறைவு விழா

கனடா – தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20 வது நிறைவு விழாவும் மலர் வெளியீடும் ரொறன்ரோவில் உள்ள பெரிய சிவன் கோவிலில் தலைவர் சின்னையா சிவநேசனின் தலைமையில், ஏப்ரல் மாதம் 28ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அரங்கு நிறைந்த விழாவாக சிறப்பாக நிகழ்ந்தேறியது. தமிழ் வாழ்த்து, கனடாக் கீதம் என்பவற்றைத் தொடர்ந்து திவ்வியராஜனின் கணீரென்ற குரலில் வந்த பேசாப் பொருளை என்ற பாரதியாரின் பாடலுக்கு கலாய நடனப்பள்ளி மாணவர்கள் நடனம் ஆடி வந்திருந்தவர்களை வரவேற்றனர். பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்கள்,  ‘புலம்பெ யர் இலக்கியங்களில் இலக்கியச் சிந்தனையின் போக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Continue Reading →

தலிபான் வசமிருந்து தப்பித்தல்

“தலிபான் எமது காலத்தின் பிற்போக்குத் தனத்திற்கு சாட்சி. சிலவேளைகளில் தலிபான் என்பது நம் சமகாலத்தின் அரசியலைத் தெரிவிக்கும் வரலாறு. தலிபான் என்பது நாம் பெற்ற கல்வியையும் பயிற்சியையும் எமக்கு ஞாபகமூட்டுவது. எமது வாழ்க்கையின் மீது ஆதிக்கம் செலுத்தும் சட்டங்களுக்கு மற்றொரு பெயர் தலிபான். சொர்க்கத்தினை அடையும் ஆசையின் பொருட்டும,; கடவுள் நம்பிக்கையின் பொருட்டும் நாம் சுமந்து திரியும் பயத்தில் விளைந்த எழுதப்படாத சட்டத்தின் பெயர் தலிபான். மதவெறிகொண்ட எந்த அரசும் தலிபானின் தன்மை படைத்ததுதான். அமெரிக்க ஜனநாயக சமூகத்தில் பாசிசவாதியான ஜனாதிபதி ஜோர்ஜ் புஸ்ஸினைச் சுற்றியிருக்கும் குழவினர் தலிபான்கள்தான். பின்லேடன் ஒரு தலிபான். ஜார்ஜ் புஸ் ஒரு தலிபான். ஸமீரா மக்மல்பாவ் ஒரு தலிபான். தலிபான் எனும் வார்த்தையைப் பிறவற்றுடன் இணைத்துப் பொறுத்திச் சொல்ல என்னை அனுமதியுங்கள். நான் தலிபான். நீங்கள் தலிபான். அவர் தலிபான். நாங்கள் தலிபான்கள். அவர்கள் தலிபான்கள். நாம் எல்லோரும் தலிபான்கள்.”  – ஸமீரா மெக்மல்பாவ், ஈரானிய திரைப்பட இயக்குநர் –

1.

யமுனா ராஜேந்திரன் -திரைப்படம் வழி வரலாற்தை தேடிச் செல்பவன் எனும் அளவில், தலிபான் குறித்துச் சிந்திக்கிறபோது பல்வேறு முன்வரலாற்று அனுபவங்களும், திரைப்படப் பதிவுகளும் உடனடியாகவே ஞாபகம் வருகிறது. இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை எடுத்துக் கொண்டால் பாசிசத்தைக் கருத்தியலாக நிறுத்திய இனக்கொலை வரலாறு, அதிகாரவர்க்கத்திற்கும் பழமைவாதிகளுக்கும் எதிரானது எனக் கோரப்பட்டு அறிவுஜீவிகளுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் அப்பாவி மக்களுக்கும் எதிராகத் திரும்பிய கலாச்சாரப் புரட்சி, ஸ்டாலின் காலத்துச் சைபீரியப் பாலைவன சித்திரவதை முகாம்கள், அதீத மானுடக் கனவில் விளைந்து பிற்பாடு மனிதக் கபாலங்களின் எண்ணிக்கையைக் குவித்த கொடூரமாக மாறிய போல்பாட் காலத்திய பூஜ்யவரலாற்று மானுட விரோத நடவடிக்கைகள் என கருத்தியல்களுக்கும் வன்முறைக்குமான சாட்சியமாக வரலாறு நம் முன் இருக்கிறது. சின்ட்லர்ஸ் லிஸ்ட், கில்லிங் பீல்ட்ஸ், பாஸ்டர்நாக், டுலிவ், புளு கைட், பேர்வல் மை காங்குபைன் போன்ற திரைப்படங்கள் முறையே பாசிசம், போல்பாட் படுகொலைகள், ஸைபீரிய முகாம் சித்திரவதைகள், கலாச்சாரப் புரட்சி காலத்து அத்துமீறல்கள் போன்றவற்றின் திரைச் சாட்சிகளாக நமக்கு முன் இருக்கின்றன.

Continue Reading →