நெடுங்கவிதை: டி.எஸ்.எலியட்டின் ‘பாழ்நிலம்’ [தமிழில் வர்த்தமான மகாவீரன் (மாரப்பன்)]

பாழ்நிலம் (1922)

“ஒரு தடவை கியூமா பட்டணத்து ஸிபில் கூண்டுக்குள் தொங்குவதை நானே என் கண்களால் நேரில் பார்த்தேன். அதைச் சூழ்ந்து கொண்ட சிறார்கள் ‘ஸிபில், உனக்கு என்ன வேண்டும்?’ என்று இரைச்சலிட அவள் சொன்ன பதில்: ‘நான் சாக விரும்புகிறேன்’  என்பதாகும்.” கலா நுணுக்கன் எஸ்ரா பவுண்டுக்கு

1. நீத்தாரைப் புதைத்தல்

 வர்த்தமான மகாவீரனின் (மாரப்பன்) 'டி.எஸ்.எலியட்டின் பாழ்நிலம்'ஏப்ரல் மாதம் எத்துணை வெம்மையானது.
வெடித்த நிலத்தில் லைலாக் வாசனை
ஆசைகளையும் ஏக்கங்களையும் ஞாபகத்தில் சங்கமித்தது.
சோம்பலின் வேர்களிலிருந்து விழுந்த வஸந்தத்தின் மழைத்தூரல்களில்.
குளிர்காலம் எங்களை இதப்படுத்தியதில் பூமியில் படர்ந்த மறதிப் பனியில்
பூஞ்சைகள் தழைத்து உயிர்பெற்றன.
கோடைப் பருவம் வந்து கொட்டிய மழையில் ஆச்சரியம் அடைந்த
நாங்கள்
ஸ்டான் பெகர்ஸ் ஏரிக்கரையில் நின்றோம்.
பாதையின் ஓங்கிச் செழித்த ஒரு மரநிழலில் ஒதுங்கினோம்.
சூர்யஒளி சுள்ளென்று சுட்டதில் ஹாப்கார்ட்டன் பூங்காவுக்குள்
நுழைந்து காபி அருந்தினோம் ஒரு மணி நேரம் நீடித்தது உல்லாசப் பேச்சு
‘நான் ரஷ்யாக்காரியே அல்ல. லித்துவேனியா தான் என் பூர்வீகம். நான் நிஜ ஜேர்மனியக்காரி’
பால்யத்தில் எங்கள் ஒன்றுவிட்ட சகோதரனான சிற்றரசன் மாளிகையில்
தங்கியிருந்தபோது  ஒரு ‘ஸ்லெட்ஜ் வண்டியில் பனிச்சறுக்கு விளையாடி மகிழ்கையில்
அதன் படுவேகத்தில் அலண்டு போனேன் நான். ‘மேரி,
மேரி பயப்படாதே. என்னை கெட்டியாகக் கட்டிக்கொள்’ என்றான் அவன்.
மேட்டிலிருந்து மெல்ல பள்ளம் நோக்கி இறங்கினோம். ம்லைகளில்தான் எப்போதும் பூரண சுதந்திரம்
இரவில் நெடுநேரம் வாசிக்கும் நான் குளிர்காலம் வந்தால் தெற்கே சென்றிடுவேன்.

Continue Reading →

இலண்டன்: உரையாடல்! பகிர்வு! கற்றல்! மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி

 இலண்டன்: உரையாடல்! பகிர்வு! கற்றல்! மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி

இந்த நிகழ்வில் கல்வியலாளர்,ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார். தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார்.

Continue Reading →

பிரான்சில் இடது சாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலம் .( செய்தியும் புகைப்படங்களும்).

பிரான்சில் இடது சாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலம் .( செய்தியும் புகைப்படங்களும்).வல்லரசுகள் கண்டங்களைத் தாண்டி இயற்கை வளங்களையும், தொழிலாளர்களின் உழைப்பையும், வாழ்வையும் சுரண்டிக் கொண்டிருக்கும் ஒரு நெருக்கடியான இன்றைய கால கட்டத்தில், பிரான்சில் பாரளுமன்ற அமைப்புசாரா தீவிர இடதுசாரி அமைப்புக்களின் ஒன்றுபட்ட மேதின ஊர்வலமும் -ஒன்றுகூடலும் பாரிசில் மிகச் சிறப்பாக  (01.05.2013) நடைபெற்றது. சர்வதேச ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகவும், அனைத்து ஒடுக்குமுறைகளை கண்டித்தும், கோசங்களும்- கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில் பிரான்சில் வாழும் பல்லின மக்களினது  இடதுசாரி செயற்பாட்டு இயக்கமான சர்வதேச சமூகப் பாதுகாப்பு  அமைப்பும்  (comité de Défence  Social  International)  கலந்துகொண்டது.  இவ் ஊர்வலத்தில் இலங்கை அரசின் சிறுபான்மை தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், இன அழிப்பு யுத்ததிற்கு எதிராகவும் கண்டனங்களும் கோசங்களும் எழுப்பப்பட்டன. இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் சார்பிலும்    பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.  ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இனங்களில் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு அனைத்து தேசிய இனங்களின் சமத்துவம் பேணப்பட வேண்டும்.

Continue Reading →

பயணியின் பார்வையில்: மாணவர்கள் பயிலும் காலத்தில் தொழிற்பயிற்சி வேண்டும்

பயணியின் பார்வையில்: மாணவர்கள் பயிலும் காலத்தில் தொழிற்பயிற்சி வேண்டும்முல்லைத்தீவு என்றவுடன் எனது நினைவுக்கு முதலில் வருபவர்கள், நிலக்கிளி பாலமனோகரன், முல்லை அமுதன், முல்லையூரான், முல்லைமணி, முல்லைசகோதரிகள். கலை, இலக்கியவாதியாக பயணிப்பதனால்தானோ என்னவோ இவர்கள் உடனடியாக நினைவுக்கு வந்துவிடுவார்கள். இவர்களைப்போன்று பலர் எழுத்து மற்றும் கலைத்துறையில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தபின்பும் தொடர்ந்து எழுதுகிறார்கள் என்பது மனதுக்கு நிறைவானது. சிலருடன் எனக்கு கடிதத்தொடர்புகளும் இருந்தன. முல்லையூரான் மறைந்துவிட்டார். நிலக்கிளி பாலமனோகரன் ஈழத்து இலக்கிய உலகில் பெரிதும் பேசப்பட்டவர். டென்மார்க்கில் வசிக்கிறார். அவரது நிலக்கிளி, குமாரபுரம் ஆகிய நாவல்கள் குறிப்பிடத்தகுந்த கவனம்பெற்றவை. முல்லை அமுதன் காற்றுவெளி இதழையும் வெளியிட்டவாறு இங்கிலாந்தில் நூல் கண்காட்சிகளை வருடந்தோறும் நடத்திவருபவர். முல்லை சகோதரிகள் இலங்கையில் பல பாகங்களிலும் இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்கள். தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனக்கு இந்தச்சகோதரிகளுடன் நேரடி அறிமுகம் இல்லை.

Continue Reading →

கனடாத் தமிழ்க் கலைக் கல்விச்சாலை இளங்கீற்று 2013 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா!

கடந்த கிழமை கனடாத் தமிழ்க் கலைக் கல்விச்சாலை இளங்கீற்று 2013 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா ரொறன்ரோ பெரிய சிவன் கோயில் அரங்கில் நடைபெற்றது.

– ஏப்ரல் 30, 2013 –  கடந்த கிழமை கனடாத் தமிழ்க் கலைக் கல்விச்சாலை இளங்கீற்று 2013 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா ரொறன்ரோ பெரிய சிவன் கோயில் அரங்கில் நடைபெற்றது. தமிழ்க் கலைக் கல்விச்சாலை நிகழ்த்திய இரண்டாவது ஆண்டு பரிசளிப்பு விழா  இதுவாகும். நானூறுக்கும் அதிகமான மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டார்கள். மங்கல விளக்கை சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்ட திரு நக்கீரன், திருமதி சரோசினி தங்கவேலு ஏற்றி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்த் தாய் வாழ்த்து, கனடா நாட்டுப் பண், திருமறை ஓதல் இடம் பெற்றது. விழாவுக்கு வருகை தந்திருந்த அவையோர்களை தருமதி சுவந்தி சங்கர் வரவேற்று உரை நிகழ்தினார். அதனை அடுத்து  இந்தோ கனடா நாட்டியப்பள்ளி அதிபர் திருமதி பத்மினி ஆனந்தின் மாணவர்கள் வரபேற்பு நடனம் ஆடினார்கள்.

Continue Reading →

தேர்தலும் மலேசிய மக்களும்

வே.ம.அருச்சுணன் – மலேசியாநாட்டின் முதல் தேர்தல் 1955 ஆம் ஆண்டு தொடங்கி 2013 ஆம் ஆண்டு வரையில் 13 ஆவது பொதுத்தேர்தல்  5.5.2013 ஆம் நாள் நடைபெறுகிறது. 31.8.1957 ஆம் நாள் மூன்று இனங்களுக்கு ஆங்கிலேயர் வழங்கிய சுதந்திரம் மூன்று சமத்துவத்துடன் வாழவும் நாட்டின் செல்வச் செழிப்பை மூவினங்களும்அனுபவிக்கவேண்டிய நிலையில் அம்னோவின் ஆதிக்கப்போக்கால்   அன்று தொடங்கி இன்றுவரை மலாய்க்காரர்களின் செல்வாக்கு மேலோங்கியிருக்கிறது. நாட்டின் செல்வத்தை மலாய்க்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் வகையில் இருபத்திரண்டு ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக குறுகிய பார்வையோடு தவறான ஆட்சி புரிந்தவர் மகாதீர்.மலேசியர்கள் குறிப்பாக இந்தியர்கள் மகாதீரை மன்னிக்க மாட்டார்கள். இவர் நாட்டைச் சுரண்டியது போதாதென்று,மகன் கெடாமாநிலத்துக்கு மந்திரி புசாராக வருவதற்கு கடுமையாக உழைக்கிறார்.தந்தை செய்ததைத்தானே மகன் முக்கிரிசும் செய்யப்போகிறார். நாட்டுச் சொத்துக்களை மகாதீர் குடும்பம் மட்டுமே எடுத்துக் கொண்டால் எப்படி? இது அநியாயம் இல்லையா? மலேசிய மக்கள் அனைவரும் முட்டாள்களா?
 

Continue Reading →

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கெடுக்கும் கலந்துரையாடல்!

  மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கெடுக்கும் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது. நேரம:  மாலை 18:00 மணிக்குகாலம்: மே 1ம் திகதி  புதன்கிழமை (01.05.2013)இடம்: …

Continue Reading →