ஈழம் என்ற சொல்லை தடை செய்யமுயலும் இந்திய வெளியுறவுத்துறைக்கு எதிராக குரல் எழுப்புவோம்

ஈழம் என்ற சொல்லை தடை செய்யமுயலும் இந்திய வெளியுறவுத்துறைக்கு எதிராக குரல் எழுப்புவோம்!நண்பர்களே, இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுவரை நடத்திவரும் தமிழர் விரோத போக்கின் உச்சத்தை இன்று தொட்டிருக்கிறது. டெசோ மாநாடு தொடர்பான ஆகஸ்ட் 9, 2012ல்,  டெசோ மாநாட்டு செயலருக்கு அது அனுப்பியிருக்கும் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறது: This Ministry has no objection from political angle, for the proposed International Conference, with foreign participants, with the proviso that “Eelam” may be dropped from the title of the conference, and subject to clearance of Ministry of Home Affairs and other competent authorities. (மேலும் படிக்க: http://www.tamilnet.com/art.html?catid=79&artid=35450)

ஈழம் என்ற சொல்லை தமிழ்நாட்டில் பயன்படு்த்தக்கூடாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பது தமிழர்களின் இறையாண்மையை மீறிய ஒரு செயலாகும். இது மிகமோசமான கருத்துரிமை மீறலும் ஜனநாயக அரசியல் மீது விழந்து அடியுமாகும். இதுவரை இந்திய அரசு நடத்திவந்த தமிழர் விரோத அரசியலுக்கு இந்த கடிதம் மிகமுக்கியமான ஒரு ஆதாரமும் ஆகும்.

Continue Reading →