ஸ்ரீலங்காவில் பௌத்த போராளிகள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்!

ஸ்ரீலங்காவில் பௌத்த போராளிகள் மோசமாக நடந்து கொள்கிறார்கள்!கடந்த செப்ரம்பர் மாதம் சுமார் 100 பௌத்த பிக்குகளின் தலைமையிலான ஒரு கும்பல் புராதன நகரமாகிய அனுராதபுரத்தில் அமைந்துள்ள ஒரு முஸ்லிம் வழிபாட்டுத் தலத்தை இடித்துத் தகர்த்தார்கள். அந்தக்கூட்டம் மஞ்சளும் சிவப்பு நிறத்தையும் கொண்ட பௌத்த கொடிகளை வீசி ஆர்ப்பரித்தார்கள். ஒரு பௌத்த துறவி பச்சை நிறத்திலுள்ள முஸ்லிம்களின் கொடியை தீயிட்டுக் கொழுத்தினார். பௌத்த துறவிகள் அந்த முஸ்லிம் வழிபாட்டுத் தலம், 2,000 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தில் அமைந்துள்ளதாக கூறினார்கள், – பண்டைய மத நூல்களில் பொறிக்கப்பட்டுள்ளபடி முழு தேசத்திலும் அவர்களுக்குள்ள சொத்துரிமை சுட்டிக் காட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். பௌத்தர்கள் ஸ்ரீலங்காவில் மோசமாக நடந்துகொண்ட சமீபகால சம்பவம் இந்த அனுராதபுர தாக்குதல் மட்டுமல்ல. ஏப்ரல் மாதம் கிட்டத்தட்ட 2,000 சிங்கள பௌத்தர்கள், பௌத்த துறவிகள் தலைமையில்;, 2 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தென்னிந்திய ஆக்கிரமிப்பாளர்களின் படையெடுப்புகளுக்கு அஞ்சி சிங்கள மன்னர்கள் தஞ்சமடைந்ததாக நம்பப்படும் மிகப் பெரிய வலையமைப்பில் குகைகளை கொண்டுள்ள புனித நகரமான தம்புள்ளயில் உள்ள மசூதி ஒன்றிற்கு எதிராக அணிவகுப்பை நடத்தினார்கள். அவர்கள் பெரும்பாலும் ஒரு அடையாளத் தாக்குதலை நடத்தி, இந்த தாக்குதல் ஒரு வரலாற்று நாளை குறிப்பதாக தெரிவித்தார்கள், அந்த தாக்குதலுக்கு தலைமையேற்ற ஒரு துறவி கூட்டத்தினரிடம் கூறியது “சிங்கள இனத்தை நேசிக்கும், சிங்கள இரத்தம் ஓடுகின்ற பௌத்தர்களுக்கு இது ஒரு வெற்றி” என்று.

Continue Reading →