வாசிப்பும், யோசிப்பும் 59 : மேலும் சில முகநூற் குறிப்புகள்!

எனக்குப் பிடித்த நாவல்களில் சில.

வாசிப்பும், யோசிப்பும் : மேலும் சில முகநூற் குறிப்புகள்!இது ஒரு தர அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலல்ல. நான் வாசித்த படைப்புகளில் என் மனதில் முதலில் தோன்றிய படைப்புகளிவை. இங்குள்ள படைப்புகள் அனைத்துமே எனக்கு மிகவும் பிடித்தவை.

1. டால்ஸ்டாய் – புத்துயிர்ப்பு
2. தத்தயேவ்ஸ்கி – குற்றமும், தண்டனையும்
3. அதீன் பந்த்யோபாத்யாய – நீலகண்ட பறவையைத் தேடி..
4. தி.ஜானகிராமன் – மோகமுள்
5. எம்.டி.வாசுதேவன் நாயர் –  காலம்
6. ஹெமிங்வே – கடலும், கிழவனும்

Continue Reading →

சிறுகதை: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது..’

சிறுகதை: காக்கைக்கூட்டத்திற்கு அன்றொருநாள் கல்லெறி விழுந்தது..'1.

குளிர்காலம்போய் வெயில் வந்தவுடனே ஒரு சந்தோஷம்.ஒரு உஷார். எனக்குள்ளே இரண்டு மடங்கு உஷார். அவனை நினைக்கும்போதெல்லாம் அவனைக்காணவேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் மனதிற்குள் நெருக்கு நெருக்கு என்றிருக்கும். இருட்டுறதுக்கு முன்னர் போனால்தான் முழுமையான ஒரு சந்திப்பை உருவாக்கமுடியும். அவனை ஒருதனமேனும் ஏற இறங்க ஆசைதீர பார்க்கமுடியும். அவனை நினைக்க உற்சாகமாக இருந்தது.  தினமும் மாலையில் காலாற நடந்து செல்லும் அதேபாதையில் தடம் பதிக்கின்றேன்.என்னைத்தினமும் சந்திக்கும் அந்த உயிர் கோடையில் ஆரம்பத்தில் மீண்டும் உயிர்பெற்றிருந்தது. என் வாழ்வில் எத்தனை உறவுகள் வந்தது.இவன் மட்டும் எப்படி என் உறவோடு கலந்தான்? எனக்கும் இவனுக்குமுள்ள உறவுதானென்ன? எந்த உறவில் இவன் உறவைச்சேர்ப்பது? தொப்புள்கொடி உறவிலா? இரத்தஉறவிலா? அம்மாவழிச் சொந்தத்திலா? இல்லை அப்பாவழி பந்தத்திலா? ‘யார்இவன்? இத்தனை சொந்தங்களையும் மீறிய அர்த்தமுள்ள, ஆதரவான, ஆச்சரியமான, உணர்வுபூர்வமான சொந்தமானவன். இதே உறவு ஊரிலும்எ மக்கிருந்தது. இதனால்தான் இவனைப்பார்க்கும்போதெல்லாம் அதே நினைவு. ஊரில் இருந்த அதே உறவின் சாயல் இவனிலும் இருக்கப்போய்த்தான் இவ்வுயிரையும் ஒரு நாளைக்கு ஒருக்காத்தன்னும் காணவேணும்போல மனம் கிடந்துதுடிக்கும். இவனைக்கண்டாலோ பழசுகள் மனசை வந்து ஒரு தட்டுத்தட்டும்.

Continue Reading →