கவிதை: நலம் விளைப்பாய் சித்திரையே !

சித்திரைப்புத்தாண்டு!

புத்தாடை  வாங்கிடுவோம்
புத்துணர்வு பெற்றிடுவோம்
முத்தான முறுவலுடன்
சித்திரையை காத்திருப்போம்
எத்தனையோ சித்திரைகள்
எம்வாழ்வில்  வந்தாலும்
அத்தனையும் அடிமனதில்
ஆழமாய்   பதிந்திருக்கும்

சொத்துள்ளார் சுகங்காண்பர்
சொத்தில்லார் சுகங்காணார்
எத்தனையோ துயரங்கள்
இருந்தேங்க வைக்கிறது
அத்தனையும் பறந்தோட
சித்திரைதான் உதவுமென
நம்பிடுவார் வாழ்வினிலே
நலம்விளைப்பாய் சித்திரையே

Continue Reading →

கவிதை: சித்திரை மலர்க! வாழ்க!

சித்திரைப்புத்தாண்டு!

மானிடம் மலர்க! மண்ணின்
மனிதமும் மலர்க! தெய்வ
வானியல் வருக! மாந்தர்
மறைமொழி வருக! நற்றாள்
பூநிறைத் தழகு கொள்ளும்
புதுவயல் வருக! கன்று
பால்நிறை மடியை முட்டிப்
பருகியே திளைப்ப தாக!

செந்தமிழ் சிறப்ப தாக
சிந்தியல் செழிப்ப தாக
எந்தையர் தமிழர் நாவில்
இறைமொழி துதிப்ப தாக
விந்தைகள் உலகப் பந்தின்
விருட்சமும் வளர்வ தாக
அந்தகர் விழிகள் வெட்டி
அகிலமும் காண்ப தாக!

Continue Reading →