ஆஸ்திரேலியா: இலங்கை மாணவர் கல்வி நிதியம் 29 ஆவது ஆண்டுப்பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலியா: இலங்கை மாணவர்   கல்வி  நிதியம் 29 ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டம்    அவுஸ்திரேலியாவில் 1988 ஆம்  ஆண்டு  முதல்  இயங்கும்  இலங்கை மாணவர்   கல்வி  நிதியத்தின்  29  ஆவது   ஆண்டுப் பொதுக்கூட்டம் எதிர்வரும்  11-11-2017  ஆம்  திகதி  சனிக்கிழமை  மாலை  5.00  மணிக்கு    மெல்பனில்  VERMONT SOUTH COMMUNITY HOUSE     (Karobran Drive, Vermont  South, Victoria 3133) மண்டபத்தில்  நடைபெறும்.    நிதியத்தின்  தலைவர்  திரு.விமல். அரவிந்தன்   தலைமையில் நடைபெறவுள்ள  29  ஆவது  ஆண்டுப்பொதுக்கூட்டத்தில்  நிதியத்தின் உறுப்பினர்களின்    ஒன்றுகூடலும்  தகவல்  அமர்வும்  இடம்பெறும். இலங்கையில்    நீடித்த  போரில்   பெற்றவர்களை   இழந்த  ஏழைத்தமிழ் மாணவர்களின்   கல்வி  வளர்ச்சிக்காக  1988  ஆம்   ஆண்டு   தொடங்கப்பட்ட நிதியம்,   இதுவரையில்  ஆயிரத்துக்கும்  மேற்பட்ட  மாணவர்களின்  கல்வி வளர்ச்சிக்கு   உதவியுள்ளது.    நூற்றுக்கணக்கான  மாணவர்கள்  நிதியத்தின் உதவியினால்   பல்கலைக்கம் பிரவேசித்து,  பட்டதாரிகளாகியிருப்பதுடன்  மேலும்  பல மாணவர்கள்   அரச  மற்றும்  தனியார்   துறைகளிலும்  பணியாற்றுகின்றனர். மேலும்   பல  மாணவர்களின்  கல்வி  வளர்ச்சிக்கு  நிதியம்    உதவவேண்டியிருப்பதனால்  மேலதிக  விபரங்களை பெற்றுக்கொள்வதற்காகவும்  29  ஆவது    ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் தகவல்   அமர்வும்  ஓழுங்கு செய்யப்பட்டுள்ளது. 

முக்கிய குறிப்பு:   இக்கூட்டத்தில்   இராப்போசன விருந்தும் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதால் கலந்துகொள்ள விரும்பும்    நிதியத்தின்  உறுப்பினர்களும்  அன்பர்களும்  தமது  வருகையை   தயவுசெய்து  தாமதமின்றி  உறுதிப்படுத்தவும்.   இந்த  ஒன்றுகூடல்   இராப்போசன   விருந்தில்   கிடைக்கப்பெறும் நன்கொடைகள்,   கல்வி   நிதியத்தின்   வளர்ச்சிக்கு    வழங்கப்படும்.

Continue Reading →