மீள்பிரசுரம்: “டேவிட் ஐயா எங்கே”

இந்தமுறை இந்தியப் பயணத்தின் போது டேவிட் ஐயாவை சந்திப்பது என தீர்மானித்திருந்தோம். எனது அரசியலும் அவர் மீதான மதிப்பும் நான் அவரை சந்திப்பதற்கான காரணமாகும். ஆனால் துணைவியாருக்கு தூரத்துச் சொந்தம். இருவரது பூர்வீகமும் கரம்பன். ஆகவே அவர் எங்கிருக்கின்றார் என்பதை அவரை முன்பு நேர்காணல் கண்ட அருள் எழிலன் மற்றும் சயந்தன் ஆகியோர் ஊடாக கேட்டு அறிந்து கொண்டோம். டேவிட் ஐயா அவர்கள் அண்ணா நகரில் இருக்கின்றார் எனவும் அங்கே எங்கிருக்கின்றார் என்ற தகவலையும் அருள் ஏழிலன் குறிப்பிட்டார். நன்றி அருள் எழிலன். குறிப்பிட்ட அந்த இடத்திற்கு பாண்டிபாஜாரிலிருந்து பயணத்தை ஆட்டோவில் ஆரம்பித்தோம். அவர் குறிப்பிட்ட இடத்தில் இருந்த தேநீர் கடை முடியிருந்தது. மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டபோது முன்னால் உள்ள பார்மசியில் மருந்துக் கடையில் கேட்கச் சொன்னார். அவர்களுக்கு தெரியாது என்றார்கள். மீண்டும் புதிய குறிப்பு ஒன்றைக் கூறி பாடசாலைக்கு அருகிலுள்ள விட்டிற்குள் சென்று விசாரிக்க கூறினார். அதேநேரம் வீதியில் சில சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமும் விசாரித்தோம்… “இந்த இடத்தில் தாத்தா ஒருவர் இருக்கின்றாரா.. நீண்ட வெள்ளைத் தாடியுடன்… அவர் ஆங்கில வகுப்புகளும் எடுப்பார்” எனக் கேட்டோம்.

Continue Reading →

அமரர் பிரேம்ஜி அவர்களின் மறைவையொட்டிய அஞ்சலிக் கூட்டம்!

“மானுடப் பிரேமையே இலக்கியத்தின் ஆன்மா” என அறைகூவிய எழுத்தாளரும் ஊடகவியலாளரும் சமூகசெயற்பாட்டாளருமான அமரர் பிரேம்ஜி அவர்களின் மறைவையொட்டிய அஞ்சலிக் கூட்டம்: 17-02-2014 திங்கள் கிழமை பி. ப.…

Continue Reading →

அவுஸ்திரேலியா: சமூக அறிவித்தல் – அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம்  ஒழுங்கு செய்துள்ள அனுபவப்பகிர்வு    நிகழ்ச்சி  – எதிர்வரும் (பெப்ரவரி) 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல்…

Continue Reading →