சிறுகதை: மூச்சு விட மறுத்தவனைப்பற்றி

சிறுகதை வாசிப்போம்~ வாருங்கள்!அவனை பற்றி நிறைய சொல்லலாம் ஆனால் இப்போது சொல்லாகப் போகும் அவனை பற்றி பேசுவதில் என்னவாகி விடப்போகிறது என்கிறார்கள் அவனுடைய  உறவினர்கள் .சிலரோ அவனுடைய வாழ்க்கையின் கடந்தகால புத்தகத்தில் சில பக்கங்களுக்கு உரிமையாளர்கள் போல மனதின் ஆழத்தில் கிடப்பவையை ஒரு கோர்வையாக மாற்றி ஒலியாக கொட்ட முயல்கின்றனர் . இதற்கிடையில் அவனுடைய நினைவுகளில், வார்த்தைகளில் சிக்கிக்கொண்டவனாக மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியே நின்று கொண்டிருந்தேன்.தன்னாலே என் உடல் நினைவில் இருந்து குறிப்பெடுக்க ஆரம்பித்திருந்தது. அப்போது என் நினைவில் அவன் சொன்ன மர்மமான வார்த்தைகள் வேப்பமர இலைகளாக உதிர தொடங்கியிருந்தன. “எல்லோருக்கும் சுவாசிக்கும் வியாதி. எனக்கு இந்த வியாதியின் உச்சக்கட்டம்.எப்போது வேண்டுமானாலும் இந்த வியாதி குணமாகலாம் .இதற்காக பல நினைவுகளை மருந்தாக சாப்பிட்டுகொண்டு இருக்கிறேன்” என பெரம்பலூரின் மர்மமான மலைகளின் மேல் ஏறிக்கொண்டிருக்கும் போது காரணமே இல்லாமல் சொன்னது நினைவுக்கு வந்தது.

அடிக்கடி என்னிடம் அவன் ஏதோ வித்தியாசமான கனவுகள் வருவதாக சொல்வான்.தன்னுடைய ஒவ்வொரு கனவின் முடிவிலும் தான் இறந்து போவதாக சொல்வான்.எனக்கு அவன் பொய் சொல்கிறான் என்றே எண்ண தோன்றியது.ஏனெனில் அவனுடைய கனவில் நடக்கும் சம்பவங்கள் இங்கு நடக்கக்கூட துளியளவு கூட வாய்ப்பில்லை.

இது அவனை பற்றிய கதை தான்.என்னுடைய அறையில் சக நண்பர்களை போல இருந்தவன் அவன் . ஆனால் செயல்களிலும் பேச்சிலும் அவன் சாதாரண மனிதர்களை போல அல்ல. ஆனால் அவன் மனிதன் தான். லத்தின் அமெரிக்க மாய யதார்த்த கதைகளில் வருவதை போல பல கண்களும், பல கால்களும் அவனுக்கு இல்லை.இந்த லத்தின் அமெரிக்க இலக்கியங்களை பற்றி கூட அவன் வழியாகவே அறிந்துகொண்டேன் . அவன் தன்னை வித்தியாசமானவன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைபட்டுக்கொள்வான்.

மார்க்வெஸ் எனக்கு பிடித்த படைப்பாளி ஆனது அவனால் தான்.அவனுடன் ஒரே அறையில் பல அனுபவங்களை பேசி வாழ்ந்த தருணங்களை நினைத்து பார்க்கையில் இன்னும் அந்த விசித்திரமான நிகழ்வுகள் கண் முன்னே நிகழ்ந்தவாறு தோன்றும்.அவனுக்கு தனக்கு வைக்கப்பட்ட பெயர் கூட பிடிக்காது என்று தான் தோன்றும். ஏனெனில் எப்போதும் ஒரு நாளுக்கு ஒரு முறை ஐ அம் சிசிபஸ், ஐ அம் போர்ஹே, ஐ அம் காம்யூ  என்று பெரிய பெரிய ஆளுமைகளின் பெயரை சொல்லிக்கொண்டு சுற்றுவான்.

Continue Reading →

கவிதை: உஷ்ணப்பூக்கள்!

முல்லை அமுதன்

தினமும்
தன் பூந்தோட்டத்தை
அழகு பார்த்தாள்
என் மனைவி.
ஒவ்வொரு பூவாய்க் கையில்
எடுத்து ரசித்தாள்.
நான்
நட்சத்திரங்களை
எண்ணிக்கொண்டிருந்தேன்.
இன்று
ஆவலாய்
கதவைத் திறந்தாள்.

Continue Reading →

கவிதை: பயன்மிகுந்து நிற்குதன்றோ !

கவிதை: பயன்மிகுந்து நிற்குதன்றோ !

வள்ளுவத்தைப் படித்துவிடின் வாழ்க்கைபற்றி அறிந்திடலாம்
தெள்ளுதமிழ் நூல்களிலே சிறந்தநூலாய் இருக்கிறது
அள்ளவள்ளக் குறையாமல் அறிவுரைகள் தருவதனால்
நல்லதெனப் போற்றுகின்றார் நாட்டிலுள்ள மக்களெல்லாம்
கள்ளமெலாம் அகல்வதற்கும் கயமைவிட்டு ஓடுதற்கும்
நல்லதொரு மருந்தாக நம்குறளும் இருக்கிறது
உள்ளமதில் குறள்கருத்தை உருவேற்றி விட்டுவிடின்
இவ்வுலகில் நல்வாழ்வு எல்லோர்க்கும் அமையுமன்றோ !

Continue Reading →

நிகழ்வுகள்: கனவு இலக்கிய வட்டம்: ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்!

கனவு இலக்கிய வட்டத்தின் ஜீன் மாதக் கூட்டம்        16/6/16 அன்று மாலை சக்தி பில்டிங், அம்மா உணவகம் அருகில், பாண்டியன் நகரில், திருப்பூர்  நடந்தது. கலாமணி கணேசன்(…

Continue Reading →

கவிதை: எழுத்தாளர் கீதம்! – அறிஞர் அ.ந.கந்தசாமி (கவீந்திரன்) –

எழுத்தாளர் கீதம்!

– அறிஞர் அ.ந.கந்தசாமி –

அறிஞர் அ.ந.கந்தசாமி

[ ‘புதுமை இலக்கியம் பாரதி நூற்றாண்டு முன்னோடி மலரினை ‘நூலகம்’ தளத்தில் வாசிக்கக் கிடைத்தது. அதில் முதற்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்த அறிஞர் அ.ந.கந்தசாமியின் ‘எழுத்தாளர் கீதம்’ கவிதையினை இங்கு பதிவு செய்கின்றேன். இக்கவிதையானது இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1962இல் நடத்திய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொதுமாநாட்டை ஒட்டி அமரர் அ.ந.கந்தசாமி அவர்களால் இயற்றப்பெற்றது. ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் அறிஞர் அ.ந.க.வின் பங்களிப்பு பன்முகப்பட்டது. கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு, விமர்சனம்  பரந்துபட்டது. ‘துறவியும் குஷ்ட்டரோகியும்’, ‘எதிர்காலச்சித்தன் பாடல்’, ‘கடவுள் என் சோரநாயகன்’ போன்ற கவிதைகள் முக்கியமானவை. ]


சங்கு முழங்குது! சங்கு முழங்குது!
சங்கு முழங்குது கேள் – புதுமைச்
சங்கு முழங்குது கேள்.
எழுத்தெனும் சங்கம்
ஒலித்திடுகின்றது.
உழுத்திடும் உலகம் ஒழிந்திடவே –
சங்கு முழங்குது.               – சங்கு முழங்குது

சுரண்டல் மிகுந்தது, சூழ்ச்சி
நிறைந்தது
இருண்ட இச்சமுதாயம்!
வரண்டு கிடந்திடு மக்களின் துன்ப
வதைகள் ஒழித்திடுவோம்!
திரண்டிவண் எழுவீர் பேனா மன்னர்
தீரமுடன் நீரே – கலைச்
சிற்பிகளே! எம் எழுத்தாற் பற்பல
அற்புதம் செய்திடுவோம்! – புது
அமைப்பும் நிறுவிடுவோம்.            – சங்கு முழங்குது

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 174: செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’;

செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’

செங்கை ஆழியானின் 'நந்திக்கடல்'செங்கை ஆழியானின் ‘நந்திக்கடல்’ நாவல் அவரது முதலாவது நாவல். ‘கலைச்செல்வி’ நாவல் போட்டியில் பாராட்டுப்பெற்ற நாவல். பின்னர் யாழ் இலக்கிய வட்ட வெளியீடாக நூலாக வெளிவந்த நூல். என் மாணவப்பருவத்தில் நான் வாங்கி வைத்திருந்த இலங்கையைச்சேர்ந்த வரலாற்று நாவல்களிலொன்று ‘நந்திக்கடல்’ . அதனை செங்கை ஆழியானின் தமையனாரான புதுமைலோலனின் ‘அன்பு புத்தகசாலை’யில் வாங்கியிருந்தேன். அடுத்த வரலாற்று நாவல் வ.அ.இராசரத்தினத்தின் ‘கிரெளஞ்சப்பறவைகள்’. ஒரு ஞாபகத்துக்காக இந்த நந்திக்கடல் நாவலைத் தேடிக்கொண்டிருந்தேன். இந்த நாவல் யாழ்ப்பாண இராச்சியத்தைப் பின்னணியாகக் கொண்டு , சங்கிலிகுமாரனை நாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்.

ஒருமுறை நூலகம் கோபி நூலகம் பற்றிய பதிவினையிட்டிருந்தபோது அந்நூலைப்பற்றியும் தெரிவித்திருந்தேன். உடனேயே ‘நந்திக்கடல்’ யாரிடமாவது இருந்தால் நூலகத்துக்குத் தந்து உதவவும் என்று அவர் முகநூலில் அறிவித்திருந்தார். அண்மையில் அவரிடமிருந்து வந்த தகவலில் மகிழ்ச்சிக்குரிய விடமொன்றிருந்தது. அது: ‘தற்போது நூலகத்தில் ‘நந்திக்கடல்’ நூல் வாசிக்கக் கிடைக்கிறது என்பதுதான்.

ஈழத்து எழுத்தாளர்கள் பலரின் படைப்புகள் இன்னும் நூலுருப்பெறாமல் பல்வேறு சஞ்சிகைகள், பத்திரிகைகளில் முடங்கிக் கிடக்கின்றன. அவையெல்லாம் படிப்படியாக ‘நூலகம்’ தளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன ( ‘மறுமலர்ச்சி’, ‘கலைச்செல்வி’ இதழ்கள் உட்பட).

இவ்விதமாக ‘நூலகம்’ தளமானது ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் ஆவணச்சுரங்கமாக உருமாறிக்கொண்டிருக்கின்றது. இலங்கைப்பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறையில் கல்வி கற்கும் பட்டப்படிப்பு மாணவர்களை அவர்களை வழி நடாத்தும் பேராசிரியர்கள் ‘நூலகம்’ போன்ற தளங்களைப்பாவித்து, ஈழத்துத்தமிழ்ப்படைப்பாளிகள் பற்றி, ஈழத்தில் வெளியான தமிழ் நூல்கள், சஞ்சிகைகள் பற்றி ஆய்வுகளைச்செய்யத்தூண்ட வேண்டும். அவ்விதம் செய்யப்படும் ஆய்வுகளை நூலாக வெளியிட வேண்டும். அவ்விதம் செய்தால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துக்கு மிகுந்த வளம் சேர்த்ததாக அவ்வாய்வுகள் அமையும்.

Continue Reading →

அவுஸ்திரேலியா – சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்

அவுஸ்திரேலியா - சிட்னியில் முதியோர் இல்லத்தில் நனவிடை தோயும் கல்விமான்! தமிழ்  உலகில்  கொண்டாடப்படவேண்டிய  தகைமைசார் பேராசிரியர்   பொன். பூலோகசிங்கம்                               எங்கள்  நாவலர்,  ” வசனநடை  கைவந்த  வல்லாளர்  ஆறுமுகநாவலர் ” –  என்று  அறிந்திருக்கின்றோம்.   தமிழ்நாட்டில்  கடலூரில்  ஒரு காலத்தில்   வள்ளலார்  சுவாமிகளுக்கு  எதிராக  நீதிமன்றில்  அவர்  வழக்காடியதையும்  அறிந்திருப்போம். ஆனால்,  அவர்  தமது  இளமைக்காலத்தில்  கோபமும்  மூர்க்க  குணமும் கொண்டவர்   என்பதை  அறிந்திருப்போமா  ?  தமது  உறவினர்  மீது  தமக்கு வந்த  கோபத்தை  வெளிப்படுத்துவதற்கு    ஒரு  கத்தியை  எடுத்துக்கொண்டு அவர்   துரத்திய  கதை  எத்தனைபேருக்குத் தெரியும்  ?  ஆறுமுகநாவலர்  நூற்றாண்டு  இலங்கையில்  நாடுதழுவிய  ரீதியில் கொண்டாடப்பட்டவேளையில்   நடைபெற்ற  விழாக்களில் உரைநிகழ்த்தியவர்தான்  அந்த  சுவாரஸ்யத்தை  வெளிப்படுத்தினார். அவர்தான்   தகைமைசார்  பேராசிரியர்  பொன். பூலோகசிங்கம். இவ்வாறு   கூட்டங்களிலும்  விழாக்கள்  மற்றும்  சந்திப்புகளிலும்  பல சுவாரஸ்யங்களை  அவிழ்த்து  கலகலப்பூட்டும்  பூலோகசிங்கம்  அவர்கள் தற்பொழுது   அவுஸ்திரேலியா,  சிட்னியில்  ஒரு  முதியோர்  பராமரிப்பு நிலையத்தில்  கட்டிலில்   சயனித்தவாறு  கடந்த  காலங்களை  நனவிடை தோய்ந்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு   மனிதர்  வாழ்விலும்  முதுமை  வரும்.  அந்த  முதுமை  மேலும் இரண்டு   மைகளையும்  அழைத்துக்கொண்டு  அருகிலிருந்து  உறவாடும். அவைதான்   தனிமை – இயலாமை. அந்தத்தனிமையும்  எழுதமுடியாதிருக்கும்  இயலாமையும்தான்  இன்று அவரை  வாட்டிக்கொண்டிருக்கின்றன.

பூலோகசிங்கமும்  அங்கதச்சுவையுடன்  உரத்துச்சிரித்து  மகிழ்வூட்டுபவர். ஆறுமுகநாவலரைப்பற்றி  நாம்  அறியாத  பல  பக்கங்களை,  அவரது நூற்றாண்டு   காலத்தில்  தான்  பேசிய  மேடைகளில்  சொன்னவர். ஒரு  சமயம்  கடும்கோபத்துடன்  தமது  உறவினர்  ஒருவரை வெட்டுவதற்காக  ஒரு  வெட்டுக்கத்தியுடன்  நாவலர்  ஓடியிருக்கும் செய்தியைச்சொல்லி,   தனது  பேச்சுக்களினால்  எங்களை  சிலிர்க்கச்செய்த சிங்கம்,  தற்போது  நான்கு  சுவர்களுக்குள்  அமர்ந்து,   தான்  கடந்தவந்த  பொற்காலங்களை  நினைத்துக்கொண்டிருக்கிறது.  சிலவருடங்களுக்கு   முன்னர்  சிட்னியில்  ஒரு  நாள்  வெளியே நடந்துசென்றபோது , எதிர்பாராதவிதமாக  தடுக்கியோ  மயங்கியோ விழுந்திருக்கிறார்.   அதனைத் தொடர்ந்து  தீவிர  சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு,  படிப்படியாக  தேறியிருந்தாலும்,  பவளவிழா நெருங்கியிருந்த   காலப்பகுதியில்  விதியானது  தன்னை  இப்படி முடங்கியிருக்கச்செய்துவிட்டதே   என்ற  கவலையையும்  ஐந்து  ஆண்டுகளுக்கு முன்னர்  கடந்துவிட்டார்.

Continue Reading →

ஆய்வு: சிவசம்புப்புலவர் – கால ஆராய்ச்சி

ஈழத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பெரும்புலவரான சிவசம்புப் புலவர் காலம் தொடர்பாக ஆராய்ச்சியாளர்களிடையே மாறுபாடான கருத்துகள் நிலவுகின்றன. புலவரது நூல்கள் அச்சாகி வெளிவரத் தொடங்கிய காலத்திலிருந்து, அச்சாகி வெளிவந்த நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய எழுத்துக்களில் புலவரது காலம் பற்றிய பல்வேறுபட்ட கணிப்புக்களை அவதானிக்க முடிகின்றது. புலவரின் செய்யுட்களை அவர் வாழ்ந்த காலப்பின்புலத்தில் வைத்து ஆராய்வதற்கு அவரது காலம் பற்றிய சரியான கணிப்பு அவசியமாகும். இத்தேவை கருதியே புலவரின் காலம் தொடர்பாக இச்சிறுகட்டுரை ஆராய முனைகிறது.

சிவசம்புப் புலவரின் காலம்பற்றிய சிக்கல் தொடர்பாக 1981 ஆம் ஆண்டு, பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கத்தால் வெளியிடப்பட்ட இளங்கதிரில், வெளியாகிய பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்களின் “உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர்” என்னும் கட்டுரையில் வரும் பின்வரும் பகுதி இங்கு நோக்கத்தக்கது.

“உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரின் தமிழ்ப் பணியை மதிப்பிட முன்பு அவர் வாழ்ந்த காலத்தை வரையறுத்துக்கொள்ள வேண்டும். இருபதாம் நூற்றாண்டுத் தொடக்ககாலம் வரையில் வாழ்ந்த சிவசம்புப் புலவரின் காலமும் சுலபமாக அறிந்து கொள்ளமுடியாமல், வரையறுத்து அறியவேண்டிய சிக்கலை உடையதா எனச் சிலர் கேட்கலாம். ஆங்காங்கு காணப்படும் வெகுசில மைல்கற்கள்தவிர கால ஆராய்ச்சி பிரச்சனைக்குரியதாகவே காணப்படுகின்றது. சிவசம்புப் புலவர் காலம் பற்றி இத்தகைய பிரச்சினை தோன்றுகிறது. 1

Continue Reading →