ரொறன்ரோதமிழ்ச்சங்கம் ஐப்பசி மாத இலக்கியக் கலந்துரையாடல்

நிகழ்வுகள் , அறிவித்தல்கள்

“தமிழியல் ஆய்வுகள் – வரலாறும் வளர்ச்சியும்.”
பிரதம பேச்சாளர்: பேராசிரியர் கலாநிதி நா.சுப்பிரமணியன்

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
“தமிழில் பெண்ணியச் சிந்தனைகளின் தோற்றமும் வளர்ச்சியும்”  – கலாநிதி மைதிலி தயாநிதி
“தமிழரின் இசையியல் மற்றும்  நடனவியல்  ஆய்வுகள்”  – கலாநிதி கௌசல்யா சுப்பிரமணியன்
“சைவத்தின் புதிய புரிதல்களும் தெரிவுகளும்” – வைத்திய கலாநிதி  இ.லம்போதரன்

ஐயந்தெளிதல்அரங்கு

நாள்: 27-10-2016
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம்
Unit 7, 5633, Finch Avenue East,
Scarborough,
M1B 5k9

Continue Reading →

மெல்பேர்ணில் பனைமரக்காடு – முழுநீளத் திரைப்படம்

பனைமரக்காடு!ஈழத்து திரைப்படங்களில் ஒன்றான பனைமரக்காடு என்ற திரைப்படத்தின் முதலாவது காட்சி மெல்பேர்ணில் எதிர்வரும் ஒக்ரோபர் 6 ஆம் திகதி மாலை 3 மணிக்கும், சிட்னியில் ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 2 மணிக்கும், பின்னர் மாலை 5 மணிக்கும் என இரண்டு காட்சிகளாகவும் திரையிடப்படவுள்ளது. அதேவேளை ஒக்ரோபர் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தின் ராஜா திரையரங்கில் சிறப்பு விருந்தினர்களுக்கான மூன்று காட்சிகள் காண்பிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து ஈழத்தின் அனைத்து பகுதிகளிலும் தமிழர் புலம்பெயர் தேசங்களிலும் திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மெல்பேர்ண் காட்சி விபரம்
காலம்: ஒக்ரோபர் 6 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு
இடம்: Menzies Building E365, Monash University, Wellington Road, Clayton Victoria
அன்பளிப்பு: $10 வெள்ளிகள்

தாயகத்திலிருந்து புதிய வெளியீடாக கேசவராஜனின் இயக்கத்தில் வெளிவரும், பனைமரக்காடு என்ற முழுநீள திரைப்படமானது போரிற்கு பின்னரான காலத்தில், தமிழ்மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். ஈழத்து படைப்புக்களமானது உரியவகையில் ஆதரவு வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படாது போனால், எமது தாயகத்தின் உயிர்ப்பான வரலாறுகள் மறைக்கப்பட்டுவிடும். இருக்கின்ற இடைவெளியில் எமது மக்களின் உணர்வுகள் சிலவற்றை சொல்லலாம், சிலவற்றை சொல்லாமல் சொல்லலாம் எனச்சொல்லும் இயக்குநர், 1986 இல் “தாயகமே தாகம்” என்ற திரைப்படத்துடன் அறிமுகமாகி, தமிழீழ திரைப்படத்துறையின் ஊடாக பிரபலமான “பிஞ்சுமனம்”, “திசைகள் வெளிக்கும்”, கடற்புலிகளின் “கடலோரக்காற்று”, “அம்மா நலமா” என்ற திரைப்படங்களையும் பல குறும்படங்களையும் இயக்கியவர்.

Continue Reading →