சிறுகதை: கஸ்தூரி

‘அநாமிகா’”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலுமாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போனபோது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.

“ஸார், இது என்னுடைய இடம்.”

“மன்னிக்கவும், இது என்னுடையது.”

அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் உலகிலேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப்பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்ததற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..

 “என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”

“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடையதுன்னு சொல்றார்.”

”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களுடையதென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பாகக் கூறினார்.

“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதறவிட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச்சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப்பக்கம் அமர்ந்திருந்தவரிடம் கொண்டு சென்றார்.

Continue Reading →

சிறுகதை: கஸ்தூரி

‘அநாமிகா’”ஏறிக்கொள்ளுங்கள்” என்றவனுக்கு நன்றி கூறியவாறே மூட்டை முடிச்சோடு முண்டியடிக்க முயன்றும் முயலாமலுமாய் உள்ளே ஏறி பதினான்காம் எண் இருக்கைப் பக்கம் போனபோது அங்கே ஏற்கெனவே ஒருவர் தொந்தியும் தொப்பையுமாகப் பொருந்தியமர்ந்திருந்தார்.

“ஸார், இது என்னுடைய இடம்.”

“மன்னிக்கவும், இது என்னுடையது.”

அவரவருடைய இடத்தைக் கண்டுபிடிப்பதுதான் உலகிலேயே அதிசிரமமான காரியமாக இருக்கும் என்று தோன்றியது. ’அவரவர் இடம்’ என்பதிலும் அவரவருக்கு விதிக்கப்பட்ட இடங்கள், வாய்த்த இடங்கள், அவரவர் விரும்பிய இடங்கள் என்று எத்தனை பிரிவுகள்…. விதிக்கப்பட்டதற்கும் வாய்த்ததற்கும் என்ன வேறுபாடு என்ற கேள்விக்கு ‘நிச்சயம் ஏதோ வேறுபாடு இருக்கிறது’ என்பதாக மனம் இடக்காகக் கூறியது. அப்படி வேறுபாடு இருக்கும் பட்சத்தில் விதிக்கப்பட்டதும் சரி, வாய்த்ததும் சரி, விரும்பிய – விரும்பாத என்பதாக வேறு சிலவாகவும் கிளை பிரியும்…..

 “என்ன ஸார், அங்ஙனேயே நிக்கிறீங்க? இந்த வண்டி தானே நீங்க?”

“ஆமாம், ஆனா இவர் என் இடத்தைத் தன்னுடையதுன்னு சொல்றார்.”

”அதெப்படி? என் இடத்தை நீங்கள் தான் உங்களுடையதென்று சொல்கிறீர்கள்.” உட்கார்ந்திருந்தவர் விறைப்பாகக் கூறினார்.

“அட, யார் இடம் யாருக்கு சாசுவதம் சார்…. அதுவும், ஒரு ஆறு மணி நேரத்துக்குப் போய் எதுக்கு இத்தனை எடக்குமுடக்குப் பேச்சு?” சலிப்பாகத் தத்துவத்தைச் சிதறவிட்டபடியே நடத்துனர் வந்துபார்த்து என் பயணச்சீட்டை ‘டபுள் செக்’ செய்வதற்காய் ஓட்டுநர் இருக்கைப்பக்கம் அமர்ந்திருந்தவரிடம் கொண்டு சென்றார்.

Continue Reading →

நினைவேற்றம் 5

 -தேவகாந்தன்-   மாரிகாலத்தில் ஒரு அதிகாலை நேரம் முதல்நாளிரவில் வீசிய காற்றுக்கு முற்றம் முழுக்க இறைந்துகிடந்த பூவரசின் பழுத்த மஞ்சள் இலைகளை அம்மா பெருக்கிக்கொண்டிருக்கää விறாந்தையில் தூக்கம் இன்னும் கலைந்துவிடாத சோம்பேறித்தனத்துடன் படுக்கைப் போர்;வையை இன்னும் மேலிலே சுற்றியபடி எந்த விடுப்புமற்ற அந்தச் செயற்பாட்டில் கண் பதித்து அமர்ந்திருந்தேன். பூவரசமிலைகளின் பல்வேறு தர மஞ்சள்கள் தவிர என் கவனத்தைக் கவர அங்கே வேறெந்த அம்சமும் இருந்திருக்கவில்லை.

“மழை வரப்போகுதுபோல கிடக்கு. எழும்பிப் போய் முகத்தைக் கழுவியிட்டு வா” என்று அம்மா எனக்குச் சொல்லுகிறாள். தூக்கம் கலைந்தாலும் சோம்பல் கலைந்துவிடாத நான்ää “போறனம்மா” என்று சொல்லிக்கொண்டே இன்னும் அந்த இடத்தைவிட்டு அகலாமல்.வெளியே செல்;ல புறப்பட்டு தெருவில் வந்த ஒருவர் அம்மாவுடன் படலையில் நின்று பேசுகிறார். போகும்போது சொல்கிறார்ää ‘கெதியாய் கூட்டி முடியுங்கோ. பருத்துறைக்கடல் இரையிறது கேக்குதெல்லே? நல்ல மழைதான் வரப்போகுது’ என்று. அம்மாவின் கூட்டுகைச் சத்தம் நின்றிருந்த அந்தப் பொழுதில் நான் கேட்கிறேன்ää காற்றின் அசைவு தவிர்ந்து வேறு சத்தமற்றிருந்த அவ்வெளியில் கடலின் உறுமலை.

பருத்தித்துறைக்கும் சாவகச்சேரிக்குமிடையில் பன்னிரண்டு மைல்கள். எங்கள் வீட்டிலிருந்து பத்து மைல்களாவது இருக்கும். அந்தளவு தூரத்திலிருந்து இரையும் கடலின் சத்தம் இவ்வளவு தூரத்துக்கு கடந்துவந்திருக்குமெனில்ää ஆயிரம் தரைவைக் கடல்களைவிடவுமே அது பிரமாண்டமாய் இருக்கவேண்டும்! சாவகச்சேரியில் தரவைக்கடல் பார்த்திருக்கிறேன். அதுபோல் கைதடியிலும் நாவற்குழியிலும் எழுந்திருந்த பாலங்களுக்குக் கீழால் விரிந்திருந்த தரைவையில் அலையசைந்த நீர்ப் பெரும்பரப்பையும் பார்த்திருக்கிறேன். அவை சப்தமெழுப்பியதே இல்லை. ஆனால் கண்டிராத கடல் பத்துக் கட்டை தூரத்திலிருந்து எழுப்புகிற சப்தம் இங்கே கேட்கிறது! கடலின் பிரமாண்டம் காண அன்றைக்கேதான் என் மனத்துள் ஆசை விழுந்திருக்கவேண்டும்.

Continue Reading →

ரிஷி கவிதைகள்!

1. வெந்து தணியும் காடு….

- ரிஷி (லதா ராமகிருஷ்ணன் ) -துண்டுப்பெண்ணொருத்தியிடம் இவளது அந்தரங்கத்தை
 யவர்கள் விண்டுவைத்துக்கொண்டிருக்கும் நேரம்
ஒருவேளை கள்ளச்சிரிப்புடன் கண்ணடித்துக்கொண்டிருக்கக்கூடும்;
வியூகம் அமைத்து வென்று சூடிய வாகைகளைக்
கணக்கெடுத்துக்கொண்டிருக்கக்கூடும்….

என்றேனும் அறிவார்களோ _
கூண்டுக்குள் வசிக்கப் பழகிவிடும் கிளி யல்ல இவள்;
அரசனருகில் அப்பாவியாய் ஆரோகணித்திருக்கும் அன்னமும் அல்ல.
கழுகின் கூர்விரிவைக் கைக்குள் பிரபஞ்சமாக்கி
விட்டு விடுதலையாகிநிற்கும் சிட்டுக்குருவி!

இருந்தும் சக்ரவர்த்தியின் திருத்தோள்களைக் கூடாகத் தரித்திருந்ததெல்லாம்
அவர் அருமை பெருமை அறிந்ததாலேயே.

அரசவையோ, பரிவாரமோ பரிசில்களோ ஒரு பொருட்டில்லை யென்றுமே.
ஆன்மாவின் அடியாழத்தைத் தீண்டுமவர் ஆலோலங் கேட்கவே
தத்தித்தத்தி நடைபழகிவந்த திக் குருவி யவர் காலடியில்.

Continue Reading →

படச்சுருள் மாத இதழ் நடத்தும் “அரசியல் சினிமா” தொடர் திரையிடல் நிகழ்வு…

படச்சுருள் மாத இதழ் நடத்தும் "அரசியல் சினிமா" தொடர் திரையிடல் நிகழ்வு...02-07-2015, வியாழன், இரவு 7.00 மணிக்கு, | ஸ்பேசஸ் அரங்கு, பெசன்ட் நகர், தலபாக்கட்டி உணவகம் அருகில்.

திரையிடப்படும் படம்: Father Son & Holy War (Directed by: Anand Patwardhan)

நண்பர்களே, மும்பை பிரித்வி அரங்கில் ஆனந்த் பட்வர்தன் தொடர்ச்சியாக அரசியல் பேசும் ஆவணப்படங்களை திரையிட்டு வருகிறார். நாம் தலைகீழாக புரண்டாலும் அத்தகைய படங்களை வேறு எங்கும் பார்க்க முடியாது. தவிர அரசியல் படங்களை திரையிட்டு விவாதிப்பது என்பது ஒரு கலாச்சாரத் தேவை. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான படங்களை தொடர்ந்து திரையிட தமிழ் ஸ்டுடியோ சார்பாக முன்னமே முயற்சித்து இடம் கிடைக்காமல் தவித்து வந்தேன். ஆர்.கே.வி ஸ்டுடியோ மட்டுமே கிடைக்கும். ஆனால் அவர்கள் கேட்கும் வாடகை 3௦ ஆயிரம். மாத திரையிடலில் இதெல்லாம் சாத்தியமே இல்லை. சென்ற வாரம் ஆனந்த் பட்வர்தன் சென்னை வந்திருந்தபோது, இது பற்றி விவாதித்தேன். அருகில் இருந்த சதானந்த மேனனிடம் ஸ்பேசஸ் இடத்தை அத்தகைய அரசியல் திரைப்படங்களை திரையிட கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஆனால் வார இறுதி நாட்களில் அதாவது விடுமுறை நாட்களில் கொடுக்க இயலாது, வியாழன் மட்டுமே அரங்கு கிடைக்கும் என்றார். அருகில் இருந்த ஆனந்த் பட்வர்தன் அரங்கு கிடைக்க வேண்டும் அதுதான் முக்கியம். முதலில் ஒப்புக்கொள்ளுங்கள், ஆரம்பத்தில் கூட்டம் இல்லாமல் போகலாம். போக போக வந்துவிடுவார்கள் என்றார். சரி என்றேன்.

Continue Reading →

சொப்கா மன்றத்தின் கனடாத்தின விழா – 2015

dsc_0319.jpg - 27.50 Kbபுலம்பெயர்ந்த மண்ணில் பீல் பிரதேச தமிழர்களின் பெருமுயற்சியால் சொப்கா என்ற பெயரில் பீல்பிரதேச தமிழர்களின் அமைப்பு ஒன்று கடந்த ஆறு வருடங்களாக மிகவும் சிறப்பாக இயங்கிவருகின்றது. இந்த அமைப்பினால் கடந்த ஞாயிற்றுக் கிழமை (28-06-2015) கனடாத்தினம் கொண்டாடப்பட்டது.

கனடா தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம், தமிழ் வாழ்த்து, மன்றக் கீதம் ஆகியன இசைக்கப்பட்டன. பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி செந்தில்மோகன் அவர்களால் கனடா பிறந்ததின கேக் வெட்டப்பட்டது. மன்றத்தின் தற்போதைய தலைவரும் சட்டத்தரணியுமான வாணி செந்தூரன் அவர்களால் தலைவர் உரை நிகழ்த்தப்பட்டது. பிரதம விருந்தினராக மகாஜனக் கல்லூரி பழைய மாணவரும் வைத்திய கலாநிதியுமான செந்தில்மோகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அரங்கம் நிறைந்த கனடாவிழாவில் மன்ற அங்கத்தவர்களால் மேடையேற்றப்பட்ட பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. கனடா தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி அடைந்தவர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது. இந்த மேடையில் சொப்கா தன்னார்வத் தொண்டர்களும் பாராட்டப்பட்டனர்.

Continue Reading →