வ.ந.கிரிதரனின் கண்ணம்மாக் கவிதைகள் (5): காலவெளிக் கைதிகள்!

வ.ந.கிரிதரன் கண்ணம்மாக் கவிதைகள்

காலவெளியிடையே கண்ணம்மா உன்
கனிமனம் எண்ணி வியக்கின்றேன்.
காலவெளியிடையே கண்ணம்மா
கணமும் பறந்திட விளைகின்றேன்.
காலவெளிச் சிந்திப்பிலே கண்ணம்மா
களித்திட கணமும் எண்ணுகின்றேன்.
சூழலை மீறியே கண்ணம்மா அவன்போல்
சிந்திக்க விரும்புகின்றேன்.
காலமென்றொன்றில்லை கண்ணம்மா.
வெளியும் அவ்வாறே என்றான் கண்ணம்மா.
காலவெளி மட்டுமே கண்ணம்மா இங்கு
உண்மையென்றுரைத்தான்.
அவனறிவின் உச்சம் பற்றி கண்ணம்மா
பிரமித்துப்போகின்றேன்.
மனத்து அசை இன்னும் முடியவில்லை.

Continue Reading →

‘முற்போக்கு இலக்கிய முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி’

'முற்போக்கு இலக்கிய  முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி'

எழுத்தாளர் வி.ரி.இளங்கோவன்  அவர்கள் ஐபிசி தமிழ் பத்திரிகையில் ஈழத்து இலக்கியச் சிற்பிகள் என்னும் தலைப்பில் இலங்கைத்தமிழ் இலக்கியத்தில், இலங்கை இலக்கியத்தில் தடம் பதித்த ஆளுமைகள் பற்றி எழுதி வருகின்றார். இதுவரை பெப்ருவரி மாத இதழில் அவர் எழுத்தாளர் அ.ந.கந்தசாமி பற்றி ‘முற்போக்கு இலக்கிய  முன்னோடி. பல்துறை ஆற்றலாளர் அ.ந.கந்தசாமி’ என்னும் தலைப்பில்  எழுதியிருக்கின்றார், அதனை இங்கு நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அதிலெங்கும் அ.ந.க.வின் நினைவு நாள் பெப்ருவரி 14 என்பது குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் பெப்ருவரி மாதம் அ.ந.க.வை நினைவு கூர்ந்திருப்பதும், அம்மாதத்திலேயே அவரது நினைவு தினம் வருவதும் பொருத்தமானது.

Continue Reading →

தமிழிலக்கியங்களில் அறச்சிந்தனைகள்

       முனைவர் இர.ஜோதிமீனா, உதவிப் பேராசிரியர், நேரு கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 105.பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையும் மேன்மையும் உடையது தமிழ். இவ்வகையில் தமிழ் ஈடு இணையற்ற மொழி. பழந்தமிழர்கள் இனக்குழுக்களாகப் பகுத்துண்டு வாழ்ந்தனர். அறம், இசை, ஈதல், கல்வி, காதல், வீரம், போர்த்திறன் எனப் பல்வேறு சிறப்புகளோடு வாழ்ந்ததை இலக்கியங்கள் நமக்குப் பறைசாற்றுகின்றன. தமிழ்இலக்கியங்களில் காணப்படும் சிறப்புகளில் ஒன்று அறம். இந்த அறம் சங்க இலக்கியம் தொடங்கிக் காப்பியம், அறஇலக்கியம், சிற்றிலக்கியம் என நீண்டு இன்றைய நவீன இலக்கியம் வரை தமிழின் மரபு அறுபடாமல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய அறச் சிந்தனைகளில் சிலவற்றை இங்குக் காணலாம்.

முதலில் சங்க இலக்கியத்தை எடுத்துக் கொள்வோம். சங்கக் காலத்தில், உறையூரில் கோப்பெருஞ் சோழன் என்ற மன்னன் வாழ்ந்து வந்தான். புலவர்களைப் பெரிதும் போற்றினான். மிகுந்த பொருள்களை நல்கினான். இதனைக் கண்ட அவன் மக்கள் வெதும்பினர். தந்தைக்குப் பிறகு நாட்டில் நமக்கு எதுவும் இராது. எல்லாவற்றையும் புலவர்களும் பாணர்களும் எடுத்துக் கொள்வர். இதன்காரணமாகப் படைத்திரட்டிக் கொண்டு தந்தைக்கு எதிராகக் கிளம்பினர். போர் மூழ்வதற்குரிய சூழ்நிலை நிகழ்ந்தது. இதைக் கேள்விபட்ட புல்லாற்றூர் எயிற்றியனார் புலவருக்குப் பொறுக்க முடியவில்லை.  சோழரை அவர் சந்தித்தார். நீங்கள் போர் புரிகிறீர்கள், உங்களுக்குப் பிறகு இந்த நாட்டை யாருக்கு ஒப்படைக்கப் போகிறீர்கள்? அந்தப் போரில் தோற்றால் யாருக்கு என்னாகும்? மக்களுக்கு எதிராகப் போரிடுவது முறையன்று. போரிடுவதைக் கைவிட்டு உன் ஆட்சியின் கீழ் வாழும் மக்களுக்கு நல்லது செய்து வானுலகம் போற்றும்படி வாழ்வாயாக! என நல்லறம் உரைக்கின்றார். அவர் பாடிய பாடல் வருமாறு:

‘மண்டுஅமர் அட்ட மதனுடைய நோன்தாள்,
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்கு நீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து,
நின்தலை வந்த இருவரை நினைப்பின்,
தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்,
அமர்வெங் காட்சியொடு மாறுஎதிர்பு
— — – – – – – –
ஓழித்த தாயம் அவர்க்கு உரித்து அன்றே;
ஆதனால் அன்னது ஆதலும் அறிவோய்! நன்றும்’  (புறம்.213)

Continue Reading →