மீள்பிரசுரம்: “ஈழத்தமிழ் இலக்கியமானது, புகலிடத் தேசியத் தமிழ் இலக்கியத்தினூடாக உலகத் தமிழ் இலக்கியம் என்ற பரிமாணத்தை எய்தியுள்ளது”! ஈழத்து இலக்கிய மரபின் இன்றைய நிலை!

-   ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரன்(அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் கன்பரா கலை இலக்கிய வட்டமுமATLAS Function04் இணைந்து 04-06-2016 அன்று  நடத்திய விழாவில் ஞானம் ஆசிரியர் தி. ஞானசேகரனது கெளரவிப்பு நிகழ்வின்போது ஆற்றிய உரை)

இந்தத் தலைப்பு  பரந்துபட்ட  ஈழத்து இலக்கிய வளர்சிப்போக்கினை உள்ளடக்கியது. எனக்குத் தரப்பட்ட 30 நிமிடத்தில் இதனை அடக்குவது என்பது இலகுவான  காரியமல்ல. ஈழத்து இலக்கிய வரலாறு 2000 ஆண்டுக்கும் மேற்பட்ட காலப் பரப்பினைக்  கொண்டது என்பதை  பழந்தமிழ் இலக்கியங்களும் கல்வெட்டுக்களும் சான்று பகர்கின்றன. ஈழத்துப் பூதந்தேவனார்  ஈழத்துக்குரிய தனி அடையாளத்தை வழங்கிய முதல் புலவராவார். இவரது ஏழு பாடல்கள் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. அதன்பின்னர் ஈழத்து இலக்கிய வரலாற்றிலே ஒரு நீண்ட இடைவெளி காணப்படுகிறது. தற்போது ஈழத்திலே கிடைக்கின்ற பழைய நூல் போசராசப் பண்டிதர் எழுதிய  சரசோதிமாலை  என்ற  சோதிட நூல் ஆகும். இது கி. பி. 1309 இல் வெளிவந்தது. 15 ஆம் நூற்றாண்டிலே நான்காவது தமிழ்ச் சங்கத்தை யாழ்ப்பாணத் தமிழ் மன்னர்கள் அமைத்தார்கள். யாழ்ப்பாண இராச்சிய காலத்தில் காவியம், சோதிடம், வைத்தியம், வரலாறு, தல புராணங்கள், பள்ளு, உலா, மொழிபெயர்ப்பு எனப் பல்வகை நூல்கள் எழுந்துள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் பெரும் பாய்ச்சல்  நிகழ்ந்துள்ளதைக் காணலாம். தமிழ்மொழிபற்றிய தேடல்களும் ஆய்வுகளும் மேல்நாட்டார் வருகையின்பின் தொடங்கின. செய்யுள் மரபு கைவிடப்பட்டு  உரைநடை  மரபு  செல்வாக்குப் பெற்றது. அச்சு  இயந்திரத்தின் வருகை தமிழ் இலக்கியங்கள் நூல்பெற உதவின.

ஈழநாட்டில் இடம்பெற்ற  இலக்கிய முயற்சிகளை சில புலவர்கள் அக்காலத்தில் பதிவு செய்தனர். தமிழ் நாட்டுக்குச் சென்று  தமிழ்வளர்த்து ஈழத்துக்குப் புகழ்தேடித் தந்தவர்கள் ஏறத்தாழ 20 பேர் உள்ளார்கள். இவர்கள் செய்யுள் நூலாக்கம், உரைநடை நூலாக்கம், உரை நூலாக்கம், நூற்பதிப்பு, மொழிபெயர்ப்பு நூலாக்கம், தமிழ்ச்சொல் அகராதி நூலாக்கம் ஆகிய பணிகளைச் செய்துள்ளனர்.

ஈழத்து நவீன தமிழ் இலக்கியம்
மங்களநாயகம் தம்பையா எழுதிய ஈழத்தின் முதல் தமிழ் நாவல் நொறுங்குண்ட இதயம் 1954ல் வெளியாகியாகியது. ஈழத்து நவீன இலக்கியம் 1930 களிலிருந்து  உணர்வு பூர்வமாக ஆரம்பமாகியது எனலாம்.

மறுமலர்ச்சி ஈழத்தின் முதலாவது நவீன இலக்கிய சஞ்சிகை.

“முற்போக்கு இலக்கியம் இவ்வளவு மிகச் செழிப்பாகத் தொடங்கி வளர்வதற்கு காரணமாக இருந்தது ஏற்கனவே இருந்த சூழல்.  ஆந்தச்சூழல் மறுமலர்ச்சி இயக்துக்குள்ளால் வந்தது. ஈழத்தின் தன்மைகளைக் கொண்டு இலக்கியம் வளருகின்ற  ஒரு தன்மையைக் காண்கிறோம்” எனப் பேராசிரியர் சிவத்தம்பி ஞானம் சஞ்சிகைக்கு அளித்த நேர்காணல் ஒன்றிலே குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading →

சிறுகதை: உயிர்க்கசிவு

சிறுகதை: அகதியும்,  சில நாய்களும்! - சுதாராஜ் -ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் விடிகிறது.

எப்போது வெளிக்கும் என்று வாசற்பக்கமே பார்த்துக்கொண்டு கிடப்பாள் அம்மா. சில இரவுகள் நேரத்தைக் கடத்திக்கொண்டு போவதுண்டு. நித்திரையின்றிப் புரள்வதைவிட எழுந்து உட்காரவேண்டும்போலிருக்கும். அல்லது ஹோலுக்குள்ளேயே இங்குமங்கும் நடக்கலாம். ஆனால், சாமத்தில் எழுந்து நடந்து திரிந்தால் மகன் ஏசுவான்.

“என்னம்மா இது?… ராவிருட்டியில?…. பிள்ளையள் பயப்பிடப்போகுது…. படுங்கோ!”

அம்மாவுக்கு வயது போய்விட்டது. கிழவி. யார் என்ன சொன்னாலும் கேட்கத்தான் வேண்டும்.

குளிரடித்தது. போர்வைக்குள் உறக்கத்தை இழுத்து மூடிக்கொண்டு படுப்பதற்கு அம்மா மிகவும் பிரயத்தனப்பட்டாள். விழிப்பு போர்வையை விலக்கி விலக்கி வெளியே வர எத்தனித்தது. யன்னல்களைப் பூட்டிவைத்தாலும் குளிர்காற்று ஹோலுக்குள் இலகுவாகப் புகுந்துவிடுகிறது. சிறிய வீடு. இரண்டு சிறிய அறைகள். ஒரு அறையில் பேரப்பிள்ளைகள் படுக்கிறார்கள். மற்றதில் மகனும் மருமகளும். அதனால் அம்மாவின் படுக்கை ஹோலுக்கே வந்துவிட்டது.

உறக்கத்துக்கும் விழிப்புக்குமிடையிலான இழுபறியில் ஓரளவு கண்தூங்கும் வேளையிற்தான் அந்தக் குருவியின் குரல் கேட்கும். நிலம் விடியாத அதிகாலையிலேயே வந்திருந்து பாடும் குருவி! வெளியே கிளை பரப்பி நிற்கும் மரத்துக்கு நாள் தவறாது வந்துவிடும். ஒவ்வொரு கிளையாக தத்தித் தத்தி அமர்ந்து பாடும் தொனி, அது தன் துணையைத் தேடி ஏங்குவதுபோலிருக்கும்.

யன்னலூடு சற்று வெளிப்புத் தெரிந்தது

அம்மா ஒரு கையை நிலத்திலூன்றி மறு கையால் பக்கத்திலிருந்த கதிரையைப் பிடித்தவாறு மெல்ல எழுந்தாள். படுக்கையை ஒரு பக்கமாக எடுத்து வைத்தாள். பின்னர் சுவரோரமாக இருக்கும் தனது கதிரையிற் போய் அமர்ந்து கொண்டாள்.

Continue Reading →

கனடாத்தமிழ் இலக்கியம்: ழகரம் சஞ்சிகை மீண்டும் வெளிவரவுள்ளது; வாழ்த்துகள்!

மீண்டும் 'ழகரம்'மீண்டும் ழகரம் சஞ்சிகை எதிர்வரும் ஜூன் 19ந்திகதி வெளிவரவுள்ளது. கனடாத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் ‘ழகரம்’ சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு. ஆனி 1997, ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 & ஐப்பசி 1997 என நான்கு இதழ்களே வெளிவந்துள்ள போதிலும் கனடாத்தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகை.  ‘ழகரம்’ சஞ்சிகையினை எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களே சக எழுத்தாளர்களான கவிஞர் திருமாவளவன், பொன்னையா விவேகானந்தன் ஆகியோருடன் இணைந்து  வெளியிட்டு வந்தார். எழுத்தாளர் அ.கந்தசாமி எழுபதுகளில் யாழ் நகரில் புகழ்பெற்ற பெளதிக ஆசிரியராக விளங்கியவர். கனடா வந்த பிறகுதான் இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டேன். கவிதைகள், தொடர்கதைகள் என பலவகைப்படைப்புகளைக் கனடாவில் வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் தொண்ணூறுகளில் எழுதியிருக்கின்றார். ‘கானல் நீர்க்கனவுகள்’ என்னும் கவிதை நூலினை வெளியிட்டிருக்கின்றார்.  ‘காலத்தின் பதிவுகள்’ என்னும் கவிதைத்தொகுதி மலையன்பன், ரதன் ஆகியோரின் கவிதைகளுடன் இவரது கவிதைகளையும் உள்ளடக்கி வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே வெளிவந்த ‘ழ’கரம் சஞ்சிகை இதழ்களைப் ‘படிப்பகம்’ இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணையத்தள முகவரி: http://www.padippakam.com/index.php?option=com_sectionex&view=category&id=14&Itemid=54#catid227

‘ழகரம்’ இதழ்கள் பற்றிய சுருக்கமான விபரங்கள் வருமாறு:

இதழ் 1 – ஆனி 1997:

உள் அட்டையில் விளம்பரத்துக்குப் பதில் கவிதை: திணிப்பு – ராவுத்தர். முதலாவது பக்கத்தில் ஒரு பக்க ழகரம் குழுவினரின் ஆசிரியத்தலையங்கம் ‘குவியம்’ என்னும் பெயரில் வெளியான அனைத்து இதழ்களிலும் வெளியாகியுள்ளது. ஆனால் ழகரம் குழு உறுப்பினர்கள் யார் யார் என்னும் விபரம் அறிவிக்கப்படவில்லை.

இதழ் ஒன்றில் வெளியான ஆக்கங்கள் விபரம் வருமாறு:

கவிதை: சந்தனக்கல் – பொன்னையா விவேகானந்தன்.
கவிதை: மின்மினிப்புள்ளி – அ.கந்தசாமி
பத்தி: கரிச்சான் கோலங்கள் – கரிச்சான் குஞ்சன்.
கவிதை: – சம்பாத்தியம் – நிலா குகதாசன் (இவர் அமரராகிவிட்டார்).
கவிதை: வேனில் – திருமாவளவன்
கவிதை: சங்காரம் – சிவவதனி பிரபாகர்
கட்டுரை: பேர்ரோல்ற் பிறேஷ்ட் – P.விக்கினேஸ்வரன்
கவிதை: பொழுது – சகாப்தன்
மொழிபெயர்ப்புக் கவிதை: கவிதையை நேசிக்கும் சிலர் – மூலம்: விஸ்லாவா ஸிம்ப்ரோஸ்கா; தமிழில் – ஜெகன்
கட்டுரை: கடலின் மீது ஒரு வண்ணத்துப் பூச்சி – சேரன் (பிரமிள் நினைவு தினக்கட்டுரையின் சுருக்கிய வடிவம்).
சிறுகதை: நானும் கேஸ்டினாவும் ஒரு பந்தயக் குதிரையும் – சக்கரவர்த்தி (சிறுகதை என்னும் பெயரில் வெளியான நெடுங்கதை; 14 பக்கங்கள்)
கட்டுரை: இளங்கறுவலின் பனிவயல் உழவு

ஓவியம் : கருணா

Continue Reading →