நூல் அறிமுகம்: ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்

– எழுத்தாளர் சயந்தனின் ‘சயந்தன்’ இணையத்தளத்திலிருந்து ‘ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்’ என்னுமிக் கட்டுரை தமிழ்கவியின் ‘ஊழிக்காலம்’ அறிமுகத்துக்காக மீள்பிரசுரமாகின்றது. இணையத்தள முகவரி:  http://sayanthan.com/ – பதிவுகள் –

நூல் அறிமுகம்: ஊழிக்காலம் – ஒரு பரிதவிக்கும் நாவல்தமிழ்கவி அம்மாவிற்கு இப்பொழுது வயது 64. அவர் எனது சிறுவயதுகளில் புலிகளின் குரல் வானொலியூடாக குரல்வழியில் அறிமுகமாயிருந்தார். வானொலி நாடகங்களில் வட்டாரப்பேச்சு வழக்கில், ‘அப்பிடியாமோ’ ‘மெய்யாமோ’ என்ற அவரது வார்த்தைகள் நினைவில் நிற்கின்றன. நாட்டார் பாடல்கள் பற்றிய நிகழ்ச்சிகளும் செய்திருந்தார். தமிழ்கவி அம்மாவை இதுவரை நான் நேரிற் சந்தித்துப் பேசியதில்லை. ஒருமுறை நேரிற் கண்டிருக்கிறேன். 2005இல் கிளிநொச்சி திருநகரில் அமைந்திருந் த.தே.தொ அலுவலகத்திற்கு நானும் சோமிதரனும் ஒருதடவை போயிருந்தோம். தவபாலன், கருணாகரன் ஆகியோரோடுதான் உரையாடல். அப்பொழுது வீதி வாயிலில் மடித்த இரட்டைப்பின்னலோடும், புலிச் சீருடையோடும் மோட்டர்சைக்கிளிலிருந்து (MD 90?) இறங்கி வந்தார் தமிழ்கவி. அங்குநின்ற ஒன்றிரண்டு பெண்போராளிகளை “என்னடி பிள்ளைகள்..” என்று விளித்துச் சிரித்தபடி வந்ததாக நினைவு. (அப்பெண்போராளிகளில் இசைப்பிரியாவும் ஒருவராயிருந்தார் என்பது துயர நினைவு)

புலம்பெயர்ந்த பிறகு, தொலைக்காட்சிகளிலும் தமிழ்கவி அம்மாவைக் கண்டேன். அம்பலம் என்றொரு நிகழ்ச்சி செய்தார். வேலிக்கதியாலில் குழை பறித்துக்கொண்டோ, அல்லது கோடாரியால் விறகு கொத்திக்கொண்டோ.. “பின்ன உவன் மகிந்தவுக்கு உது தெரியாதாமோ” எனத்தொடங்குகிறமாதியான நாட்டு நடப்பு உரையாடல்கள் அந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன. அதன்பிறகு 2009 மார்ச்சில், இறுதிக்காலத்தில் யுத்தகளத்திலிருந்து வெளியான காணொளி ஒன்றில் அவர் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு என்ன ஆனார் என்று தெரியவில்லை.

Continue Reading →

Statement: Minister Kenney issues statement celebrating Black History Month

“Every February, Canadians mark Black History Month, an important annual celebration of the accomplishments of Canadians who trace their family heritage to Africa and the Caribbean. Citizenship, Immigration, and Multiculturalism Minister Jason KenneyOttawa, February 6, 2014 – The Honourable Jason Kenney, Minister for Multiculturalism, issued the following statement after the official launch event for Black History Month at the Canadian War Museum:
 
“Every February, Canadians mark Black History Month, an important annual celebration of the accomplishments of Canadians who trace their family heritage to Africa and the Caribbean. The proud legacy of black Canadians goes back to the early beginnings of Canadian history. The great sacrifices and tremendous contributions of their community have helped to create the Canada of today.  This year, as we mark the 100th anniversary of the beginning of the First World War and the 75th anniversary of the beginning of the Second World War, Black History Month provides an opportunity to recognize the efforts of black Canadian soldiers during these wars, and in other military campaigns.
 
“Canadians should learn more about many inspirational stories of heroism and service, including that of the largely black Number Two Construction Battalion, which proudly served our country during the First World War. Another great story is that of William Hall, the first black recipient of the Victoria Cross. He was also the first Canadian sailor and the first Nova Scotian to receive this honour.  This year, Canada Post’s 2014 Black History Month stamps will honour two historical communities that were located on opposite sides of our country: Africville in Halifax, and Hogan’s Alley in Vancouver. “Both of these communities played significant roles in black Canadian history, and their stories are well worth learning during Black History Month.

Continue Reading →

படித்தவற்றை என்னசெய்வது ?

எழுத்தாளர் முருகபூபதிமுன்னர்      அணிந்த       உடைகளை      என்ன     செய்வோம்?       என்பதற்கு  அவரவர்      தரப்பில்       பதில்கள்       இருக்கின்றன.      பொதுவாக  இல்லாதவர்களுக்கு       கொடுப்பார்கள்.       இலங்கையில்      ஒரு    காலத்தில்  பழைய     ஆடைகளை       கொடுத்துவிட்டு       புதிய     பாத்திரங்கள்  வாங்குவதை       சிறுவயதில்      பார்த்திருக்கிறேன். தற்பொழுதும்      இந்த     வழக்கம்     இலங்கையிலிருக்கிறதா?      என்பது  தெரியாது. சுனாமி  கடற்கோள்     பாதிப்புக்கு      உதவுமாறு      அவுஸ்திரேலியா  மெல்பனில்      அன்பர்களிடம்     வேண்டுகோள்      விடுத்தபொழுது –   பெட்டி  பெட்டியாக      பாவித்த      உடைகள்தான்      முதலில்      வந்து     குவிந்தன.  ஏனைய      நிவாரணப்பொருட்கள்      அதன்பிறகுதான்.       இரண்டு  கொள்கலன்களில்      அவற்றை      நிரப்பி       கப்பல்      மார்க்கமாக    இலங்கைக்கு     கொண்டு     சேர்த்ததும் –      பின்னர்      அவற்றை      கொழும்பு       துறைமுகத்திலிருந்து      வெளியே      எடுத்து  பாதிக்கப்பட்டவர்களுக்கு       விநியோகிக்க      பட்ட     கஷ்டங்களும்   நீண்டதொரு     கதை. வாசிக்கும்      பழக்கம்      உள்ளவர்களிடம்      நூல்கள்,      பத்திரிகைகள்,     வார- மாத     இதழ்கள்    குவிந்துவிடும்.       இவற்றில்      பத்திரிகைகள்      இதழ்கள்  இலங்கையில்      எடைபார்த்து      கிலோவுக்கு     இன்னவிலை     என்ற  நிர்ணயம்      இருக்கிறது.     பழைய     பேப்பர்கள்      வாங்கும்    கடைகள்  இலங்கையில்      இருக்கின்றன.

Continue Reading →

நிவேதா உதயாராஜனின் சிறுகதைகள் மீதானதொரு பார்வை

நிவேதா உதயாராஜன்சிறுகதைக்கான வரைவிலக்கணம் எதையும் கணித்தபடி தற்போதைய சிறுகதைகள் வாசிக்கக் கிடைக்கவில்லை.முன்னரெல்லாம் அகிலன்,கல்கி தொடங்கிசாண்டில்யன்,கோவி மணிசேகரன் என விரிந்து அசோகமித்திரன்,மௌனி எனப் பரந்து தளம் விரிந்தே செல்கிறது.இன்று பலர் சிறுகதைக்குள் வந்துவிட்டனர்.கல்வி,கணினியியல் வசதி என வாய்ப்புக்கள் கைக்குள் வர வடிவங்களிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இலங்கையிலும் அப்படியே. சிறுகதைகளின் முன்னோடிகளின் தொடர்ச்சியாக பலர் வந்துவிட்டனர். அன்று தொடங்கி இன்று வரை பலரும் தம்மை சிறுகதைகளின் மூலம் அடையாளப்படுத்தி நிற்கின்றனர். சிறுகதைகள் தனியாகவும், நூலாகவும் பரிசில்களைப் பெற்றுவிடுகின்ற அளவுக்கு வளர்ந்து வருகின்றன என்றே சொல்லலாம். இன மோதல்களில் சிதறுண்ட மக்கள் பல நாடுகளில் வாழும் நிலையில் வாழ்வின் சோகம்,யுத்த நோவுகள்,குடும்ப சிதைவுகள்,ஒன்றினைவுகள் எல்லாம் இன்னும் கைகளுக்குள் வராத சூழலில் பலர் எழுத்தை தம் வடிகாலாக்கினர். பழையவர்களுடன்  புதியவர்களும் இணைந்துகொண்டனர். இதற்கு புலம்பெயர் சூழலில் வானொலிகளின், தொலைக்காட்சிகளின், அச்சு ஊடகங்களின் வருகை பலரையும் உள்வாங்கும் களமாகவும் ஆகிவிட்ட நிலையில் சிறுகதைகள் எழுதும் பலரையும் உருவாக்கிவிட்டிருந்தது. இலகுவாக வாசிக்கும் சூழலும், இங்குள்ள கல்வி,நண்பர்களின் தொடர்பு கதை வடித்தல் அவர்களை ஓரளவு ஆசுவாசப்படுத்தவும் செய்வதை மறுக்கமுடியாது.

Continue Reading →

பிரான்சு: கம்பன் கழகத்தின் ஏழாம் ஆண்டுப் பொங்கல் விழா 2014!

வணக்கம் நம்முடைய கம்பன் கழகத்தின் ஏழாம் ஆண்டுப் பொங்கல் விழா15.02.2014 சனிக்கிழமை பிற்பகல் 14.00 மணிக்கு நடைபெறவுள்ளது.அதைக் குறித்த மடல் இணைத்துள்ளேன். அன்புடன்கவிஞர் கி. பாரதிதாசன்தலைவர் கம்பன்…

Continue Reading →

சிறுகதை: அது..!

எழுத்தாளர் சுதாராஜ்இருள் கசியத் தொடங்கும் மாலை ஆறுமணிப் பொழுதில் அந்த வீதியில் வந்துகொண்டிருந்தேன். முக்கிய நகரங்களைத் தொடுக்கும் பிரதான வீதிதான் அது. எனினும் சன நடமாட்டம் குறைவாயிருந்தது. நகரத்திலிருந்து எட்டுக் கட்டை தொலைவிலிருந்த அந்தப் பகுதியில் குடிமனைகளும் குறைவு. அடுத்த நகரம் சுமார் நாற்பது கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தது. நாட்டில் சுமுக நிலையற்ற காலம் அது. இருள்வதற்கு முன்னரே மக்கள் வீடுகளுள் அடங்கிப்போய்விடுவதற்கு அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம். இன்னும் வெட்டப்படாத காட்டு மரங்களும் பற்றை புதர்களும் இரு மருங்கும் கொண்ட வீதியில், இந்தத் தனிமை வேளையில் எனது ஐம்பது சீசீ ஸ்கூட்டரில் பயணித்து வருவது சற்றுத் திரில்லாகக்கூட இருந்தது. முகத்திலடிக்கும் குளிர் காற்றின் சுகத்துடன் பறந்து செல்லும் ஒரு குருவியாக நான். ஆனால் வீதியில் மூச்சிரைக்கும் வேகத்தில் அவ்வப்போது வரும் வாகனங்கள் இந்த அனுபவிப்பைக் கெடுத்துவிடும்.

Continue Reading →

சிறுகதை: வெண் நிலவுகள்

சிறுகதை:  வெண் நிலவுகள் ” பிச்சை எடுக்கிறதுக்காகவே  பிள்ளையை பெறுவது , பிறகு – பேத்தி ,பேத்தி – எண்டு சொல்லித்திரியிறது ‘பேத்தியின்ர அப்பாவும் நான் தான் ! ‘எண்டு சொல் வேண்டியது தானே….”   என எரிந்து கொண்டு பெருமாள் கோயில் படி ஏறினார் ஒரு நடுத்தர வயது பெண் – அந்த பிச்சைக்காற முதியவருக்கு இது ஒன்றும் புதிதில்லை  . சேற்றில் தோய்த்தெடுத்த கோலத்தில்  இருந்தாலும் பார்ப்பதற்கு  அழகான சிலை போல்   ஒரு கையில்  பிள்ளையும் மறு கையில் பிச்சைத்தட்டும் ஏந்திய படி இருக்கும் மகளையும் ,  மனம் கல்லாகி மரத்துப் போய் எதற்கும் பதிலோ இல்லை கேள்வியோ கேட்காத  அவரையும் இப்படி ஊரார் எள்ளி நகை யாடுவது இன்று நேற்று அல்ல இரண்டு வருடத்திற்கு மேலாக நடக்கிறது . ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொழுத்துவோம் ‘ என்ற பாரதியின் கூற்றுக்கு ‘மாதர் தம்மை  (தாமே ) இழிவு செய்யும் மடமையைகொழுத்துவோம்   ‘ . என்ற  எழுத்தாளர் ஜெயகாந்தனின் விபரிப்பை எண்ணி மனதில் நகைத்தபடி . தாடியை தடவிக் கொண்டு அனேகமாக காதலிக்காக காத்திருந்த அந்த இளைஞனை நோக்கி நடந்தார்  பேச்சு வேண்டிய பிச்சைக்காற முதியவர் . யாழ் மாநகரிலே பிரசித்திவாய்ந்த கோயில்களில்  பெருமாள் கோயிலும் ஒன்று . அழகான சுற்றுசூழலில் இருக்கும் இந்த கோயிலில் தினமும் பூசைகள் தவறாது நடைபெறும் .  இவ் ஆலயம் அதிக பக்தர்கள் சூழும்  இடம் என்பதால் காதலர்கள் முதல் வியாபார நிலையங்கள் வரை ஏன்  பிச்சைக்காறர்களுக்கு கூட பஞ்சமில்லை .

Continue Reading →

பெப்ருவரி 2014 கவிதைகள்!

ஜனவரி 2014 கவிதைகள்!1. அம்மா

– ஷஸிகா அமாலி முணசிங்க / தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் –

(கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படும் அம்மாவுடன் கதைப்பதற்கு இடமளிக்கப்படாத குழந்தை, நீதிமன்ற வளாகத்தில் சத்தமிட்டு அழுதது – செய்தி)

 இழுத்துச் செல்லப்படுகிறாள் அம்மா
விலங்கிடப்பட்டிருக்கின்றன அவளது கைகள்
இருண்டு பருத்த தொப்பை மனிதர்கள்
அவளை அண்டவிடாமல் காவலிருக்கிறார்கள்

Continue Reading →

சிங்கப்பூரில் எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கும், நூல்வெளியீடும்!

[ஒரு பதிவுக்காக இந்த நிகழ்வு பற்றிய அறிவிப்பு பிரசுரமாகின்றது. ‘பதிவுகளு’க்கு நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்களை அறியத்தருபவர்கள் இறுதி நேரத்தில் அனுப்புவதைத் தவிர்க்கவும். – பதிவுகள் -]

சிங்கப்பூரில் எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கும், நூல்வெளியீடும்! 26.1.2014  அன்று  சிங்கப்பூரில் எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் பற்றிய கருத்தரங்கும் நூல்வெளியீடும் நடைபெறுகிறது.  26.1.2014  அன்று  மாலை ஆறுமணியளவில், 100, விக்டோரியா சாலை, சிங்கப்பூர், தேசிய நூலகத்தில் ( ஐந்தாம் தளம்)  எழுத்தாளர் மாதங்கியின் படைப்புகள் குறித்து ஒரு கருத்தரங்கும் அதைத் தொடர்ந்து  அவருடைய  இரண்டு நூல்களும்  வெளியிடப்பட உள்ளன. முதல் நூல் , 2013 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூலுக்கான  சிங்கப்பூரின்  அமரர் மு.கு இராமச்சந்திரா நினைவுப் புத்தகப் பரிசு பெற்ற ‘ஒரு கோடி டாலர்கள்‘ என்ற சிறுகதைத் தொகுப்பு.நூல்  (சந்தியா பதிப்பகம்) அடுத்த  நூல் 62   நவீனக் கவிதைகளை  உள்ளடக்கிய ‘ மலைகளின் பறத்தல்’ என்ற அவருடைய    கவிதைத்தொகுப்புநூல் (அகநாழிகை பதிப்பகம்) . .  தேசிய கலைகள் மன்றம், கனடா இலக்கியத் தோட்டம் ஆகியஅமைப்புகள் வெளியிட்ட  தொகுதி நூல்களில் இவருடைய கவிதைகள் இடம்பெற்றுள்ளன. இவை அவருடைய இரண்டாவது சிறுகதை மற்றும் கவிதை  நூல்கள் ஆகும். இக்கருத்தரங்கில்  முனைவர் சுப. திண்ணப்பன் அவர்கள்,   எழுத்தாளர் மாதங்கியின் மரபுக்கவிதைகளைப் பற்றிப்பேசுவார்.

Continue Reading →