கவிதை: மறக்கப்பட்டவர்களின் துயரம்!

-அண்மையில் இலங்கையில்  கிறிஸ்த்த ஆலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற குண்டுத்தாக்குதல்களில் பலியாகியவர்கள், பாதிக்கப்பட்டவர்களை முன்வைத்த எண்ணங்கள் –

குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள்

ஊடகங்கள் உங்களை மறந்து விட்டன.
ஊடகங்கள் மட்டுமா
உங்களைக் காக்க வேண்டிய அரசும்
உங்களைக் காக்க வில்லை.
ஊடகங்களுக்கோ உங்களை அழித்தவர்கள்
உங்களைக் காயப்படுத்தியவர்கள் பற்றி
எழுதுவதற்கே நேரம் போதவில்லை.
உங்களைப்பற்றி எழுதுவதற்கு எங்கே நேரம்
உள்ளதவர்களுக்கு.

Continue Reading →