அற்பாயுளில் மறைந்த அற்புதக்கலைஞன் மண்டலின் ஸ்ரீநிவாஸ்

பிறநாட்டு    நல்லறிஞர்    சாத்திரங்கள்   தமிழ்  மொழியில்  பெயர்த்தல்  வேண்டும்
இறவாத   புகழுடைய  புதுநூல்கள்   தமிழ்மொழியில்  இயற்றல் வேண்டும்
மறைவாக  நமக்குள்ளே   பழங்கதைகள்   சொல்வதிலோர்   மகிமை இல்லை
திறமான   புலமையெனில்   வெளிநாட்டோர்   அதை வணக்கஞ்செய்தல்  வேண்டும்

அற்பாயுளில்  மறைந்த   அற்புதக்கலைஞன் மண்டலின்  ஸ்ரீநிவாஸ்முருகபூபதிஎன்று   மகாகவி  பாரதி    பல்லாண்டுகளுக்கு   முன்னர்   சொன்னார். அவரது   வாக்கிற்கு   சிறந்த   இலக்கணமாக  வாழ்ந்த   மெண்டலின் இசைமேதை   ஸ்ரீநிவாஸ்  தனது   45   வயதில்  ஆயுளை முடித்துக்கொண்டார். ஸ்ரீநிவாஸ்  என்றால்   எந்த   ஸ்ரீநிவாஸ்..?     என்றுதான்    கேட்பார்கள். மெண்டலின்    என்ற   மேலைத்தேய    இசைக்கருவியுடனேயே   தனது    வாழ்நாளை    செலவிட்ட    இந்தக்கலைஞருடன்   அந்த இசைக்கருவியின்    பெயரும்    இணைந்தமையால்  இன்று  அவரது மறைவு    என்றைக்குமே    அஸ்தமிக்காத   அந்த    இசையுடன் பேசப்படுகிறது. மேதாவிலாசம்  மிக்க  பலருக்கு   அற்பாயுள்தானா? எனக்கேட்கச்செய்கிறது  அவரது  மறைவுச்செய்தியும்.   விவேகானந்தர்,   பாரதி,   ஐன்ஸ்றின்,   போன்று   உலகளவில் பேசப்பட்டவர்களும்    அற்பாயுளில்   மறைந்தார்கள்.   அந்த வரிசையில்  இன்று    மெண்டலின்   ஸ்ரீநிவாசன். கர்னாடக    இசையாகட்டும்   மேலைத்தேய    இசையாகட்டும் திரையிசையாகட்டும் அவற்றிலெல்லாம்    சங்கமித்த    மெண்டலின் வாத்தியம் உள்ளத்தை   கொள்ளைகொண்டு  போகும் வல்லமை மிக்கது. தனது இளம்பராயத்திலிருந்தே    தனது    தந்தையிடமிருந்து   இந்த வாத்திய   இசையை    கற்று  வந்து   சாதனைகள்  படைத்த ஸ்ரீநிவாஸ்  பத்மஸ்ரீ  –    சங்கீத   ரத்னா   விருதுகளையும்   பெற்றவர். கீழைத்தேய    வாத்தியக்கருவிகளான   தம்புரா  –  வீணை  –  கோட்டுவாத்தியம்  –   புல்லாங்குழல்  –  நாதஸ்வரம்  –   மிருதங்கம் – தவில்   –  கடம்  –   கஞ்சிரா   –   சதங்கை முதலானவற்றிலிருந்து வேறுபட்டவை   வயலின்  –   கிட்டார்  –      ட்ரம்ஸ்  –   மெண்டலின்.

Continue Reading →

பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு!

- வெங்கட் சாமிநாதன் -நான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணம் தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். ”எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள்.

என் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார்.  அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா,  மிதிலா விலாஸ் என பல தொடர்கதைகள்.  அவ்வளவுதான்  என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.

Continue Reading →

நூல் அறிமுகம்: புதிதாகச் சிந்திப்போம். சமுதாயத்திற்கான கல்வி -பேராசிரியர் மா.சின்னத்தம்பி

நூல் அறிமுகம்: புதிதாகச் சிந்திப்போம். சமுதாயத்திற்கான கல்வி -பேராசிரியர் மா.சின்னத்தம்பி- 'டொக்டர்' எம்.கே.முருகானந்தன் MBBS(Cey), DFM (Col), FCGP (col) , குடும்ப மருத்துவர் -அண்மையில் நான் படித்தவற்றில் என்னை மிகவும் கவர்ந்ததும் எமது சமுதாயத்திற்கு பெரிதும் உதவக் கூடியதும் எனச் சொல்வதானால் அது பேராசிரியர் மா.சின்னத்தம்பி எழுதிய ‘புதிதாகச் சிந்திப்போம்.- சமுதாயத்திற்கான கல்வி’ என்ற நூலாகும். பேராசிரியர் மா.சின்னத்தம்பி பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறைப் பேராசிரியர். எமது சமூகத்திற்கு புதிய ஊற்றுக் கண்ணைத் திறந்துவிடுவது போல எமக்குத் தேவையான கல்வி முறை பற்றி, கட்டுரைகள் மற்றும் உரைகள் வாயிலாக அறியத் தருபவராவார். நூலின் அந்தத் தலையங்கமே மிகவும் அர்த்தபுஸ்டியானது. கல்வி என்பதை அறிவுக் கண்ணைத் திறப்பதற்கானது என்பதை பாரம்பரியமாகப் போற்றி வந்தவர்கள் நாம். ஆனால் கல்வியானது தனி நபரது முன்னேற்றத்திற்கு மட்டுமே ஆனதாக எல்லைப்படுத்தப்படும் துரதிஸ்டவசமான நிலைக்கு நாம் இன்று தாழ்ந்து போயிருப்பதைக் காண்கிறோம்.

Continue Reading →

கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் எழுதிய இரு நூல்களின் வெளியீடும் சான்றோர் கௌரவிப்பும்

கலாபூஷணம் பி.ரி. அஸீஸ் எழுதிய சுட்ட பழமே சுவை அமுதே, தென்றலே வீசி வா ஆகிய இரு நூல்களின் வெளியீடும் கலை இலக்கியத்துறையில் ஈடுபட்டு இலை மறை…

Continue Reading →

வாசிப்பும், யோசிப்பும் 60 – : கனடாத் தமிழ் இலக்கியம்: ‘ழகரம்’ சஞ்சிகை.

வாசிப்பும், யோசிப்பும் 60 - : கனடாத் தமிழ் இலக்கியம்: 'ழகரம்' சஞ்சிகை.வாசிப்பும், யோசிப்பும் 60 - : கனடாத் தமிழ் இலக்கியம்: 'ழகரம்' சஞ்சிகை.கனடாத் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளில் ‘ழகரம்’ சஞ்சிகைக்கும் முக்கியமானதோரிடமுண்டு.  ஆனி 1997, ஆடி 1997, ஆவணி/புரட்டாதி 1997 & ஐப்பசி 1997 என நான்கு இதழ்களே வெளிவந்துள்ள போதிலும், தவிர்க்க முடியாத சஞ்சிகை. ‘ழகரம்’ சஞ்சிகையினை எழுத்தாளர் அ.கந்தசாமி அவர்களே வெளியிட்டு வந்ததாக நான் கருதுகின்றேன். எழுத்தாளர் அ.கந்தசாமி எழுபதுகளில் யாழ் நகரில் புகழ்பெற்ற பெளதிக ஆசிரியராக விளங்கியவர். கனடா வந்த பிறகுதான் இவரது இலக்கியப் பங்களிப்பு பற்றி அறிந்து கொண்டேன். ‘ழகரம்’ சஞ்சிகை 4 இதழ்களே வெளிவந்தாலும், கனடாத்தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்த்த சஞ்சிகைகளிலொன்று. கவிதைகள், தொடர்கதைகள் கனடாவில் வெளிவந்த சஞ்சிகைகள், பத்திரிகைகளில் தொண்ணூறுகளில் எழுதியிருக்கின்றார். இந்தப்பதிவின் நோக்கம் கனடாத் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களிப்பு செய்த பத்திரிகைகள், சஞ்சிகைகளை பற்றிய விபரங்களை ஆவணப்படுத்துவதுதான். குழு மனப்பான்மையுடன் பலர் செயற்படுவதால், பலரது ஆக்கபூர்வமான பங்களிப்புகள் பற்றிய விபரங்களும் மறைக்கப்பட்டு விடுகின்றன. இவ்விதமான சஞ்சிகைகள், பத்திரிகைகள் பலவற்றில் எழுதியவர்களே மேற்படி சஞ்சிகைகள், பத்திரிகைகள் பற்றி எழுதுதில்லை; பேசுவதில்லை. இந்நிலை ஆரோக்கியமானதொன்றல்ல.

Continue Reading →

என்னோடு வந்த கவிதைகள்—6

“மயக்கம் எனது தாயகம்
மெளனம் எனது தாய்மொழி.
கலக்கம் எனது காவியம்-நான்
கண்ணீர் வரைந்த ஓவியம்” –
   கண்ணதாசன்

- பிச்சினிக்காடு இளங்கோ கும்மிப்பாடல்கள், நடவுப்பாடல்கள், காவடிப்பாடல்கள், நாடகப்பாடல்கள், நாடகத்தில் பாடப்பட்ட திரைப்பாடல்கள், மாலையில், இரவில் நண்பர்கள் பாடிய திரைப்பாடல்களுக்கு மொழியை, இசையை, கலையை, அதன் சுவையை உணரவைத்ததில் பெரும்பங்கு உண்டு. ஒரு திரைப்பாடலைக்கூட முழுமையாய் நான் பாடியதில்லை. கற்றுக்கொண்டதுமில்லை. கோடையில் பிச்சினிக் குளக்கரையில் நிலா இரவில் வட்டமாக உட்கார்ந்துகொண்டு மூத்தவர்கள் தங்கள் இசை ரசணையை கச்சேரியாக நடத்துவார்கள்.அதைக்கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். பேச்சுப்போட்டி,பாடல்போட்டி எதுவும் நடைபெறாத ஊர் எங்கள் ஊர். உள்ளூர் ஏகலைவன்களே எங்களுக்கு முன்மாதிரி. அவர்களைப்பார்த்து சூடுபோட்டுக்கொண்டு புலியாய் மறியவர்கள் நாங்கள். ஒரு முளைக்கொட்டு மாறியம்மன் விழா நடைபெறும்போது நான் ஒரு பாடலை முதன்முதலாக ஒலிவாங்கியை எடுத்துப் பாடினேன். எங்கள் பள்ளிக்கூடத்திற்குள் இருந்துகொண்டு யாரும் பார்க்காதவாறு நின்றுகொண்டு பாடினேன்.அதுவரை நான் பாடி யாரும் கேட்டதில்லை. நானும் பாடியதில்லை. என்னைப்பாடச்சொன்ன அந்தப்பாடலைப் பாடிவிடுவது என முடிவெடுத்துத் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பாடினேன். எல்லோரும் கேட்டார்கள். அவர்களிடமிருந்து விமர்சனத்தை எதிர்பார்த்தேன்.

Continue Reading →

திரும்பிப்பார்க்கிறேன்: இலங்கையில் கல்விக்கும் இலக்கியத்திற்கும் அயராது சேவையாற்றிய ஆய்வறிஞர் முகம்மது சமீம்.

muhamatsameem9.jpg - 33.91 Kbமுருகபூபதிகடந்த  சில  மாதங்களாக   முற்போக்கு   இலக்கிய   முகாமிலிருந்து அடுத்தடுத்து   எனது  இனிய   நண்பர்களை  நான் இழந்து கொண்டிருக்கின்றேன். இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின்   முன்னாள் செயலாளர்   நண்பர்   பிரேம்ஜி   ஞானசுந்தரன்   அவர்களின்   மறைவின் துயரத்தின்  சுவடு   மறையும்   முன்னர்   தமிழ்   நாட்டில்   மூத்த படைப்பாளி   இலக்கிய  விமர்சகர்   தி.க.சிவசங்கரன் மறைந்தார். அவருக்கும்   இரங்கல்  எழுதி   எனது   நினைவுகளுக்கு   அவரை மீண்டும்   அழைத்து   மனதிற்குள் உரையாடிக்கொண்டிருந்தவேளையில் —  இதோ  நானும்  வருகிறேன் என்னையும்    அழைத்துக்கொள்ளும்   என்று   நெஞ்சத்தினுள் பிரவேசித்துவிட்டார்     இனிய   நண்பர்    சமீம்   அவர்கள். அவரது   மறைவுச்செய்தியை  அறிந்தவுடன்  கடந்த  காலங்கள்தான் ஓடிவருகின்றன.   நான்   இலக்கிய   உலகில்   பிரவேசித்த  காலப்பகுதியில்  அதாவது 1972  ஆம்  ஆண்டு   காலப்பகுதியில்தான்   சமீம்  எனக்கு அறிமுகமானார்.  அவர்  கம்பளை  சாகிராக்கல்லூரி   அதிபராகவும்  பின்னர்   கிழக்குப்பிராந்திய   கல்வி  பணிப்பாளராகவும்  பணியாற்றிய காலகட்டத்தில்    எமது    இலங்கை   முற்போக்கு   எழுத்தாளர்   சங்கத்தின்    பணிகளிலும்   தீவிரமாக   இணைந்து   இயங்கினார்.

Continue Reading →

நூற்றொகை விளக்கத்தின் பொதுவியல் கட்டமைப்பு

நூற்றொகை  விளக்கத்தின்  பொதுவியல் கட்டமைப்புபாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில்,  நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு,  நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு,  அறிவு,  நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.

நூல் – விளக்கம்
     நூல் என்பதற்கு நூற்றல் (திரித்தல்) என்ற தொழிலாற் பிறந்த பஞ்சுநூல் என்று பொருள். தொல்காப்பியர் காலத்தில் ‘பாட்டுரைநூல்’ என்னும் நூற்பாவால் பாட்டு முதலியன நூல் என்ற பெயரைப் பெறாமல், இலக்கண நூலே, நூல் எனப் பெயற்பெற்றது என்று பொருளிடுகிறார். தொல்காப்பியர் இதனை,

“நூலெனப்படுவது நுவலுங் காலை
 முதலு முடிவும் மாறுகோ னின்றித்
  தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
 உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி
 நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே”
(செய்.நூற்:159)

Continue Reading →

நூற்றொகை விளக்கத்தின் பொதுவியல் கட்டமைப்பு

நூற்றொகை  விளக்கத்தின்  பொதுவியல் கட்டமைப்புபாயிரங்கள் மொழிகளின் ஆக்கத்திற்கு ஏற்ப காலந்தோறும் அமைப்பு, பொருள் உருப்பெருக்கம் என்ற தன்மையில் பெருகி வருகின்றன. மரபிலிருந்து மாற்றம் பெறாமல் உறுப்புக்களை ஏற்றம் பெறச்செய்கிறது. நன்னூல், தொல்காப்பியம் பாயிர இலக்கணத்தில் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் சிறப்புப் பெருவது போல் நூற்றொகை விளக்கத்தில் பொதுவியல் சிறப்பு பெருகிறது. பொதுவியல் கட்டமைப்பில்,  நன்னூலரின் பொதுப்பாயிரக் கட்டமைப்பினைப் போல் தொடக்கத்திலே அறிவு,  நூல் ஆகியவற்றை சூத்திரமாகக் கட்டமைத்துள்ளார் ஆசிரியர். இது தொல்காப்பிய மரபிலிருந்து மாற்றம் பெற்று காணப்படுகிறது. ஏனெனில் தொல்காப்பியர் மரபியலில் நூலினைப் பற்றி கூறியுள்ளார். அவற்றை ஒப்பிடுவதோடு,  அறிவு,  நூல், நூலின்வகை அதற்கான பொது இலக்கணம் மற்ற நூல்களிலிருந்து ஆசிரியர் மாற்றம் பெறுவதற்கான காரணம் ஆகியவற்றைப் பற்றி ஆராய்கிறது இக்கட்டுரை.

நூல் – விளக்கம்
     நூல் என்பதற்கு நூற்றல் (திரித்தல்) என்ற தொழிலாற் பிறந்த பஞ்சுநூல் என்று பொருள். தொல்காப்பியர் காலத்தில் ‘பாட்டுரைநூல்’ என்னும் நூற்பாவால் பாட்டு முதலியன நூல் என்ற பெயரைப் பெறாமல், இலக்கண நூலே, நூல் எனப் பெயற்பெற்றது என்று பொருளிடுகிறார். தொல்காப்பியர் இதனை,

“நூலெனப்படுவது நுவலுங் காலை
 முதலு முடிவும் மாறுகோ னின்றித்
  தொகையினும் வகையினும் பொருண்மை காட்டி
 உண்ணின் றகன்ற உரையொடு பொருந்தி
 நுண்ணிதின் விளக்கல் அதுவதன் பண்பே”
(செய்.நூற்:159)

Continue Reading →

கு. சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருது அறிவிப்பு!

கு. சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளை விருது அறிவிப்பு!கு. சின்னப்பபாரதி இலக்கிய அறக்கட்டளையின் 6 -வது ஆண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக்டோபர் 2 -ம் திகதி (02 – 10 – 2014) நாமக்கல்லில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் பரிசு பெற்றோருக்கான சான்றிதழ் – விருதுச் சின்னம் – பணமுடிப்பு ஆகியன வழங்கப்படவுள்ளன.

முதன்மை விருது – பணமுடிப்பு  – ரூபா ஒரு இலட்சம் – பேராசிரியர் அருணன் – (தமிழகம்)
நாவல் – ”குடை நிழல்” – தெளிவத்தை ஜோசப் – (இலங்கை) – 10000 ரூபா

சிறுகதை – தலா 10000 ரூபா

1.  ”தவிக்கும் இடைவெளிகள்” – உசாதீபன் – (தமிழகம்)
2.  ”இப்படியுமா” – வி. ரி. இளங்கோவன் – (பாரிசு)
3.  ”ஜயந்தி சங்கர் கதைகள்” – ஜயந்தி சங்கர் – (சிங்கப்பூர்)
4.  ”வெந்து தணிந்தது காலம்” – மு. சிவலிங்கம் – (இலங்கை)

கட்டுரை – 10000 ரூபா –  ”நூல் தேட்டம்” – என். செல்வராஜ◌ா – (இலண்டன்)

வாழ்நாள் சாதனை – மலையக கலை இலக்கிய மக்கள் பணி – 10000 ரூபா – அந்தனி ஜீவா – (இலங்கை)

Continue Reading →