தமிழ் ஸ்டுடியோவின் 5 வது ஊர் சுற்றலாம் வாங்க

தமிழ் ஸ்டுடியோவின் 5 வது ஊர் சுற்றலாம் வாங்கநாள்: 15-09-2012 & 16-09-2012
இடம்: கழுகு மலை (கோவில்பட்டி), குற்றாலம்.
கட்டணம்: அவரவர் செலவை அவரவரே பார்த்துக் கொள்ள வேண்டும்.

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் ஐந்தாவது ஊர் சுற்றலாம் வாங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15 மற்றும் 16 தேதிகளில் நடக்கவிருக்கிறது. குற்றாலம், செங்கோட்டை, கோவில்பட்டி அருகில் உள்ள கழுகு மலை உள்ளிட்ட பல இடங்களுக்கு செல்லவிருக்கிறோம். நண்பர்கள் அதிகம் பார்த்திராத முக்கியமான பகுதிகளுக்கு செல்வதே இந்த பயணத்தின் நோக்கம். இந்த முறை நமது பயணத்தில் இரு இலக்கிய ஆளுமைகள் கலந்துக் கொள்கிறார்கள். கழுகு மலை சமணர்கள் ஓவியம் பற்றியும், கழுகு மலையின் பின்னணி பற்றியும் எழுத்தாளர் கோணங்கி நமக்கு விளக்கி சொள்ளவிருக்கிறார். ஒரு நாள் முழுவதும் கோணங்கியோடு நமது பயணம் தொடங்கவிருக்கிறது. தேசாந்திரி போல் சுற்றுவதற்கு நாம் கோணங்கியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கோணங்கியோடு ஒரு நாள் முழுவதும் இருப்பதும், அவர் கையால் வைத்துக் கொடுக்கும் கருப்பட்டி காப்பியைக் குடிக்கவுமே நான் அடிக்கடி கோவில்பட்டி செல்ல விரும்புவேன். இந்த முறை இந்த வாய்ப்பு கலந்துக் கொள்ளும் அனைவருக்கும்.

Continue Reading →

தாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது. 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள்; தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்தவர். பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தாலாட்டும் பாடல்களாக தனது தொகுதியை வெளியிட்டிருப்பது சிறப்பம்சமாகும்நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது. 2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள்; தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்தவர். பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தாலாட்டும் பாடல்களாக தனது தொகுதியை வெளியிட்டிருப்பது சிறப்பம்சமாகும். இத்தொகுதியை வெளியிட்ட பதிப்பகத்தார் ஷஇனிய ராகம், சுவை நயம் மற்றும் கருத்தாழமிக்க இவை தாயன்பில் ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தும். பிஞ்சு மனங்களில் பூரிப்பையும் கொண்டு வரும்| என்கின்றனர். கிராமிய மணம் கமழும் இந்தப் பாடல்கள் குழந்தைகளை ஆசிர்வதிப்பதாகவும், நற்செயல்களை விதைக்க கற்றுக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றன.

Continue Reading →