மகாஜனாவின் முத்தமிழ் விழா

மகாஜனாவின் முத்தமிழ் விழா  அண்மையில் 28-10-2017 அன்று மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ரொறன்ரோ, 2740 லோறன்ஸ் அவென்யுவில் உள்ள கல்லூரி மண்டபத்தில் அரங்கம் நிறைந்த நிகழ்வாக மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழா ஒருங்கமைப்பாளர் கந்தப்பு சிவதாசனின் ஆரம்ப உரையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றி தேசிய கீதம், கல்லூரிக் கீதத்துடன் விழா சரியாக 5:31 க்கு குறித்த நேரத்தில் ஆரம்பமானது. எழில் மதிவண்ணன், கிருஷ்ணகுமார் சியாமளன், சக்திதரன் தர்சனன், தர்சனா சக்திதரன், சோபிகா ஜெயபாலன் ஆகியோர் தேசிய கீதம் இசைத்தனர்.  கல்லூரிக் கீதம் இசைப்பதில் செயற்குழு உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

திரு. ரவி சுப்பிமணியம், திருமதி வனஜா ரவீந்திரன், திரு. க. மணிவண்ணன், திருமதி சுதர்சினி மணிவண்ணன், கவிஞர் சேரன், வைத்திய கலாநிதி சொ. செந்தில்மோகன், வைத்திய கலாநிதி சுபாதினி செந்தில்மோகன், திரு. பாலா முருகேஷ், திருமதி பவானி பாலசுப்பிரமணியம், திரு சிங்கராஜா ஸ்கந்தராஜா, திருமதி கமலா ஸ்கந்தராஜா ஆகியோர் மங்கல விளக்கேற்றி விழாவை ஆரம்பித்து வைத்தனர். வரவேற்புரையை உபதலைவர் க. புவனச்சந்திரன் நிகழ்த்தினார். முன்னாள் அதிபர் அமரர் பொ. கனகசபாபதி அவர்கள் ஆரம்பித்து வைத்த நேரக்கட்டுப்பாட்டை தொடர்ந்தும் கடைப்பிடிப்பதை இவ் விழாவில் அவதானிக்க முடிந்தது.

முதல் நிகழ்ச்சியாக இசைக்கலாபாரதி ஹரணி ஸ்கந்தராஜா வழங்கிய ‘விரலிசை ஜாலம்’ என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பரதக்கலாவித்தகர் சியாமா தயாளனின் மாணவிகள் வழங்கிய ‘ஓம் சிவோகம்’ என்ற நடன நிகழ்ச்சி இடம் பெற்றது. ஆடலரசி செந்தில்செல்வி சுரேஸ்வரனின் ‘நர்த்தன சங்கமம்’ நடன நிகழ்வைத் தொடர்ந்து மகாஜனன் நாகமுத்து சாந்திநாதன் நெறியாள்கையில் ‘எழுதாத பக்கங்கள்’ என்ற நாடகம் இடம் பெற்றது. தொடர்ந்து கணிதம், பொதுஅறிவு போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து முத்தமிழ் விழாவிற்கும், மகாஜனன் மலருக்கும் ஆதரவு வழங்கியோர் கௌரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து சங்கத் தலைவர் சிங்கராஜா ஸ்கந்தராஜா அவர்களின் உரையும், பிரதம் விருந்தினர் ரவி சுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர் கவிஞர் சேரன் ஆகியோரின் உரைகளும் இடம் பெற்றன.

Continue Reading →

இருந்து …..இறந்தோம் !

கவிதை வாசிப்போமா?

வெளுத்துப்  பெய்யும்  மழையின்  குரல்
இருட்டில்  என் கனவை  விழுங்கிற்று
அகலும்  அறிகுறியில்லை
போன பொழுதில்  பெய்தபோது
அம்மா அலுப்பின்றி  கிடந்தாள்
அருவமாகிப்  போன  அவளை
பெருமழைதான்  தின்று போட்டது
எங்களுக்கிடையேயிருந்த  காலம்
வலியைத்  துடைக்கத்  தவறியது
சலசலத்துப்  பொங்கிச்  சீரும்  நீர்
வாசலில்  பூதம் போல்  பெருகியது
என்  கண்ணீரையும்  வறுமையையும்  போக்கி
என்  அரவணைப்புக்குள்  இருந்த  உரிமை !
வெள்ளத்தின் பேரலைக்குள் நழுவும்
அவள்  இறுதி  உயிர்மூச்சு
மெல்லிய  அவள்  குரல்
தேக்கு மரக்கதவோரம்  பனித்துளிபோல் 
அடங்கி  முடங்கிற்று

Continue Reading →

மழயிசை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) கவிதைகள்!

மழயிசை (ஸ்ரீவில்லிப்புத்தூர்) கவிதைகள்!

1.
லேசான பட்டாம்பூச்சியைப் போல சிறகடித்தும் மகிழ்வினூடே
சிரித்துத் திரிந்த
அந்த நொடிகள்
நெருப்பினூடே இரும்பை இலக்குவது போல உருகிச் சிதைந்தது.
பதிலியை ஏற்காத
வினை தவிக்கிறது.
வலி தாங்க இயலாமல்
வெள்ளம் பெருக்கெடுக்க
கண்கள் குளமாக…
ரணத்தின் உச்சத்தில்
மனம் தற்கொலை செய்ய…
பிரிவின் இறுதியில்…
உயிர் மீட்டுகிறது ஆதிக்காதலின் நினைவுகளை!!”
நிறைவுற்றது காதற்கிளவி!!!

Continue Reading →

சிவசக்தி (புதுவை) கவிதைகள்!

1. மீண்டும் நான்..

வாழ்வில் ஏதோ தேடி
கிணற்றை எட்டிபார்த்தேன்
தண்ணீர் கூட்டம்
அசைவால் அதிர்ந்தது
சிறுகல்லை வீசினேன்
சிற்றலை சிரித்தது
அமைதியானது..

என் மௌனம்
நிலையில்லாமல் நின்றது
கடலின் மடியில்
அமர்ந்தேன்
அலையின் வேகம்
குறையவில்லை
என்னைபோல்
கரையில் கூட்டம்
எதை தேடுகிறது
சற்று துணிந்தேன்
நீந்தக் கற்றுகொள்ள
கடலில் குதித்தேன்
அலை கரை ஒதுக்கியது

Continue Reading →

எம் . ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா ) கவிதைகள்!

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -

1. வசந்தமாய் மாறும் !

ஆண்டவன் படைப்பிலே அனைத்துமே அற்புதம்
ஆயினும் மனிதனோ அனைத்திலும் அதிசயம்
வேண்டிய அனைத்தையும் விரைவினில் பெற்றிடும்
வித்தைகள் அவனிடம் சொத்தென இருக்குதே !

மனிதனைப் படைப்பினில் உயர்வெனக் கருதிட
மனிதனின் செயல்களே காரணம் ஆயின
புனிதனாய் மனிதனும் புவிதனில் இருக்கையில்
மனிதனின் மாண்புகள் மாட்சிமை ஆகிடும் !

தானமும் செய்தான் தவமும் செய்தான்
ஈனமாம் காரியம் எண்ணிலாச் செய்தான்
யானது என்னும் ஆணவக் குப்பை
போனது போலத் தெரியவே இல்லை !

குப்பைகள் குவிந்திடின் குணமெலாம் சிதறும்
தப்பிதமாகவே செயல் எலாம் அமையும்
எப்பவும் மனநிலை இறுகியே இருக்கும்
எதை நினைத்தாலும் பதட்டமே பெருகும் !

விருப்புகள் வெறுப்புகள் நிறையவே இருக்கும்
வேதனை சோதனை நாளுமே குவியும்
மனமதில் குப்பையாய் இவற்றினைச் சேர்த்தால்
வாழ்கின்ற வாழ்வு வதங்கியே போகும் !

Continue Reading →

கவிதை: கத்தலோனியா மூதாட்டி (THE OLD WOMAN OF CATALONIA: ):

- தீபச்செல்வன் -

தங்க நகரமெங்கும்
இறைதூதர்கள் பொரகோ மலர்களைத் தூவ
சுதந்திர தேசப் பிரகடனம் நிகழ்த்தப்படுகையில்
புன்னகை நிரம்பி இருதயம் வெடித்த அந்த மூதாட்டி,
முன்பொருநாள், ‘மகளே! கண்ணுக்கு தெரியாத
யுத்தத்தினால் நாம் நிர்மூலம் செய்யப்படுகிறோம்!’ என
தன் பிள்ளைகளுக்குச் சொன்னாள்.

‘எம்மிடம் இருப்பது பிரிக்க முடியாத நாட்டுக்கான சாசனம்’ என
ஸ்பெயின் பிரதமர் தொலைக்காட்சியில்  உரையாற்றுகையில்
பர்சலோனா நகரைப்போல பளபளக்கும் கன்னங்களுடன்
துடிதுடிப்பாக திரியும் அந்த மூதாட்டி
‘மகனே! நமது கூழாங்கற்களை  திருடி ருசிப்பட்டவர்கள்
சுதந்திரத்தை பிரிவினை என்று நம் விழிகளை மறைப்பார்கள்!’ என
தன் பிள்ளைகளுக்கு சொன்னாள்.

Continue Reading →

கவிப்புயல் இனியவன் கவித்துளிகள்!

கவிப்புயல் இனியவன் கவித்துளிகள்!

1. காதலுடன் பேசுகிறேன்

காணாமல் போனால் ……
கண்டுபிடித்துவிடலாம்……
உனக்குள் காணாமல்……
போன என்னை எப்படி…..
கண்டுபிடிப்பாய்…..?

காதலை மறைக்க……
முடியாது…….
கழுத்தில் உள்ள……
தாலியை சேலையால்….
மறைப்பது போல்….!

Continue Reading →

பாக்கியம் ராமசாமி (ஐ.ரா.சுந்தரேசன்) மறைவு! ஆழ்ந்த இரங்கல்!

ஐ.ரா.சுந்தரேசன்அப்புசாமி, சீதாப்பாட்டிஎழுத்தாளர் ஐ.ரா.சுந்தரேசன் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூலில் எழுத்தாளர் இரா முருகன் பதிவு செய்திருந்தார். ஜலகண்டபுரம் ராமசுவாமி சுந்தரேசன் என்பது இவரது இயற்பெயர். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைப்பகிர்ந்துகொள்கின்றோம். எங்களது காலகட்டத்தில் நகைச்சுவை எழுத்தென்றால் முதலில் ஞாபகத்துக்கு வருபவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி படைத்த அப்புசாமி – சீதாப்பாட்டி கதைகள்தாம். ஓவியர் ஜெயராஜின் கை வண்ணத்தில் வெளியான அப்புசாமி – சீதாப்பாட்டி ஓவியங்களை அவ்வளவு இலகுவாக மறந்துவிட முடியுமா என்ன? ஐ.ரா.,சுந்தரேசனின் புனைபெயர்களிலொன்றுதான் பாக்கியம் ராமசாமி என்பதும். ஐ.ரா.சுந்தரேசன் என்னும் பெயரிலும் இவரது தொடர்கள் எழுபதுகளில் குமுதம் இதழில் தொடராக வெளிவந்துள்ளன. அவற்றில் ‘கதம்பாவின் எதிர்’ அப்பருவத்தில் நாம் விரும்பிப்படித்த நாவல்களிலொன்று. தமிழ் இலக்கிய உலகில் தேவனின் ‘துப்பறியும் சாம்பு’ போல் பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி, சீதாப்பாட்டியும் நிலைத்து நிற்பார்கள். இவர் அப்புசாமி.காம் என்னும் புகழ்பெற்ற வலைப்பதிவொன்றினையும் நடாத்தி வந்தார். அதன் இணையத்தள முகவரி: http://www.appusami.com/nagaichuvaimenu.asp அத்தளத்தில் அப்புசாமி – சீதாப்பாட்டி நாவல்கள் பலவற்றை வாசிக்கலாம்: http://www.appusami.com/nagaichuvaimenu.asp

 

Continue Reading →