ஆய்வு: அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் – பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவு கருத்தியல்

ஆய்வு: அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் – பத்தொன்பதாம் நூற்றாண்டு பகுத்தறிவு கருத்தியல்காலனிய ஆட்சி காலத்தில் இந்து மதத்தின் பண்பாட்டுச் சூழலையும் தகவமைப்புக்களையும் உடைத்தெறிந்து விமர்சனத்துக்குட்படுத்திய நூல் இந்துமத ஆசார ஆபாச தரிசினி. 1882 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நூல் இந்து மதத்தினைக் கடுமையான முறையில் எதிர்த்தும் அ.வெங்கடாசலனார் பொது வெளியில் அடையாளம் தெரியாத நபராகவே இருந்திருக்கிறார்.

இவரது சிந்தனைப்போக்கு 16 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் மலர்ந்த நவீன அறிவு மரபினையொட்டியதாகவும் சமூகத்தின் அத்தனை செயல்பாடுகளுக்கும் அறிவு தெளிவினைப் பெற வேண்டிய நோக்கத்தினைக் கொண்டதாகவும் இருக்கிறது. மத்திய கால ஐரோப்பாவில் சமூகத்தின் அனைத்து நடைமுறைகளுக்கான விளக்கங்களும் மதத்தில் இருந்து பெறப்பட்டன. ஆனால் 16 ஆம் நூற்றாண்டிற்குப் பின் தத்துவம், மதம், சமூகம் என எல்லாவற்றிற்குமான விளக்கங்கள் விஞ்ஞானங்களில் இருந்து தெளிவு பெற வேண்டும் என்ற தூண்டுகோளை விதைத்தவர் தெகார்த்.

‘பதினாறாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோன்றிய முக்கியத் தத்துவவாதிகளை அனுபவ வாதிகள், அறிவுவாதிகள் என வகைப்படுத்தலாம். அனுபவவாதிகள் புலனுணர்வுக்கும் புலனறிவுக்கும் முதன்மை தந்தார்கள். அறிவுவாதிகளோ மனித மனத்தில் உள்ளார்ததும், புறஉலகைப் புரிந்துகொண்டு விளக்கவல்லதும் எனத் தாங்கள் கருதிய அறிவுக்கு முதன்மை வழங்கினர். (எஸ்.வி.ராஜதுரை, இருத்தலியமும் மார்க்ஸியமும், விடியல், ப. 53) இரண்டு அணுமுறையாளர்களும் சமுதாயம், மனிதன், இயற்கை ஆகியன பற்றி அன்றைய கத்தோலிக்கத் திருச்சபை கூறிவந்த பொதுவான விடயங்களை விமர்சித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவரை உலகத்தில் இருந்துவந்த கருத்தியல்களுக்கான மூல ஆதாரங்கள் மதத்தில் இருந்துதான் பெறப்பட்டிருக்கின்றன. இத்தகைய அதிகாரத்துவத்தைப் பெயர்த்துப்போட்ட நிகழ்வுகள் கோப்பர்நிக்கஸ், கலிலியோ, நியூட்டனில் இருந்து காண்ட் அளவிலான தத்துவ விளக்கங்களாக வளர்ச்சியடைந்தது.

இதேபோன்றதொரு உறுதியான சமூக ஊட்டாட்டங்கள் இந்தியச் சமூகத்தில் நடைபெறவில்லையென்றாலும் காலம் கடந்துவிட்ட காலனியக்கால கல்வி வாய்ப்புகளிலும் காலனியத்தின் நிர்வாகம் மற்றும் தொழில் முறைகளினால் இந்தியாவில் சீர்த்திருத்த அமைப்புகளாக உருப்பெற்றன. காலனிய காலத்தில் உண்டான சமூகச் சீர்த்திருத்த அமைப்புகள் பெரும்பாலும் மதத்தைப் புதிய நெறிமுறைகளில் வளர்ப்பதாகத்தான் இருந்தனவேயன்றி விஞ்ஞானப் பார்வையைக் கொண்டதாக இல்லை. இப்படியிருந்த ஒரு சமூகத்தில்தான் அ.வெங்கடாசலனார் இந்து மதத்தின் சடங்குகள், மத நம்பிக்கைகள், ஒழுக்க விதிகளைக் கட்டவிழ்த்து தகர்க்கிறார்.

காலனியத்திற்கு முன்பிருந்த ஆட்சி முறைகள் இத்தகைய சிந்தனை முறைக்கு வழிவகுக்கவில்லை. காரணம் தமிழக நிலங்கள் பாளையங்களாகவும் ஜமீன்களாகவும் பல படித்தான போர்களையும் வரி அழுத்தங்களையும் கொண்டிருந்த சமூகப் பின்னணியில் இனம் சார்ந்த ஒற்றுமை எண்ணங்களைக் காலனிய ஆட்சியால்தான் விதைக்க முடிந்தது.

Continue Reading →

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில் நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்தமிழரின் பண்பாட்டு மரபாக இருந்து வருவது நடுகல் வழிபாடாகும். இவ்வழிபாடு இன்று ஆண், பெண்  இரண்டு தெய்வங்களுக்கும் நிகழ்த்தப்படுகிறது. ஆனால் தொடக்க காலத்தில் நடுகல் வழிபாடு போரில் உயிர் நீத்த வீரனுக்கும், ஆநிரை மீட்டலின் போது இறந்த வீரனுக்காகவும்  நடுகல் எழுப்பப் பட்டு வழிபடப்பட்டன. இம்மரபு பண்பாட்டில் தொடா்மரபாக இருப்பினும் அதன் தன்மை சிதையும் நிலையில் இருக்கிறது.    நடுகல், நெடுங்கல் என்று பொதுப் பெயா் கொண்டு அழைக்கப்பட்ட நெடுங்கல்கள் எல்லாம் மாற்றுப் பெயா்கள் (நட்டுக்கல் முனியாண்டி, கருப்பசாமி கல், முனிஸ்வரன் கல்) இட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. அந்நெடுங்கல்லுக்கான தள அதிகாரம் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு முக்கியத்துவப் படுத்தப்படுகிறது. அதில் வழிபாடு நடத்தும் அதிகாரமும் அவா்களுக்கு உரித்தானதாகக் கொள்ளப்படுகிறது. இம்மரபு தொடா்மரபாக பண்பாட்டில் நிகழ்ந்து வந்தால் அதன் தொண்மை மறைக்கபடும். அதன் பெயா் மாற்றமும் மாற்றப்படும். அது குறித்து  களஆய்வு செய்து வெளியிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகம்.

நெடுங்கல் நடும் மரபு
“பெருங்கற்காலப் பண்பாட்டின் தொடக்கம் காலம் கி.மு. ஆயிரம் ஆகும். இப்பண்பாடு தமிழகத்தில் வடக்கிலிருந்து தெற்காக முன்னேறிச்சென்றதாகும். அவ்வாறு செல்லச் செல்ல இதன் காலம் பின்னோக்கிச் சென்றன என்று தொல்லியல் அறிஞர் க. ராஜன் அவர்கள் கூறுகிறார்.”1 ஏனென்றால் வடக்கில் தகடூரிலிருந்து கொங்கு நாடு வரையிலுள்ள பகுதிகளில் தான் அதிகமான நடுகற்கள் கிடைத்துள்ளன. தெற்கு மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊா்களுக்கு இடம் பெயரும்போது அதிகமாக முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. இத்தன்மையைக் கொண்டு தென்பகுதிகளில் கிடைக்கும் நடுகல்கள் அனைத்தும் காலத்தால் பிந்தியவை எனக் கருதமுடிகிறது. பெரும்பான்மையான தொல்லியல் அறிஞகர்கள் இக்கருத்துக்களுக்கு உடன்படுகின்றனர்.

தமிழகத்தில் கிடைக்கின்ற பெருங்கற்கால சின்னங்களில் நெடுங்கல், நடுகல், கற்பதுக்கை ஆகிய அனைத்தும் தகடூர் பகுதியிலும், கொங்கு நாட்டில் கொடுமணல் பகுதிகளிலும் அதிகம் கிடைத்துள்ளன. தென்னாட்டில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, விருதுநகா் மாவட்டம் குன்னூர் போன்ற ஊர்களிலும் இந்நடுகல்கள் நெடுங்கல்லாகக் கிடைத்துள்ளன. இவ்விரு பகுதிகளும் குறிஞ்சி, முல்லை நிலத்தோடு தொடர்பு கொண்டுள்ள நிலமாகும். இந்நிலங்கள் கால்நடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. சங்க காலத்தில் முல்ல நிலத்தில் ஏற்பட்ட ஆநிரை கவர்தல், கவா்ந்த பசுக்களை மீட்டல் இவைகளினால் இறப்பவர்க்கு நடுகல் நடுவதும், கற்பதுக்கை அமைப்பதும் பண்டைய மரபாக இருந்துள்ளன. இது குறித்து சங்க இலக்கியமும் தொல்காப்பியமும் திறம்படக் உறுதி படுத்துகின்றன.

“பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் குறித்து அன்மையில் களஆய்வு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர்கள் கொங்கு நாட்டில்  அதிகமான பெருங்கற்காலச் சின்னங்களும் அதன் அருகிலே நீண்ட நெடிய நெடுங்கல்லும் இருப்பதை கண்டறிந்தனர்.”2 நினைவுச் சின்னங்கள் அமைக்கும்போது அதன் அருகில் நீண்ட நெடிய நெடுங்கல் அடையாளமாக அமைக்கும் பழக்கத்தையும் பண்டையோர் மரபாகக் கொண்டுள்ளதுடன் அந்நெடுங்கல்லிற்கு நீர்ப்படையிட்டு படையல்கள் படைத்து வழிபட்டு வந்துள்ளனர். ஆகையால் வடபகுதியில் நெடுங்கல்லுக்குச் செய்துவந்த சடங்குகள் போன்று பாண்டிய நாட்டில் கிடைத்த நெடுங்கல்லிற்கும் இச்சடங்குகள் முறையாகச் செய்து வந்துள்ளனர். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் வடக்கில் இமய மலையிலிருந்து கண்ணகிக்கு கல்லெடுத்து கங்கையில் நீராட்டி சேரநாட்டில் கோவில் அமைத்து வழிபட்டு வந்தான் என்று சிலப்பதிகாரம் வாயிலாக அறியமுடிகிறது. ஆகையால் நடுகல் நட்டு வழிபடும் மரபு வடக்கிலிருந்தே தொடங்கப் பட்டவையாகும்.

Continue Reading →

தமிழ் சினிமாவும் இலக்கியமும் ரசனையும்! இலக்கியப்பிரதிகளை திரைப்படமாக்குவதில் எதிர்நோக்கப்படும் சவால்களும் சமரசங்களும்! ( அண்மையில் மறைந்த எழுத்தாளரும் திரைப்பட வசனகர்த்தாவும் இயக்குநருமான மகேந்திரன் நினைவாக எழுதப்படும் குறிப்புகள்)

எழுத்தாளர் முருகபூபதி -அனைவரிடமும்    ஏதோ   ஒரு  கதையோ   அல்லது   பல கதைகளோ இருக்கும்.     ஆனால்,  இவர்களில்   சிலர்தான்    அதனை   எழுத்தில்   தருகிறார்கள்.   மற்றவர்கள்    உரையாடலின் பொழுது சொல்கிறார்கள்.   உரையாடல்களில்   ஒருவர்  சொன்ன  கதை   கேட்கப்பட்ட மற்றும்   ஒருவரினால்  வேறு  ஒரு   இடத்துக்கு காவிச்செல்லப்படும் பொழுது   அதன்   வடிவம்   மாறிவிடும்.   கண்வைத்து  காது  வைத்து மெருகூட்டி   வதந்தியாகவே   அது   பரவிவிடும்.  கேட்கப்பட்ட  வதந்தியின் அடிப்படையிலும்   ஒரு   புதிய  கதை  உருவாகிவிடும். உதாரணத்துக்கு – அவுஸ்திரேலியாவில்   ஒரு   சம்பவம்   நடந்தால்   அதனை தொலைக்காட்சி   ஊடகங்களில்   பார்த்து –   வானொலிகளில்  கேட்டு – பத்திரிகைகளில்   படித்துவிட்டு  அச்சம்பவம்   பற்றி   எதுவுமே    தெரியாத வீட்டுக்கு   வந்த   உறவினரிடம்   அல்லது  நண்பரிடம் அதனைச்சொல்லும்பொழுது   பார்த்த – கேட்ட – வாசித்த   அச்சம்பவம்   வேறு ஒரு   வடிவத்தில்   ஒரு   கதையாகவே   பின்னப்பட்டு   சொல்லப்படுவது அன்றாட   நிகழ்ச்சி.

சினிமாவுக்கு   கதை   கிடைப்பதும்  இப்படித்தான்.   முன்னர்   இந்தியாவில் பல   திரைப்பட   தயாரிப்பாளர்கள்   தத்தமக்கென  ஒரு  கதை  இலாகாவே வைத்திருந்தார்கள்.  உதாரணமாக   மனிதர்களை – மிருகங்களை நாயகராக்கியதுடன்   மட்டும்   நின்றுவிடாது    தெய்வங்களின் அதிசயங்களையும்   தனது   படங்களில்   சொன்ன  சின்னப்பாதேவர் – சந்திரலேகா  –   அவ்வையார்  –   வஞ்சிக்கோட்டை   வாலிபன்      திரைப்படங்களை    எடுத்த   ஜெமினி   வாசன்  முதலானோர்   ஒரு கதை   இலாகாவை   வைத்திருந்தனர். ஆனால்,   சுஜாதா சினி    ஆர்ட்ஸ்   என்ற   தயாரிப்பு    நிறுவனத்தை வைத்திருந்த   நடிகர்   பாலாஜி   அவ்வாறெல்லாம்   கதை    இலாகா வைத்திராமல்    வடக்கே   சென்று     ஹிந்திப்படங்களைப் பார்த்துவிட்டு   வந்து,    அந்தப்படங்களின்   அடிப்படையில்    ஏ.எல். நாராயணன்    என்பவரிடம் கதை    சொல்லி   வசனம்   எழுதவைத்து  படம்   எடுத்துவிடுவார்.

தமிழ்    சினிமாவுக்கு  கதைகள்   கிடைத்த   வரலாறு    மிகவும் சுவாரசியமானது. சினிமா    இந்த    நூற்றாண்டில்   மட்டுமல்ல    அது    உருவான    நூற்றாண்டு முதலே   வலிமையான    ஊடகமாகத்தான்    வளர்ந்து    வந்திருக்கிறது. தொடக்க காலத்தில்   சினிமா    பேசவில்லை.   தமிழ்   சினிமா     என்னும்பொழுது  இந்தியாவைத்தான்  முன்னோடியாக  சுட்டிக்காட்டும் நிலையிலிருக்கின்றோம். இந்திய    மொழிகளில்    தமிழும்   ஒன்றென்பதனால்   இந்திய   சினிமா 1931 இல்   பேசத்தொடங்கியதனால்   நாம்   இந்தியாவைத்தவிர்த்து   தமிழ்   சினிமா பற்றி   பேச முடியாது. ஆரம்பத்தில்    சொன்னவாறு    ஒவ்வொரு    மனிதரிடத்திலும்    கதைகள் இருந்தன.    இருக்கின்றன.     இருக்கும். சிறுகதையிலும்   நாவலிலும்   சொல்லப்பட்ட    அவரவர்    கதைகள் நாடகமாகும்பொழுதும்    திரைப்படமாகும்  பொழுதும்   அதன்   வடிவம் மாறித்தான்  போய்விடுகிறது. வால்மீகி     ஒரு வேடன்.   மான்  –  மரை பறவைகளை     வேட்டையாடி    வாழ்ந்த   அவர்   ஒரு வழிப்பறித்திருடனாகவும்   வாழ்ந்திருக்கிறார். எப்பொழுதும்   ஒரு   மிருகத்தை   வேட்டையாடுவதற்காக    அதனைத்துரத்திக்கொண்டு   ஓடும்பொழுதும்     மரா   மரா   என்றுதான்   சத்தம்   எழுப்பிக்கொண்டு    ஓடுவாராம்.    மரா     என்றால்    கொல்.    கொலை செய்.    என்று    அர்த்தம்.  ஒருநாள்    வால்மீகி,      அந்தக் காட்டுவழியாக    மரா   மரா எனச்சொல்லிக்கொண்டு   ஓடியபொழுது    அவரை    குறுக்கிட்டு    மறித்த   ஒரு    முனிவர்   –  இங்கே    வா.    மரா     மரா     என்று     சொல்லிக்கொண்டு    ஒரு உயிரைக்கொல்ல      ஓடுகிறாயே,   தொடர்ந்து    மரா    மரா என்று சொல்   என்றாராம். வால்மீகியும்    மரா    மரா    மரா    மரா    என்றாராம்.    எங்கே சொல்லிப்பாருங்கள்.    ராம    ராம   ராம    என்று    அந்தத்தொனி    உங்களை அறியாமலேயே    மாறும். ராமனின்    கதையை   எழுதப்பா?   என்று   சொல்லி   ராமனின்   கதையை வால்மீகிக்குச்சொல்லி,    அவரது   வேட்டையாடும் –   கொள்ளையடிக்கும் பழக்கத்தையே    மாற்றினாராம்    அந்த   முனிவர். இராமாயணம்    எழுதினார் வால்மீகி.     அதற்கு    இலக்கியச்சுவை ஏற்றினார்     கம்பர்.    எமக்கு    கம்பராமாயணம்   கிடைத்தது.    காலப்போக்கில்   நாம்    இந்த   இலக்கிய    காவியத்திலிருந்து சம்பூர்ண ராமாயணம்    –    லவ   குசா   முதலான சினிமாக்களைப்பார்த்தோம்.    தற்காலத்தில்    இராமாயணம்    பல அங்கங்களில்   தொலைக்காட்சி   சீரியலாகவும்    வந்துள்ளது.     ஹிந்தியில் எடுக்கப்பட்டு   ஏனைய   இந்திய   மொழிகளில்   டப்பிங்    செய்யப்படுகிறது.   இதற்கு    நல்ல   வரவேற்பும்    இருக்கிறது.

Continue Reading →