காலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு!

காலத்தால் அழியாத கானங்கள்: அபிமான் திரைப்படப்பாடல்கள் இரண்டு!1. காலத்தால் அழியாத கானங்கள் : ‘அபுது கே துமசி கரு குஷி அபுனி’

ஜெயாபாதுரி, லதா மங்கேஷ்கார், எஸ்.டி.பர்மன் & மஜ்ரூத் சுல்தான்பூரி கூட்டணியில் உருவான இன்னுமொரு நெஞ்சிற்கினிய ‘அபிமான்’ பாடல் ‘அபுது கே துமஷி கரு குஷி அபுனி’. filmy Quotes இணையத்தளத்திலிருந்த இப்பாடலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்பினைத் தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கின்றேன்.

படம்: அபிமான்
இசை: எஸ்.டி.பர்மன்
பாடகர்: லதா மங்கேஷ்கார்
பாடல் வரிகள்: மஜ்ரூத் சுல்தான்பூரி
https://www.youtube.com/watch?v=emKJ5_cMEHk

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்
என் வாழ்க்கை இருப்பது உனக்குத் தியாகம் செய்வதற்காகத்தான்.
இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

இப்போழுது எனது இதயமானது உன்மீது பித்துப்பிடித்துள்ளது.
இப்போழுது எனது இதயமானது உன்மீது பித்துப்பிடித்துள்ளது.
உலகம் என்ன கூறுகின்றது என்பது பற்றி எனக்குக் கவலையில்லை.
என் உறவினர்கள் யாரும் என்னைப்பற்றி என்ன கூறுகின்றார்கள் என்பது பற்றி.
எனக்குக் கவலையில்லை.

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

உன்மீதான காதலால் என் பெயரானது அதிக அளவில் கெட்டு விட்டது.
உன்மீதான காதலால் என் பெயரானது அதிக அளவில் கெட்டு விட்டது.
நான் உன்னுடன் இணைந்து புகழும் பெற்றுள்ளேன்.
யாருக்குத் தெரியும் எனது அமைதியின்மை என்னை எங்கே கொண்டு செல்லுமென்று.

இப்பொழுது என்னுடைய இன்பமெல்லாம் உன்னுடன்தான்..

Continue Reading →

மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக ‘புவி எங்கும் தமிழ்க் கவிதை’

மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியீடாக 'புவி எங்கும் தமிழ்க் கவிதை'எழுத்தாளர் மாலன்சாகித்திய அகாதெமி (சென்னை) நிறுவனத்தினர் எழுத்தாளர் மாலன் தொகுப்பில் சாகித்திய அகாதெமி வெளியிட்டிருந்த ‘புவி எங்கும் தமிழ்க் கவிதை’ நூலின் நான்கு பிரதிகளைத் தபால் மூலம் அனுப்பியிருந்தார்கள். அவர்களுக்கு நன்றி.


உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் முடிந்தவரையில் கவிதைகளைத் திரட்டித் தொகுத்துள்ளார் மாலன். சிறப்பானதொரு கவிதைத்தொகுதியினைத் தமிழ் இலக்கிய உலகுக்கு வழங்கியுள்ள சாகித்திய அகாதெமியினருக்கும், தொகுத்த எழுத்தாளர்

மாலனுக்கும், தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்களுக்கும் வாழ்த்துகள் .


தொகுப்பில் இடம் பெற்றுள்ள கவிஞர்கள் மற்றும் அவர்கள்தம் கவிதைகள் பற்றிய விபரங்கள் வருமாறு:


அமெரிக்கா:


1. கோகுலக் கண்ணன் – அகராதியில் விழுந்த குழந்தை, ஒளியில் குழந்தை

2. பெருந்தேவி – உடைமை

3. வேதம் புதிது கண்ணன் – வீடுபேறு, மணம்

4. கவிநயா – கைப்பைக் கனவுகள்


ஆஸ்திரேலியா:


1. ஆழியாள் – உப்பு, குமாரத்தி


இங்கிலாந்து:


1. நா.சபேசன் – நான் காத்திருக்கிறேன்

2. தவ சஜிதரன் – படர்க்கை

3. நவஜோதி ஜோகரட்னம் – சதா மெளனம், வயது வந்தாலென்ன


இலங்கை:


1. நுஃமான் – பிணமலைப் பிரசங்கம், துப்பாக்கி பற்றிய கனவு

2. அனார் – இரண்டு பெண்கள்

3. சோலைக்கிளி – எலி

4. தீபச்செல்வன் – ஒரு கொரில்லாவின் இறுதிக் கணம்

5. எம்.ரிஷான் ஷெரீப் – ஆட்டுக்குட்டிகளின் தேவதை

6. அபார் – தாள் கப்பல்

Continue Reading →