‘காதலர்தின’ச் சிறுகதை: தங்கையின் அழகிய சினேகிதி

'காதலர்தின'ச் சிறுகதை: தங்கையின் அழகிய சினேகிதி குரு அரவிந்தன்அவன் உள்ளே வரும்போது ஹாலில் அவள் தனியே டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.

யார் இந்தப் பெண்? தங்கையின் சினேகிதியாக இருக்குமோ?

அவன் அவளைக் கவனிக்காதது போலக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவளைக் கடந்து தனது அறைக்குச் சென்றான்.

தங்கைக்கு இப்படி ஒரு அழகான சினேகிதி இருப்பது கூட அவனுக்கு இதுவரை தெரியாமற் போச்சே என்று வருத்தப்பட்டான்.

அவளைப் பார்த்த உடனேயே அவன் மனத்தில் என்னவென்று சொல்லமுடியாத ஒரு உணர்வு ஏற்படுவதை உணர்ந்தான். எத்தனையோ பதுமவயதுப் பெண்களைப் பார்த்திருக்கிறான், பழகியிருக்கிறான் ஆனால் சட்டென்று இப்படி ஒரு உணர்வு அவனுக்கு ஒருபோதும் ஏற்பட்டதில்லை.

அவளைப் பார்த்ததும், இரசாயண மாற்றங்கள் சட்டென்று தனது உடம்பில் ஏற்பட்டதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று நினைத்துப்பார்த்தான்.
எப்படியாவது மீண்டும் ஒரு முறை அவளைத் திரும்பிப் பார்க்க வேண்டும் போலவும், அவளோடு ஒருமுறையாவது பேசிவிட வேண்டும் என்பது போன்று வெறித்தனமான அந்த உணர்வு அவனுக்குள் அலை மோதிக் கொண்டிருந்தது.

தனது அறைக்குள் சென்று, அறைக்குள் இருந்தபடியே அவளைப் பார்க்கக் கூடியதாக அறைக்கதவை கொஞ்சமாகத் திறந்து வைத்தான். அவள் இவன் இருந்த அறைப்பக்கம் திரும்பிய போதெல்லாம் இங்கிருந்தே அவளது முகத்தை உன்னிப்பாய்க் கவனித்தான்.

Continue Reading →

‘பல்கலைக்கழகங்களும் பகிடிவதைகளும்’

- இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் -யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சிப் பீடத்தில் படிக்கும் முதலாம் வருட மாணவியைப் ‘பகிடிவதை’ என்ற பெயரில் பாலியல் வகையிற் கொடுமை செய்து அந்தப் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டியவர்கள் பல்கலைக்கழகத்துள் வரக்கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடைவிதித்திருப்பதாக இன்று வெளியான இலங்கைப் பத்திரிகையிற் படித்தேன். இந்த முடிவு கடந்த சில தினங்களாகச் சமூக வலைத்தளங்களில் ‘பகிடிவதைக்’கெதிராகப் பதிவிடப்பட்ட பல ஆத்திரமான கண்டனங்களின் பிரதிபலிபு என்று நினைக்கிறேன்.

பல்கலைக்கழகப் படிப்பு என்பது மேற்கல்வி படிக்க வரும் ஒவ்வொரு மாணவ மாணவிகளினதும் பிரமாண்டமான எதிர்காலக் கனவுகளைத் தாங்கிக்கொண்டுவரும் ஒரு மகத்தான பிரயாணம். அந்தப் பிரயாணத்தின் ஆரம்பமே அசிங்கமான அனுபவங்களுடன் ஆரம்பித்தால், அந்த மாணவ மாணவிகளின் இளம் கனவுகள், எதிர்காலத்தில் அவர்கள் மற்றவர்களில் வைக்கும் நம்பிக்கை, மரியாதை என்பவற்றைக் கேள்விக்குறியாக்கும் விடயமாக அமைகிறது.இப்படித்தான் வாழவேண்டும் என்ற அவர்களின் தூய உணர்வுகள் பல்கலைக்கழகங்களில் மாணவிகள் காலடி எடுத்து வைத்த சில நாட்களிலேயே ‘காமவெறிபிடித்த சில காவாலிகளின்’ சேட்டைகளால் சிதறியழிவதை ஒரு சமுதாயம் மவுனமாகப் பார்த்துக் கொண்டிருப்பது, அல்லது அதைப் பெரிதுபடுத்தாமல். ஏதோ சாட்டுக்கள் சொல்லி மறைப்பது,என்பவை அந்தச் சமுதாயத்தில் கவுரமாக வாழ வலிமையற்றவர்களுக்கும் பெண்களுக்கும் சமத்துவமான இடமில்லை என்பதைத் தெளிவாகப் பறைசாற்றுகிறது.

Continue Reading →

‘கோவிட்’டுடன் வாழ்வதில் அச்சம் ஏனோ?

'கோவிட்'டுடன் வாழ்வதில் அச்சம் ஏனோ?

கொரொனா வைரஸ் என்றொரு வைரஸ்
ஆட்டிப் படைக்குது அகிலத்தை இன்று.
இரும்புத் திரைக்குள் என்ன நடக்குது?
சொல்வ தெல்லாம் உண்மை தானா?
இதுவரை நாங்க கண்ட தில்லை
இந்த வைரசை என்ற போதும்
அச்சம் பெரிய வியாதி அன்றோ
அறிந்து துணிந்து எதிர்த்து நிற்போம்.

Continue Reading →