அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும் கலை – இலக்கிய சந்திப்பு

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பிரிஸ்பேர்ணில் நடத்தும்  கலை -  இலக்கிய சந்திப்புஅவுஸ்திரேலியாவில் பல வருடங்களாக தமிழ் எழுத்தாளர் விழாக்களையும் கலை, இலக்கிய சந்திப்புகளையும் அனுபவப்பகிர்வு நிகழ்வுகளையும்  நடத்திவரும் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி (22-03- 2014) சனிக்கிழமை குவின்ஸ்லாந்து மாநிலத்தில் கலை – இலக்கிய சந்திப்பு Centenary Community Hub 171 Dandenong Rd , Mount Ommaney QLD 4074 என்னும் முகவரியில்  காலை  10  மணி   முதல்  மாலை  5 மணி  வரையில் நடைபெறும். இலக்கிய  கருத்தரங்கு –  தமிழ்  தட்டச்சு  மற்றும்  விக்கிப்பீடியா  செயல் விளக்கம் –  நூல்  அறிமுகம் – மாணவர் அரங்கு உட்பட பல நிகழ்ச்சிகள்    இடம்பெறும்   இந்நிகழ்வில் கலந்துகொள்ளவிரும்பும் எழுத்தாளர்கள்  – கலைஞர்கள் மற்றும்  அன்பர்கள் தமிழ்  ஆசிரியர்கள் மாணவர்கள்    –  கலை,  இலக்கிய    சுவைஞர்கள்  – ஊடகவியலாளர்கள் மேலதிக  விபரங்களுக்கு  தொடர்புகொள்ளவும்.

Continue Reading →

மெல்பனில் மூத்த கவிஞர் மர்ஹூம் மருதூர்க்கனியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழா

மெல்பனில் மூத்த கவிஞர் மர்ஹூம் மருதூர்க்கனியின் மூன்று நூல்கள் வெளியீட்டு விழாஇலங்கையின் மூத்த கவிஞரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவருமான (மூத்த துணைத்தலைவர்) லங்கா திலகம் – புலவர் நாயகம் மருதூர்க்கனியின் மூன்று நூல்களின் வெளியீட்டு விழா  எதிர்வரும்  15-03-2014  ஆம்  திகதி சனிக்கிழமை மாலை 4  மணிக்கு மெல்பனில் Mulgrave CCTC கேட்போர் கூடம் (44- 60 Jacksons Road, Mulgrave. – Melway: 80k3) மண்டபத்தில் நடைபெறும்.
வெளியிடப்படும்  நூல்கள்:

* மருதூர்க்கனி  கவிதைகள்
* சந்தனப்பெட்டகமும்  கிலாபத்  கப்பலும்
* என்னை  நீங்கள்  மன்னிக்கவேண்டும்.

நூல்களின் வெளியீட்டிலும் அதனைத்தொடர்ந்து இடம்பெறும் இராப்போசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு தமிழ் இலக்கிய சுவைஞர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

Continue Reading →