திரும்பிப்பார்க்கின்றேன்: கருத்தியல் போராட்டம் நடத்தி களைத்துப்போனவர் ஓய்வு பெறட்டும்! சிவாசுப்பிரமணியம் நினைவுப்பகிர்வு!

” இந்தக்கடிதத்தில்  குறிப்பிட்டுள்ள  பெயருக்குரியவனை உமக்குத்தெரியுமா ? “

” தெரியாது. “

” உமக்கு எத்தனை மொழிகள் தெரியும் ?”

” தமிழ், ஆங்கிலம், சிங்களம் தெரியும்.”

” எப்படி  உம்மால்  இந்த  மூன்று  மொழிகளிலும் சரளமாகப்பேசமுடிகிறது”

” நான்  இலங்கையன்.  இம்மூன்று  மொழிகளும்  இங்கே பேசப்படுபவை.   அதனால்  கற்றேன்.  பேசுகின்றேன்”

” எவ்வாறு  இந்த  மொழிகளில்  உமக்கு  பேசும்  ஆற்றல்  வந்தது.”

”  நான்  தமிழன்.   அதனால்  தமிழ்  பேசுகின்றேன். சிங்கள இலக்கியவாதிகளைத்தெரியும்.  சிங்கள  இலக்கியமும் தெரியும். சிங்கள  நண்பர்களும்  எனக்கு  இருக்கிறார்கள்.  ஆங்கிலத்திலும் படித்திருக்கின்றேன். அத்துடன்   நான்  ஒரு  அரசாங்க  ஊழியன்”

” உமக்கு  மொழிபெயர்க்கத் தெரியுமா?”

Continue Reading →