ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – III

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காலனை உதைத்த தொன்மம்

திருஞானசம்பந்தா் பாடல்களில் சிவன் மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த காலனை, உதைத்த தொன்மம் மிகுதியான இடங்களில் வருகிறது.

“காலற் செற்ற மறையவன்”1

“காலன் தன்னை ஒல்க உதைத்தருளி”2

“காலன் தறில் அறச் சாடிய கடவுள்”3
“காலன் மடியவே”4

“கூற்றமுதைத்த குழகன்”5
“கூற்றுதை செய்த”6

போன்றவை முதல்திருமுறையில் இடம்பெற்ற காலனை உதைத்த தொன்மக் குறிப்புகளில் சிலவாகும். இவை ஏன் திருஞானசம்பந்தரால் திரும்பத் திரும்பத் கூறப்படுகின்றன என்பதை ஆராய்ந்து பார்த்தால் சில விளக்கங்களைப் பெற முடியும்.

வடமொழியில் யமன் என்றும் தமிழகத்தில் கூற்றுவன் என்றும் கூறப்படும் தெய்வமே தொல்பழம் சமயத் தெய்வங்களில் ஒன்றாகச் சுடலை மாடன் என்ற பெயரில் வணங்கப்பட்டது. மக்களின் சமய வாழ்வின் தொடக்கம் மரணத்தைப் பற்றிய அச்சம் அதன் பிறகான வாழ்வு பற்றிய சிந்தனையை அடியொற்றியே இருந்திருக்க வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரையில் நடுகல் வணக்கம் எனப்படும் நீத்தார் வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்து வந்துள்ளது. அதனைத் தொடா்ந்து தமிழ்மக்கள் கூற்றுவனைக் கடவுளாக, வணக்கத்திற்குரியவனாகப் போற்றியிருக்கின்றனா்.

சுடுகாட்டுப் பகுதிகளில் மிகுதியாகக் காணப்படும் கள்ளி நிழலில் அமா்ந்துள்ள ஒரு கடவுள் பற்றிய குறிப்பு புறநானூற்றில் காணப்படுகிறது (புறம்.260). இது சுடலை மாடனைக் குறிப்பதாக இருக்கலாம்7 என்ற க. கோதண்டராமன் கூறுவார்.

Continue Reading →

ஆய்வு: திருஞானசம்பந்தர் பாடல்களில் சிவனின் அட்டவீரட்டத் தொன்மங்கள் – II

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?காமனை எரித்த தொன்மம்

திருஞானசம்பந்தா் பாடல்களில் காமனை எரித்த கதை பல பாடல்களில் இடம் பெறுகிறது. பல்லவா் கால பக்தி இயக்கம் சமண-பௌத்தத்தைக் கடுமையாக எதிர்த்தது. என்பதும் அச்சமயக் கொள்கைகளுக்கு நோ் எதிராகச் சில கருத்துக்களை முன்னிறுத்தின என்பதும் பக்தி இயக்க கால சமய வரலாற்றை ஆராயப் புலப்படுகிறது. சமணமும்-பௌத்தமும் இல்லறம் மறுத்துத் துறவறம் பேசும் கொள்கையுடையனவாக இருக்க வைதீகம் மணவாழ்க்கையை வலியுறுத்தி அதிலிருந்தே துறவறம் மேற்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்தது. புத்தரும், மகாவீரரும் காமத்தைக் கடந்தவா்கள் என சமண-பௌத்தம் முன்வைக்க, காமத்தைக் கொன்றவன் என்ற தொன்மத்தைப் பக்தி இயக்கவாதிகள் முன்வைத்தனா். திருஞானசம்பந்தர் பாடல்களில் காமனைக் கொன்ற தொன்மம் பரவலாக எடுத்துச் சொல்லப்பட்டாலும் சிவன் உமையோடு இன்பம் காண்பதையும் பரவலாகக் கூறிச் செல்கிறார்.

“கண்ணிறைந்தவிழி யின்னழலால்;வரு
காமன்னுயிர் வீட்டிப்
பெண்ணிறைந்த வொரு பான் மகிழ்வெய்திய
பெம்மானுறை கோயில்”
1

காமனைத் தன் கண்ணால் எரித்துச் சாம்பலாக்கிய சிவபெருமான் உமையம்மையோடு மகிழ்ந்தும் இருக்கிறார் எனும் கருத்து மேற்கண்ட பாடலடிகளால் விளங்குகிறது.

மேற்கண்ட பாடலடிகளால் சிவன் உமையம்மையோடு காமத்தைத் துய்ப்பவனாகவும் அதே சமயத்தில் காமத்தைக் கொன்றவனாகவும் காட்சிப்படுத்தப்படுகிறார். வைதீக நெறியில் பிரம்மச்சரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்ற படிநிலைகள் துறவறத்திற்கு வலியுறுத்தப்படுகின்றன. அதாவது ஒருவன் பிரம்மச்சரியனாக இருந்து அதன்பின் இல்லற வாழ்க்கையைத் துய்த்து அதன்பிறகு கானகம் சென்று தவம் புரிந்து இறுதியிலேயே துறவை மேற்கொள்ள முடியும். அதனையொட்டியே மனைவாழ்க்கையிலிருந்தே துறவறத்தைத் திருஞானசம்பந்தரும் போற்றுவதைக் காணமுடிகின்றது. அதனை வெளிப்படுத்தவே இத்தொன்மங்கள் இடம்பெறுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் காமத்தையும் காதலையும் கொண்டாடிய தமிழ்ச் சமூகத்தில் இல்லறத்தை வெறுக்கும் சமண பௌத்தக் கொள்கைகளைவிட இல்லறத்தை வலியுறுத்தும் சைவக் கொள்கைகள் உவப்பபூட்டுவனவாக இருந்திருக்கலாம். சிலம்பு நா. செல்வராசு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

Continue Reading →

ஆய்வு: நற்றிணையில் மனிதநேய உணர்வுகள்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?முன்னுரை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையுடையது சங்கச் செவ்வியல் காலம். பாட்டும் தொகையுமாகிய சங்க நூல்களுள் நற்றிணை முதலிடம் பெற்றுள்ளது. நற்றிணை நானூறு என வழங்கப்பெறும் நற்றிணைப் பாடல்களில் சங்கச் சான்றோர்களின் மனிதநேய உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றது. மனிதன் சகமனிதனிடத்து வெளிப்படுத்தும் மனிதநேயம் மனிதன் மனிதன் அல்லாத பிறஉயிர்களிடத்து காட்டும் மனிதநேயம் என்று மனித மனத்தில் பொதிந்து கிடக்கும் அன்பு, அருள், இரக்கம், அரவணைப்பின் மூலமாக வெளிப்படுகின்ற மனிதநேயம் நற்றிணை முழுவதும் பரந்து காணப்படுகிறது. நற்றிணை வழி வெளிப்பட்டுள்ள சங்கச் சான்றோர்களின் மனிதநேய உணர்வுகளை வெளிக்காண்பிப்பதாக இக்கட்டுரை அமைகிறது. 

அன்புடைமை
உலகம் நிலைபெற்று நீடுவாழ்வதற்கு அன்பு தலையாய ஒன்று. பிற உயிர்களிடத்து அன்பு செலுத்தி அரவைணைத்து வாழுகின்ற வாழ்க்கையில் அனைத்து உயிர்களும் இன்பம் எய்துகிறது. நற்றிணையில் தலைவி தன் சுற்றத்தாரிடத்தும் ஆயத்தாரிடத்தும் கொள்கின்ற அன்பின் மிகுதி அவளுக்கிருக்கின்ற மனிதநேயத்தை வெளிப்படுத்துகிறது. உடன்போக்கிற்காகத் துணிந்த தலைவி பிறர் அறிந்திடாதவாறு தம் கால்களிடத்து அணிந்திருந்த சிலம்பினைக் கழற்றி விளையாட்டுப் பொருட்கள் நிறைந்த கூடையில் வைப்பதற்குச் செல்கிறாள். அப்பொழுது அவளையும் அறியாமல் அவள் கண்கள் நீரைச் சொரிந்தன. விடியும்பொழுது தான் (உடன்போகிவிட்டால்) இல்லையென்பதை வரிகள் மேலிட்ட பந்தும் சிலம்பும் உணர்த்தும். அதனைக் காணும்போதெல்லாம் தன் சுற்றத்தினரும் ஆயத்தினரும் துன்பமுற்று வருந்துவர் என்று உடன்போவதைத் தவிர்த்தாள். இச்செய்தியை,

அரியமை சிலம்பு கழீஇப் பன்மாண் 
வரிப்புணை பந்தொடு வைஇய செல்வோள்
இவைகாண் டோறும் நோவர் மாதோ 
அளியரோ அளியர்என் ஆயத் தோர் (நற். பா. 12)

என்னும் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

உள்ளத்தின் உணர்வுப் பெருக்காகத் திகழும் அன்பைக் கட்டுப்படுத்துவதற்கும் மறைப்பதற்கும் இயலாது என்பதை வள்ளுவரும்

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கண்ணீர் புசல் தரும் (குறள். 71)

என்னும் குறட்பாவின் வழி அன்பின் மிகுதியைக் குறிப்பிடுகின்றார். தலைவி உடன்போகாமைக்குக் காரணம் அவள் சுற்றத்தினர் மீதும் ஆயத்தினர் மீதும் கொண்டிருந்த அன்பு போற்றுகின்ற மனிதநேயப் பண்பாகும்.

Continue Reading →

ஆய்வு: செவ்வியல், நாட்டார் சமயங்களில் மோகினித்தொன்மம்

ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?‘தன்னையறிதல்’ என்பது தத்துவத்தளத்தில் தொடர்ந்து விவாதத்திற்குள்ளாகி வருகின்ற கருத்தாகும். சுயத்தை அறிந்து கொள்வது, சுயத்தை வரையறை செய்வது என்பதெல்லாம் மற்றவைகளை (Others) அறிந்து கொள்வதோடும், மற்றவைகளை வரையறை செய்வதோடும் தொடர்புடைய செயல்பாடாகவே இருப்பதை இன்றைய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே ஒவ்வொரு மனிதத்தன்னிலையும் தனது இருப்பை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு, மற்றவைகளைத் தனக்கு ஏற்றாற்போல் வரையறை செய்வதில் கவனமாக செயல்படுகின்றன.

மனித சமுதாய வரலாறு வர்க்கப் போராட்டத்தின் வரலாறாகவே இருந்துவந்துள்ளது என்பதை மார்க்ஸியர்கள் கண்டுணர்ந்த பிறகு, பெண்ணியம், தலித்தியம், பின்காலனியம் போன்ற சிந்தனைகளும் மானுட வரலாற்றில் நடைபெற்றிருக்கின்ற ஒடுக்குமுறைகளை, போராட்டங்களைப் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தியிருக்கின்றன. சமூக ஒடுக்குமுறைகள் ஆயுதப்போராட்டங்கள் மூலமாக மட்டுமல்லாமல், கருத்தியல் ரீதியாகவும் நடைபெறுவதை மேற்கண்ட சிந்தனைகள் சுட்டிக்காட்டியபிறகு மனித சமுதாயத்தின் கருத்தியல் சட்டங்களை ஐயத்துடனேயே அணுக வேண்டியிருக்கிறது என்பது உண்மையாகும்.

மேட்டிமைச்சக்திகளால், ஒடுக்கப்பட்டோர் மீது அதிகாரத்தை செலுத்துகின்ற வகையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற கருத்தியல் சட்டகங்கள் ஆயுதப்போராட்டத்திற்கு மாற்றாக ‘பண்பாட்டு அரசியலை’ (Cultural Politics) நிகழ்த்துகின்றன என்று இத்தாலிய மார்க்ஸிய அறிஞர் அந்தோனியா கிராம்சி கூறும் கருத்துக்கள் இன்றைய நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

இந்தியச்சூழலில் பால் அடிப்படையிலும், மத அடிப்படையிலும், இன அடிப்படையிலும், சாதி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ஒடுக்குமுறைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த ஒடுக்குமுறைகளுக்கான கருத்தியல் சட்டங்களை வழங்குகின்ற பணியைச் செய்பவையாக இந்து மதத்தின் பல்வேறு புனிதப்பிரதிகள் திகழ்கின்றன. இந்தப் புனிதப்பிரதிகளின் கருத்தியல் மேலாண்மையை அம்பேத்கர், பெரியார் போன்ற அறிஞர்கள் பல்வேறு தளங்களில் விமர்சனப்படுத்தியுள்ள நிலையில், ஆண் எனும் தன்னிலை தன்னுடைய மற்றமையாகக் கருதும், பெண்ணின் உடலைப் பெறுதல் எனும் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் மோகினித்தொன்மத்தைச் செவ்வியல், நாட்டார் சமயங்களின் பின்புலத்தில் இக்கட்டுரை ஆராய்கிறது.

உடல்களின் மாற்றம் பற்றிய மீமானுடக்கதைகள் தொன்மங்களிலும் நாட்டார்வழக்காறுகளிலும் பரவலாகக் காணப்படுகின்றன என்றாலும், இவைகளைப்பற்றிய ஆய்வுகள் குறைந்த அளவிலேயே நடைபெற்றிருக்கின்றன. அந்தவகையில் மேல்நாட்டு ஆய்வாளர் பிரந்தாபெக் மற்றும் ஏ.கே.ராமனுஜன் ஆகியோர் சாதிய அடிப்படையில் உடல்கள் பெறும் மாற்றத்தைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும், மானுடவியல் பேராசிரியர் பக்தவச்சல பாரதி நரசிம்ம அவதாரம், பாகம்பிரியாள் ஆகியவைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும், பேராசிரியர் அரங்க நலங்கிள்ளி உளப்பகுப்பாய்வு அடிப்படையில் பிள்ளையார் தொன்மத்தைப்பற்றி மேற்கொண்ட ஆய்வும் குறிப்பிடத்தக்க முயற்சிகளாகும்.

Continue Reading →