கவிதை: முத்த சுதந்திரம்.

கவிதை: முத்த சுதந்திரம்.

அள்ள அள்ள குறையாத அன்பின் கொடையிது
கொடுப்பதனால் மட்டுமே பெற்றுக்கொள்கிற
அன்பின் பரிவர்த்தனை.
கொடுப்பதற்கென்றே உதடுகளில் ஒட்டியிருக்கிற முத்தம்
எப்போதும் எந்த நேரத்திலும்
தன்னை வழங்கத் தயாராக இருக்கிறது.

Continue Reading →

ஆய்வு: பெண்ணியக் கவிஞர்களின் ‘பாலியப்பெண்ணியம்’

 - முனைவர் மா. பத்ம பிரியா, தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி, சிவகாசி. -தற்காலப் பெண்ணியவாதிகள் பாலுறவை முன்னிறுத்தியே பெண்விடுதலைக்கான போராட்டத்தை துவக்கியுள்ளனர். பாலியல் அடிமைத்தனமே அனைத்துச் சிக்கலுக்கும் காரணம் என்பது இவர்களின் வாதமாகும். ஆதலால், ‘புனிதப்படுத்தப்பட்ட’, ‘மர்மப்படுத்தப்பட்ட’ ஆண் – பெண் அந்தரங்கம் பாடுபொருளாக கட்டமைக்கப்பட்டுள்ளது. தந்தை வழிச் சமூகம் ‘குடும்பம்’ என்ற நிறுவனத்தின் மூலமாகப் பெண்ணின் பாலியலை அமுக்கி வந்ததாகக் கருதியே பாலுறவைப் பாடவிளைந்துள்ளனர்.

பாலியப்2பெண்ணியம்
‘பாலியப்பெண்ணியம்’ என்பது பெண்; நுகர் பொருளாதலை விமர்சிப்பது ஆகும். மேலும் இப்பெண்ணியவாதிகள் பின்வரும் கூறுகளில் பாலியப் பெண்ணிய இலக்கியம் படைக்கவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெண் உடல் பற்றி பெண் நோக்கில் எழுதுவது  (Writing on the female body) என்பார் கேட்டிகான்ப்ரை (Katie  Conbry))
எழுத்து வரம்புகளைத் தகர்த்தெறிதல் (Breaking the bounds of writing) என்பார் டிம்பிள்காடிவாலா (dimple Godiwala)
இலக்கியப் பழமைச் சட்டவேலி எல்லையைக் கடந்து பயணித்தல் என்பார் சிரிஸ்வீடன் (Chrisweedon)
தனக்கான புதுவெளியைத் தோற்றுவித்துக் கொள்ளுதல் என்பார் எமிலிகே.பாரடைஸ் (Emily K. Paradise)

ஒரு படைப்பில் இத்தகு பண்புகள் இடம் பெற்றால் அது பாலியப் பெண்ணிய இலக்கியமாக (Sexist Feminist Literature) ஆகிறது. இத்தகைய கொள்கைகளை உள்வாங்கியது தான் குட்டிரேவதி, சுகிர்தாராணி, சல்மா, மாலதி மைத்ரி, லீனாமணிமேகலை போன்றோர் எழுதிய பாலுறவுக் கவிதைகள் ஆகும்.

உடல்அரசியல் போராட்டம்
உடலே ஆயுதம் எனும் கருதுகோளின் படி பெண் மொழி அவள் உடலில் இருந்து தொடங்குகின்றது. தந்தையின் ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட தன் உடல் இன்பத்தை மீட்டெடுப்பதற்கு புதுமொழி தேவையானது. இதனைத்தான் ‘உடற் கூற்றுப் பெண்ணியத்திறனாய்வு’ என்பர். இத்திறனாய்வு பெண் உடலை எழுத்தின் மூலமாகக் காண்கிறது. இதனையே உடல் மொழி என்பர். பிரெஞ்சு பெண்ணியவாதிகள் உடல் மொழி என்பதற்கு ‘எக்ரிடியூர் பெமினைன்’ (நுஉவசவைரசந குநஅiniநெ)  எனும் தொடரைப் பயன்படுத்துவர். இத்தொடருக்கு ‘ உடலை எழுதுவது ‘ என்பது பொருள். ஷொவால்டர் இதனை ” மொழியிலும் நூலிலும் பெண் உடலையும் பெண்ணின் வேறுபாட்டையும் பொறிப்;பது ”  என்று விளக்குவார்.  முன்னைய மரபுகள்  பெண்களின் பாலியல் அனுபவத்தை மொழியில் அனுமதிக்கவில்லை. இன்றோ இந்நிலை பெண்ணியவாதிகளால் மாறியுள்ளது.

Continue Reading →