நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 – 13)!

– நோர்வேயில் வசிக்கும் இ. தியாகலிங்கம் புகலிடத் தமிழ் எழுத்தாளர். காரையூரான், காரைநகரான் ஆகிய புனைபெயர்களில் எழுதி வருகிறார். நாளை, பரதேசி, திரிபு, எங்கே, ஒரு துளி நிழல், பராரிக்கூத்துக்கள் ஆகிய நாவல்களும், வரம் என்னும் குறுநாவற் தொகுதியும், துருவத் துளிகள் என்னும் கவிதைத் தொகுதியும் இதுவரை நூலுருப்பெற்றுள்ளன.  இவரது ‘நாளை’ நாவல் பதிவுகளில் தொடராகப் பிரசுரமாக அனுமதியளித்துள்ள நூலாசிரியருக்கு நன்றி.. – பதிவுகள் –

5

நோர்வேத் தமிழ் நாவல்: நாளை (5 - 13)!சனிக்கிழமை ஐந்து மணியளவில் தமிழர் கூட்டமைப்பு கூட்டம் துவங்கியது. தேவகுரு பின்னுக்குப் போய் அமர்ந்தார். அதனைப் பார்த்த தலைவர் சற்குணம், அவரை முன்னுக்கு கொண்டு வந்து அமர்த்தினார். இந்தப் பிரச்சனைகளிலே அவர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளார். தான் இவற்றை வைத்துக் கொண்டு பிரபல்யம் அடைவதாக இளைஞர்கள் சிலர் தவறாக நினைத்துக் கொள்வார்களோ எனவும் பயந்தார். தலைவர் தமது உரையைச் சிறிதாக முடித்துக் கொண்டு, பிரதான உரையைத் தேவகுருவை நிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். ‘நாம் நினைப்பவற்றை, உண்மையிலே உறுதிபூண்டு, அவர்களுக்குச் சொல்லவேண்டியது தமது கட்டாயம்’ என்று நினைத்தார்.

‘கடமையைச் செய்; பயனில் பற்று வைக்காதே. கடமை செய்வதினால் கிடைக்கும் பயனையும் ஈசுராப்பணமாக்குதல் வேண்டும்’ என்று இராமநாதர் கீதையின் சாரம் பற்றிச் சொல்லும்பொழுது கூறியது அவருக்கு அப்பொழுது நினைவில் மிதந்தது.

Continue Reading →