மரணம் இழப்பு மலர்தல் – நூல் வெளியீடும் அழைப்பிதழும்! மே 19, 2013; மாலை 5.00 மணி @ 2467 Eglinton Avenue East, Toronto, Canada.

நூல் வெளியீடும் கருத்துரைகளும்: 'மரணம் இழப்பு மலர்தல்'

போரினாலும் இன அழிப்பினாலும் மரணித்த மனிதர்களை நினைவு கூறவும், சமூக விடுதலைக்காகவும், தனிமனித உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும், ஈழத் தமிழ் தேசத்தின் விடுதலைக்காகவும் போராடி மரணித்தவர்களை நினைவு கூறவும், அனைவருக்கும் அஞ்சலி செய்வதற்கும், அஞ்சலி செய்வதற்கான உரிமையை வலியுறுத்தவும், இழந்தவர்களை ஆற்றுப்படுத்தவும் இவர்கள் வாழ்வை மேப்படுத்தவும், நடைபெறும் நிகழ்வு இது. இதில் பல்துறைசார்ந்தோர் பலர் உரையாற்றவுள்ளனர்.

ரொரன்டோவில் மே 19ம் திகதி மாலை 5.00 மணிக்கு; Mid Scarborough Community Centre, (2467 Eglinton Ave East).   நிகழ்வு ஆரம்பிக்கும் நேரம். – வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு – வருகின்றவர்களுக்கு மாலை 5.30 மணி வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு மாலை 5.00 மணி.

Continue Reading →

இசை மேதை தி.கி. ராமமூர்த்தியின் மறைவு.

இசை மேதை தி.கி. ராமமூர்த்தி.எழுத்தாளர்  குரு அரவிந்தன்தமிழ் திரையுலகின் இசைத்துறைக்கு சென்றவாரம் பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கின்றது. ஒன்று திரையுலகில் தனது இனிய குரலால் பாடலிசைத்துக் கொடிகட்டிப் பறந்த பாடகர் பி.பி.சிறீனிவாஸின் இழப்பு, மற்றையது தமிழ் திரையுலகில் தனது இசையால் பல ஆண்டுகாலம் ஆளுமை செய்த இசையமைப்பாளர் ரி.கே. ராமமூர்த்தியினுடையது.  1922ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் பிறந்த ரி,கே. ராமமூர்த்தி 2013 ஏப்ரல் மாதம் 17ம்திகதி புதன்கிழமை நோய்வாய்ப்பட்டு தனது 91வது வயதில் சென்னை தமிழ்நாட்டில் காலமானார். அவரது புனித உடல் சென்னை ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. எம்மைவிட்டுப் பிரிந்த அமரர் ராமமூர்த்திக்கு 4 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் உட்பட 11 வாரிசுகள் உள்ளனர்.  ரி.கே. ராமமூர்த்தி என்று பலராலும் அழைக்கப்பட்ட இவர், தான் பிறந்த ஊரான திருச்சிராப்பள்ளியின் முதல் எழுத்தையும், தனது தந்தையின் முதலெழுத்தiயும் தனது பெயருக்கு முன்பாகப் பாவித்துக் கொண்டிருந்தார். சி.ஆர். சுப்புராமனின் இசைக்குழுவில் வயலின் வாசிப்பதில் மிகவும் திறமைசாலியாக இருந்த இவர் பின்னர் எம். எஸ் விஸ்வநாதனுடன் இணைந்து பல பாடல்களுக்கு இசை அமைத்திருக்கின்றார். இவரது தந்தையான கிருஸ்ணசுவாமி ஐயர், தாத்தாவான மலைக்கோட்டை கோவிந்தசுவாமி ஐயர் ஆகியோர் திருச்சிராப்பள்ளியில் வயலின் வாசிப்பதில் மிகவும் பிரபலமாக இருந்தார்கள்.  அவர்களிடம் இருந்து இவர் இந்த இனிய வயலின் இசையைக் கற்றுக் கொண்டார். அந்த நாட்களில் பிரபல இசை அமைப்பாளராக விளங்கிய எஸ். பி. வெங்கட்ராமன்தான் இவரைத் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

Continue Reading →

பிரபல பின்னணிப்பாடகர் பி.பி. சிறீனிவாஸின் மறைவு

மதுரக்குரல் மன்னன் பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவு!எழுத்தாளர்  குரு அரவிந்தன்தமிழ்த்திரை உலகில் அன்றும் இன்றும் பலராலும் விரும்பப்பட்ட குரலுக்கு உரியவரான, ‘காலங்களில் அவள் வசந்தம்’ என்ற பாடலின் மூலம் பலரின் மனதைத் தொட்ட, பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் பி.பி.சிறீனிவாஸ் சென்னை சைதாப்பேட்டை சி.ஐ.டி.காலனியில் உள்ள அவரது இல்லத்தில் அவரது 82வது வயதில் (14-04-2013) காலமானார். 1930ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 22ம் தேதி ஆந்திரமாநிலத்தில் உள்ள காக்கிநாடாவில் பிறந்த இவர் பனிந்திரஸ்வாமி, சேஷகிரியம்மா தம்பதிகளின் மகனாவார். திருமணமான இவருக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றார்கள். பட்டதாரியான, கர்நாடக சங்கீதம் கற்ற இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உருது, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் போன்ற எட்டு மொழிகளை அறிந்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 12 மொழிகளில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை இவர் பாடியுள்ளார்.

Continue Reading →

(9) – செல்லப்பா: தமிழகம் உணர்ந்து கொள்ளாத ஒரு வாமனாவதார நிகழ்வு!

சி.சு. செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு!- வெங்கட் சாமிநாதன் -நான் முதன் முதலாக 1961-ல் செல்லப்பாவைப் பார்க்கச் சென்ற போது, அங்கு திரிகோணமலையிலிருந்து வந்திருந்த தருமு சிவராமுவை, செல்லப்பாவின் வீட்டில் சந்தித்ததைப் பற்றிச் சொன்னேன். அது எனக்கு எதிர்பாராத  மகிழ்ச்சி தந்த ஒரு சந்திப்பு. திரிகோணமலையிலிருந்து வந்தவருக்கு தமிழ் நாட்டில், சென்னையில் யாரைத் தெரியும்? எழுத்து பத்திரிகையைத் தெரியும். அதன் ஆசிரியர் செல்லப்பாவைத் தெரியும். செல்லப்பா அப்போது என்ன, எப்போதுமே சம்பாத்தியம் என்பது ஏதும் இல்லாத மனிதர். வத்தலக்குண்டுவிலிருந்து சென்னைக்கு எழுத்தாளராகவே வாழ வந்தவர். க.நா.சு பத்திரிகை ஒன்று வெளியிட்டுக் கொண்டிருந்த போது அவருக்கு உதவியாக ஆசிரியர் குழுவில் இருந்தவர். சிறு பத்திரிகைகள் எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்? தினமணி கதிரில் சில காலம் வேலை செய்து வந்தார். பின்னர் அங்கு ஆசிரியராக இருந்த துமிலனோடு ஒத்துப் போக முடியவில்லை என அதையும் விட்டு வெளியே வந்தவர். அப்போது பிறந்தது தான், “நமக்கு மரியாதை இல்லேன்னா, ஒருத்தர் வீட்டு வாசற்படியை என்னத்துக்கு மிதிக்கறது?” என்ற மந்திரச் சொல் அறச்சீற்றமாக அவ்வப்போது அவரிடமிருந்து வெளிவரும். அந்த சமயத்தில் தான் சிவராமூவை, செல்லப்பா தன்னுடனேயே வீட்டில் தங்கச் செய்தார்.  சிவராமூ தான் வேறு எங்கு செல்லக் கூடும்!

Continue Reading →

Have you heard of Ananda Coomaraswamy?

Ananda Coomaraswamy?K.S.SivakumaranIt is not a joke. Honestly how many of the younger generation have heard of him. With history books and social studies books written with lot of grammatical and factual errors and even hiding and distorting history, one cannot expect our young people to know about him for the simple reason that this man who has a Thamil name. With enthusiasm all around to establish a Sinhala only state with Buddhists alone and discarding all minorities as aliens  as a hidden agenda is pursued in the name of Sinhala Buddhists as opposed to Buddhist Sinhalas, the rest of the sane Sinhalas, Thamilians, Muslims, Malays and other minorities in the country and the outside world watches the scene in awe. Because of the activities of such a minority of people who have influence and patronage shame is brought to the vast majority of the people belonging to the majority community.Even a street named after him in Colombo is taken away and instead some other name has been planted as if to erase all traces of contributions made by many Lankans to build up the nation.  This scholar Dr Ananda Coomarawamy was born to a Thamilian father and an English lady. Even then he is considered a full blooded Thamilian by a knavishly ignorant people who are in the forefront of politics discarding all the tenets of what the noble Buddha preached.As a Lankan Thamilian Hindu fond of Buddhism, I find it hard to believe that some members of the clergy behave like common criminals resorting to crime.

Continue Reading →