தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவின் நிகழ்வு!

தோழர் கலைச்செல்வனின் 10வது ஆண்டு நினைவின் நிகழ்விற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். 28/03/2015 சனிக்கிழமை பி.ப.3:00 மணி தொடக்கம் மாலை 9:00 மணி வரை அன்புடன் லக்ஷ்மி…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 78: ஈழத்துப் புலம்பெயர் இலக்கியத்தின் முதல் தமிழ் நாவலெது? ‘வித்தியாசப்படும் வித்தியாசங்களா? அல்லது மண்ணின் குரலா’?

1_manninkural_original59.jpg - 35.02 Kbமண்ணின் குரல் (நாவல் தொகுப்பு)ஞானம் புலம்பெயர் இலக்கியத்தொகுப்பின்  ‘ஈழத்துப்புலம்பெயர் இலக்கியம்’ என்னும் முன்னுரையில் ஞானம் இதழின் பிரதம ஆசிரியரான ஞானசேகரன் புலம்பெயர் தேசத்தின் முதலாவது நாவ;ல் பற்றிப்பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“புலம்பெயர் தேசத்திலிருந்து வெளிவந்த முதலாவது நாவல் என்ற வகையில் 1987இல் வெளிவந்த பார்த்திபனின் ‘வித்தியாசப்படும் வித்தியாசங்கள்’  என்ற நாவல் அமைகிறது.”

ஆனால் பார்த்திபனின் நாவல் 4.1.1987ற்கு முன்னர் வெளிவந்திருந்தால் மட்டுமே மேற்படி கூற்று பொருந்தும். ஏனெனில் 4.1.1987 அன்று ‘டொராண்டோ’, கனடாவில் ‘மண்ணின் குரல்’ என்னும் என்ற எனது நாவலொன்று றிப்ளக்ஸ் அச்சகத்தால் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளது. மேற்படி ‘மண்ணின் குரல்’ நாவல் 1984/1985 காலகட்டத்தில் மான்ரியால், கனடாவிலிருந்து வெளிவந்த ‘புரட்சிப்பாதை’ கையெழுத்துச் சஞ்சிகையில் தொடராக 9 அத்தியாயங்கள் வரையில் வெளிவந்து. பின்னர் இறுதி அத்தியாயமான பத்தாவது அத்தியாயம் சேர்க்கப்பட்டு, நூலாக வெளிவந்தது. நூலாக வெளிவந்தபொழுது ‘புரட்சிப்பாதை’யில் வெளியான கட்டுரைகள் இரண்டு, கவிதைகள் 8 ஆகியவற்றினையும் உள்ளடக்கி, ஒரு சிறு தொகுப்பாக வெளிவந்தது. [1998இல் தமிழகத்தில் குமரன் பப்ளீஷர்ஸ் வெளியீடாக மண்ணின் குரல் என்றொரு எனது நான்கு நாவல்களை உள்ளடக்கிய தொகுப்பொன்று வெளிவந்துள்ளது. அது வேறு ; இது வேறு. ஆனால் இந்த மண்ணின் குரல் நாவலானது அத்தொகுப்பிலும் உள்ளது.] மேற்படி ‘மண்ணின் குரல்’ நூலுக்கான அட்டைப்படத்தை கட்டடக்கலைஞர் பாலேந்திரா வரைந்திருந்தார். அதனையே இங்கு இடது பக்கத்தில் முதலாவதாகக் காண்கின்றீர்கள் (தமிழகத்தில் வெளியான மண்ணின் குரல் தொகுப்புக்கு இதே அட்டைப்படத்தையே அடிப்படையாகக்கொண்டு, வேறு ஓவியரொருவரால் வரையப்பட்ட ஓவியத்தைக் குமரன் பப்ளிஷர்ஸ் பயன்படுத்தியிருந்தது. அதனை இரண்டாவதாகக்காண்கின்றீர்கள்.)

Continue Reading →