பிரதிலிபியின் அடுத்த போட்டி – ஊர் சுற்றிப் புராணம்

பிரதிலிபியின் அடுத்த போட்டி - ஊர் சுற்றிப் புராணம்பயணம் ஞானத்தை அடைவதற்கான வழிகளில் முக்கியமானது. அது நம் அறிவை விரிவாக்கவும், மனதின் ஆழத்தை அகலப்படுத்தவும், மனிதர்களின் மேல் அன்பு செலுத்தவும் தவறாமல் கற்றுக்கொடுக்கும்.

நம் வாழ்வியலில் ஏதேனும் ஒரு விதத்தில் பயணம் கலந்தே இருக்கிறது. அது நம் குடும்பத்தோடு கிளம்பி கோவிலுக்குச் செல்வதிலிருந்து, சொந்த பந்தங்களோடு சுற்றுலா செல்வது, பள்ளி – கல்லூரி சுற்றுலாக்கள், நண்பர்களோடான பயணம், நம் முன்னோர்களின் சுவடுகளை தேடிச் செல்லும் வரலாற்றுப் பயணங்கள், சுயத்தை கண்டடையச் செல்லும் தனிப்பயணங்கள், இலக்கற்றுப் கிளம்பிப் பயணிக்கும் பயணங்கள் என நீண்ட பட்டியல் கொண்டது.

உங்கள் பயண அனுபவங்களை, அதில் சந்தித்த மனிதர்கள், பார்த்த இடங்கள் என பயணமும் பயணம் சார்ந்த குறிப்புகளை – அனுபவங்களை எழுத வைப்பதே இந்தப் போட்டியின் நோக்கம்.

போட்டிக்கு கட்டுரைகள் மட்டுமே அனுப்பலாம்.

ஒருவர் அதிகபட்சம் 3 கட்டுரைகள் வரை அனுப்ப முடியும்.

மொத்தம் நான்கு படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். இரண்டு, வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது (முதல் பரிசு – 1000, இரண்டாவது பரிசு – 500). மற்ற இரண்டு எங்களது நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவது (முதல் பரிசு – 1000, இரண்டாவது பரிசு – 500)

படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – tamil@pratilipi.com

மின்னஞ்சலின் தலைப்பு (Subject) – “ஊர் சுற்றிப் புராணம்” என்றிருக்க வேண்டும். படைப்புடன், அதற்குப் பொருத்தமான ஒரு படமும் அனுப்பிவைக்க வேண்டும்.

படைப்புகளை பிழைகள் இல்லாமல் எழுதி அனுப்பவும். அதிகப் பிழைகள் இருந்தால் படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

படைப்புகளுடன் உங்களது தொலைபேசி எண்ணும், உங்களது மின்னஞ்சல் முகவரியும் அனுப்பிவைக்கவும். எங்களது அனைத்துத் தகவல் பரிமாற்றங்களும் மின்னஞ்சல் மூலமே இருக்கும்.

Continue Reading →

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள ‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூல்.

தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுடன் வெளிவரவுள்ள 'ஓவியம் 1000' ஓவியப் பெருநூல்.

உலகெலாம் வாழும் ஈழத்தமிழர்களின் ஓவியம் வரையும் ஆற்றலை ஒருமித்த தளத்தில் சேர்க்கவும், அவர்களின் ஆயிரம் ஓவியங்களை ஒரே நூலில் இடம்பெறச்செய்து உலகெலாம் பரம்பலடையச் செய்யும் நோக்குடனும்  தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் இணைந்ததாக ‘ஓவியம் 1000’ எனும் ஓவியப் பெருநூல்  வெளிவர ஏற்பாடாகியுள்ளது. ஏற்கனவே 32 நடுகளின் 1098 கவிஞர்களை உள்ளடக்கிய ‘1000 கவிஞர்கள் கவிதைகள்’ பெருநூலின் வெளியீட்டினைத் தொடர்ந்தே இப்பணியும் முன்னெடுக்கப்படுகின்றது.  ஈழத்தினை மையமாகக் கொண்டு செயலாற்றும் இக்குழுமத்திற்கு உறுதுணையாக அனைத்து நாடுகளிலும் பணி மேம்படுத்துநர்களும், ஓவியச் சேகரிப்பாளர்களும் இயங்குவர். ஓவியப் பெருநூலின்   வெளியீட்டு விழாவானது பணி முன்னெடுப்புக் குழுமத்தினரால்   தீர்மானிக்கப்படும் இடத்தில் ஒழுங்கு செய்யப்படும்.

‘ஓவியம் 1000’ ஓவியப் பெருநூலிற்கான ஓவியங்கள் கீழ்வரும் முறைமைகளுக்கு ஒப்ப சேகரிக்கப்படும்.

Continue Reading →