பல்துறை விற்பன்னர் கே. எஸ். பாலச்சந்திரன்.

கே.எஸ்.பாலச்சந்திரன்; நன்றி - வடலி– நாடக, திரைப்படக் கலைஞரும், எழுத்தாளருமான கே.எஸ்.பாலச்சந்தினின் மறைவை ஒட்டி எழுத்தாளர் குரு அரவிந்தன் எழுதிய இக்கட்டுரையினையினை மீள்பிரசுரம் செய்கின்றோம்.  அனுப்பிய குரு அரவிந்தனுக்கு நன்றி. – பதிவுகள் –

கே.எஸ்.பாலச்சந்திரன் பற்றி ஏற்கனவே பாரதி கலைக்கோயில் சார்பில் நண்பர் மதிவாசன் வெளியிட்ட நூலின் தொகுப்பாசிரியர் என்ற வகையில் விரிவாக ஒரு அறிமுக உரை எழுதியிருந்தேன். திறமை மிக்கவர்களை எத்தனை தடவை பாராட்டினாலும் தகும் என்பதால், அவரது சாதனைகளைப் பாராட்டி அவருக்குக் கனடாவில் ரொறன்ரோவிலும், மொன்றியலிலும் விழா எடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை அவரைப் பாராட்டி வாழ்த்த விரும்புகின்றேன்.

அண்ணை ரைட் என்ற கணீரென்ற குரல் மூலம்தான் இவர் எனக்கு முதன் முதலாக அறிமுகமானார். அப்பொழுதெல்லாம் பேருந்து சாரதியை மரியாதை கருதி அண்ணை என்றுதான் நடத்துநர்கள் அழைப்பார்கள். அச்சுவேலியில் இருந்து சங்கானைக்கு ஒரு பேருந்து சுண்ணாகம் வந்து, காங்கேசந்துறை வீதிவழியாக மல்லாகம் சென்று, அளவெட்டி வழியாகச் சங்கானைக்குச் செல்லும். அதிலே உள்ள நடத்துநரும் இப்படித்தான் அண்ணைரைட் என்று குரல் கொடுப்பது வழக்கம். பயணிகளில் அனேகமானவர்கள் அவருக்கு அறிமுகமானவர்களாகவே இருப்பர். அவர் வாய் நிறைய வெற்றிலை பாக்குப் போட்டிருப்பார். காக்கித் துணியில் நாலு பைகள் உள்ள மேற்சட்டை அணிந்திருப்பார். வண்டி நின்றதும் அவசரமாக வேலியோரம் சென்று வாயில் குதப்பிய வெற்றிலைச் சாற்றை உமிழ்ந்துவிட்டு வந்து அண்ணைரைட் என்று கம்பீரமாகக் குரல் கொடுப்பார். பாலா அண்ணையின் அண்ணைரைட் நாடகத்தைக் கேட்கும் போதெல்லாம் நேரே பார்க்கும் காட்சிபோல, அந்த நடத்துநரின் ஞாபகம் வரும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது தொலைக்காட்சி பிரபலமாகாததால், ஒலியை மட்டும் கேட்கக்கூடிய இலங்கை வானொலிதான் எங்கள் வீட்டிலே உள்ளகப் பொழுது போக்குச் சாதனமாக இருந்தது. இலங்கை வானொலியில் இவரது குரல் பல தடவைகள் ஒலித்தாலும் அனேகமான ரசிகர்களைக் கவர்ந்தது இவர் கதாநாயகன் சோமுவாக நடித்த தணியாத தாகமும், இவரது தனிமனித நாடகமான, பேருந்து நடத்துநராக நடித்த அண்ணை ரைட்டும்தான் (1973) என்றால் மிகையாகாது. அன்றைய காலக்கட்டத்தில், பலரை விம்மி விம்மி அழவைத்த நாடகமாத் தணியாத தாகமும்;, 500 தடவைகளுக்குமேல் மேடையேற்றப்பட்டு, பலரை வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்த நாடகமாக அண்ணைரைட் நாடகமும் அமைந்திருந்தன.

Continue Reading →

CMR: “அண்ணை றைற்” புகழ் கே. எஸ். பாலச்சந்திரன் அவர்கள் காலமானார்!

கே.எஸ்.பாலச்சந்திரன்; நன்றி - வடலி– 27 பெப்ரவரி 2014,  கணபதிப்பிள்ளை சுப்பிரமணியம் பாலச்சந்திரன் என்ற கே.எஸ்.பாலச்சந்திரன்  இன்று (26.02.14) கனடாவில் சுகவீனம் காரணமாக காலமானார்.  10 ஜூலை 1944 கரவெட்டியில்  பிறந்து இணுவிலில் புகுந்து; பின் புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார். உள்நாட்டு இறைவரித் திணைகளத்தில் வரி உத்தியோகத்தராக பணி புரிந்த இவர் ஈழத்தின் நாடக, திரைப்படக் கலைஞர், எழுத்தாளர், இலங்கை வானொலி நடிகர்களில் பெயர் சொல்லக்கூடிய கே.எஸ்.பாலச்சந்திரன் ஏறத்தாள 20 ஆண்டுளாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையிலும், வர்த்தக சேவையிலும் ஒலிபரப்பான ஏராளமான வானொலி நாடகங்களில் நடித்திருந்தார்.  தணியாத தாகம்  என்ற பலரும் அறிந்த வானொலி தொடர் நாடகத்தில் சோமு என்ற பாத்திரத்தில் நடித்தவர். இலங்கை ரூபவாகினி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாடகங்களான நிஜங்களின் தரிசனம், உதயத்தில் அஸ்தமனம், திருப்பங்கள் போன்றவற்றில் நடித்ததோடு காதம்பரி  நிகழ்ச்சியில் பல குறு நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார்.

1965ல் நெல்லை க. பேரன் எழுதி, நெல்லியடி ஐக்கிய கலாசாலையில் மேடையேறிய ‘புரோக்கர் பொன்னம்பலம்’ என்ற நகைச்சுவை நாடகத்தில் நடிக்கத் தொடங்கி 1990ல் கொழும்பில் வெள்ளி விழா கொண்டாடியவர். இதிகாசம், சமுக, நவீன, நகைச்சுவை, பாநாடகம் என அனைத்து வகையான மேடை நாடகங்களிலும் நடித்தவர். இலங்கையில் வாடைக்காற்று, அவள் ஒரு ஜீவநதி, நாடு போற்ற வாழ்க, ஷார்மிளாவின் இதய ராகம், Blendings (ஆங்கிலம்) அஞ்சானா (சிங்களம்) ஆகிய திரைப்படங்களிலும், கனடாவில் உயிரே உயிரே, தமிழிச்சி, கனவுகள் மென்மையான வைரங்கள், சகா,என் கண் முன்னாலே,1999 ஆகிய திரைப்படங்களிலும் நடித்தவர்.

Continue Reading →

ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள்

- முல்லைஅமுதன்ஈழத்துத் தமிழ் திரைப்படங்களின் தயாரிப்பு முயற்சிகள் முன்னரே பலராலும் முன்னெடுக்கப்பட்டே வந்துள்ளது. சமுதாயம்,பாசநிலா தொடங்கி இன்று வரை தொடர்கிறது.வி.பி.கணேசனால் தயாரிக்கப்பட்ட புதிய காற்று,நாடு போற்ற வாழ்க,நான் உங்களின் ஒருவன் கையைச் சுட்டுக்கொள்ளாத படங்களாகும் என கருதுகிறேன்.அதேபோல் வாடைக்காற்றும் அப்படியே.நிர்மலா சுமாரான படம்.எனினும் தயாரிப்பாளரால் மீண்டும் ஒரு படம் தயாரிக்க முடியவில்லை.குத்துவிளக்கும் பாடசாலை மானவர்களுக்கென சிறப்புக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன.படைப்புலகின் பிரபலங்கள் நடித்த பொன்மணி அவ்வளவாக ஓடவில்லை.சிங்களத்தமிழ்ப்படம் என்று தமிழக் பத்திரிகையில் வந்ததாகச் சொல்வர்.இசையமைப்பாளர் சண்’இளையநிலா’ எனும் படத்தை எடுத்தார். கலாவதி, முத்தழகு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், எஸ்.பி.சைலஜா போன்றோ பாடிய பாடலுக்கு இலங்கை வானொலி அறிவிப்பாளராகக் கடமையாற்றிய ராஜகுரு சேனாதிபதி.கனகரத்தினம் பாடல்கலை எழுதியிருக்க சண் இசை அமைத்திருந்தார்.இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவின் குரலில் விளம்பரமும் போனது.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காமின் மூன்று அறிவிப்புகள்!

தமிழ் ஸ்டுடியோ.காமின் மூன்று அறிவிப்புகள்!அறிவிப்பு ஒன்று: பாலு மகேந்திரா – திரைப்படங்கள் திரையிடல்.

நாள்: 01-03-2014, சனிக்கிழமை, காலை 11 மணிக்கு (சரியாக 11 மணிக்கு திரையிடல் தொடங்கிவிடும்)
இடம்: பிரசாத் பிலிம் & டி.வி. அகடெமி, சாலிக்ராமம் (பிரசாத் லேப் Preview திரையரங்கம் இல்லை, பிரசாத் கல்லூரியில் உள்ள சிறிய திரையரங்கம்) தொடர்புக்கு: 9578780400
திரையிடப்படும் படங்கள்: அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம்.

அறிவிப்பு இரண்டு:  படிமை – திரைப்பட பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை

முழுவேகத்தில், உலகத் தரமான பாடத்திட்டத்தோடு படிமை திரைப்பட பயிற்சி இயக்கத்தை மார்ச் மாதம் முதல் தொடங்கவிருக்கிறது தமிழ் ஸ்டுடியோ. இடையில் மார்ச் முதல் வாரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்கள் படிமை மாணவர்களோடு உரையாடுகிறார். இன்னமும் ஐந்து மாணவர்கள் இதில் இணைந்துக் கொள்ளலாம். பாலு மகேந்திராவின் சினிமாப் பட்டறை மூடப்படுமாயின், அதில் இதுவரை பயின்று வந்த மாணவர்களையும் இந்த பயிற்சி இயக்கத்தில் சேருமாறு அழைப்பு விடுக்கிறேன். வணிக சினிமா, வெகுஜன சினிமா, கலைப் படங்கள் என்கிற போலிக் கற்பிதங்களை தாண்டி, எது சினிமா என்கிற உண்மையை உங்களுக்குள்ளிருந்தே உணரும் இடமாக இந்த பயிற்சி இயக்கம் அமையும்.

Continue Reading →

மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு கனடிய தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள்!!

மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு கனடிய தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள்!வணக்கம். மகாஜனாக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு கனடிய தமிழ் மாணவர்களுக்கான போட்டிகள் நடத்த முன் வந்திருக்கின்றோம். தமிழ் மொழியை இந்த மண்ணில் வளர்த்து அடுத்த தலை முறையினரைத் தமிழர்களாக வாழ வைக்க வேண்டும் என்ற சிறந்த நோக்கத்திற்காக தமிழ் மொழிப் போட்டி ஒன்றை முதலாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடத்த இருக்கின்றோம். தங்களுக்குத் தெரிந்த, தமிழில் ஆர்வமுள்ள மாணவர்களை இந்தப் போட்டியில் பங்கு பற்ற உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம். தமிழ் இசைப் போட்டியும் நடைபெற இருக்கின்றது.

Continue Reading →