ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 31-10-2015

நிகழ்ச்சி நிரல்: ‘தொல்காப்பியரும் சங்கச் சான்றோரும் கண்ட> காணவிழைந்தபெண்கள்” பிரதமவிருந்தினர் உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் சிறப்பு விருந்தினர்கள் உரை:திருமதி. சுந்தரேஸ்வரி சிவதாஸ் – ‘தொல்காப்பியர் கண்டபெண்கள்”திரு.குமரகுரு…

Continue Reading →

பா வானதி வேதா இலங்காதிலகம். கவிதைகள் மூன்று!

1.  எம்.எஸ்.வியிசை வண்ணங்கள் தரளக் குவியல்

வேதா இலங்காதிலகம்அசைந்தாடும்தென்றலின் பயணம் இவரிசை.
திசையின்றி உலகெங்கும் பரவிய பேரருவி.
இசைக் கௌரவம் நீராரும் கடலுடுத்தி..
நசையுறு இசைக்கு அழிவில்லை அஞ்சலிகள்.

சங்கீதம்! இங்கிதமுடை சுவர சாரதி.
அங்கீகாரம் கலைமாமணி, பிலிம் பெஃயர்,
மங்காத வாழ்நாள் சாதனையாளர், கௌரவ டாக்டர்.
சங்கீத இராசாங்கம் 1945 – 2015வரை.

இசைப்படியமைவு ” பணம் ” என்எஸ். கிருஷ்ணன்
இசைக்கருவி மூன்றுடன் தாழையாம் பூமுடித்து.
இசைக்கருவி முன்னூறுடன் எங்கே நிம்மதி.
இவரிசைமன்னன் பேரருவி, மெல்லிசை மன்னன்.

Continue Reading →

கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்குப் பாராட்டுவிழா

கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களுக்குப் பாராட்டுவிழா

கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் 25 வருட கால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் சென்ற வெள்ளிக்கிழமை பாராட்டுவிழா ஒன்று ஸ்காபரோவில் நடைபெற்றது. சென்ற ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி 2015 இல் இந்த நிகழ்வு ஸ்காபரோ, 3300 மக்னிக்கல் அவென்யூவில் உள்ள பாபா பாங்குவிட் ஹோலில் இடம் பெற்றது. மங்கள விளக்கேற்றி, கனடா தேசிய கீதம், தமிழ் வாழ்த்துப் பாடல், மௌன அஞ்சலி ஆகியவற்றுடன் பாராட்டு விழா ஆரம்பமானது. கனடா தேசிய கீதத்தை செல்வி சாலினி மணிவண்ணனும், தமிழ் தாய் வாழ்த்தை செல்வி சங்கவி முகுந்தனும் இசைத்தனர். எழுத்தாளர் குரு அரவிந்தனை கனடா எழுத்தாளர் இணையத்துடன் இணைந்து கனடாவில் உள்ள பல தொடர்பு சாதனங்கள், மன்றங்கள், சங்கங்கள் என்பன அவரைக் கௌரவித்திருந்தனர்.

Continue Reading →