எழுத்தாளர், அச்சு, இலத்திரனியல் ஊடக ஆசிரியர் மாலன் உடனான சந்திப்பும் கலந்துரையாடலும்

தொடக்க உரை – ராஜேஸ் பாலாவழிப்படுத்தல் எம் .பௌசர்காலம் 03 செப்டம்பர் 2016சனி மாலை 5.30 தொடக்கம் 8.30 வரை அவரது நூல் அறிமுகமும், புலம் பெயர்…

Continue Reading →

ஆய்வு: விஜயம் நாவலில் பொருளாதார மேம்பாடு

ஆய்வுக் கட்டுரைகள்!முன்னுரை
பொருளாதார மேம்பாடு என்பது வறுமை நிலையில் உள்ள மக்களை முன்னேற செய்யும் வழிமுறைகளை உள்ளடக்கியது. 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து தொழிலாளி, முதலாளி எனும் வர்க்க வேறுபாடு வலுப்பெற்று வந்தது. அதன் அடிப்படையில் ஏழைகளின் உழைப்பைச் சுரண்டி உழைப்பிற்கேற்ற ஊதியமும், கூலியும் கொடுக்க மறுக்கின்ற சமூகநிலை உருவாயிற்று. இவை தொடர்பான பதிவுகளும் நாவலில் இடம் பெற்றுள்ளன. இவற்றை எடுத்து விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

பொருளாதாரம்
பொருளாதாரம் பகுத்தறிவுச் சிந்தனையின்றிச் செயல்படும் தன்மையினை விஜயம் நாவல், தீமையைப் பழிப்பதற்கும், நன்மையைப் புகழுவதற்கும் ஓர் எல்லை உண்டு. நல்ல கொள்கை என்றாலும் அதைக் தவறான பாதையில், பகுத்தறிவின்றி உபயோகப்படுத்தத் துணிந்தால், அதனால் கேடுதான் விளையும். சோம்பி வாழ்பவன் சுகவாசி ஆவானா? உழைப்பது கவுரவக் குறைவு என்று நினைத்து, சுகவாசி வாழ்வை நாடிய நம் நாட்டார் எல்லாத் தொழில்களையும் பறிகொடுத்துவிட்டு, சாப்பாட்டுக்குப் போதுமான தானியங்களைப் பயிராக்க முடியாத இங்கிலீஷ்காரரின் தேசத்தைக் கைத்தூக்கி விட்டுவிட்டார்கள்.1 இவ்வாறான செய்தியினை எடுத்துரைக்கின்றது. மேலும், வருமானத்திற்கு மீறிச் செலவு செய்யும் நிலையினைப் பற்றி விஜயம் நாவல், வாழ்க்கையைத் துண்டு துண்டாக நோக்குவது கூடாது. வாழ்வை ஒன்று சேர்த்துப் பார்க்கவேண்டும். வாழ்க்கையின் பல பகுதிகள் ஒன்றையொன்று பின்னிக் கொண்டு கிடக்கையில், ஒன்றிரண்டு பகுதிகளைமட்டும் மாற்றிக்கொள்ளுவது முடியாத காரியம். ஏனைய பகுதியில் மாறுதல் ஏற்பட்டால், அது வேறு பகுதியில் மாறுதல் ஏற்பட்டால், அது வேறு பகுதியில் போய்ப் பாதிக்கும். சிறிய புதுப் பழக்கமான காபியை எடுத்துக் கொள்ளுவோம். பழையது சாப்பிடப் பணம் வேண்டாம். காபிக்கு அதிகமான பணம் தேவை. அந்தப் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் அல்லது கடன் வாங்க வேண்டும். மேலும், ஒருவர் வீட்டில் காபி சாப்பிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்கள் யாவரும், காலக்கிரமத்தால் காபிக் குடியர்கள் ஆகிறார்கள். எல்லோருக்கும் நவ நாகரிக ஆசை தோன்றுகிறது. இதனால், அந்தக் குடும்பத்தின் போக்கே, விரைவில் மாற்றம் அடைகிறது. கல்யாணம் என்பது மதச் சடங்காக இருந்ததுபோக, அது இப்பொழுது வியாபாரத் தொழிலாக ஆகிவிட்டது‚ இந்த நிலைமையை, நம் முன்னோர் பொறுப்பார்கள் என நீங்கள் எண்ணுகிறீர்களா? 2 என்று எடுத்துரைக்கின்றது. பகுத்தறிவுவாதி என்பவன் தனது வாழ்வில் சராசரி வாழ்க்கைத்தரம் என்னவோ அதன்படி நடந்து கொள்வதை இலட்சியமாகக் கொள்ள வேண்டும். பெரியார் வருமானத்திற்கு மீறிய செலவினைப் பற்றி, தேவைக்கு மட்டுமே செலவு செய்வது சிக்கனம். தேவை மேல் செலவு செய்வது ஊதாரித்தனம். தேவைக்கே செலவு செய்யாமலிருப்பது கருமித்தனம்.3 என்று சிக்கனம், ஊதாரித்தனம், கருமித்தனம் போன்றவற்றிற்குத் தெளிவாகப் விளக்கம் அளித்துள்ளார்.

Continue Reading →

தமிழ் ஸ்டுடியோ.காம்: ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுடன் ஓர் உரையாடல்

நிகழ்வுகளைக் கண்டு களிப்போம்!04-09-2016, ஞாயிறு மாலை 5.30 மணிக்கு.
இடம்: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.

ஹிந்தி சினிமாவை எப்போதும் தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது தமிழ் ஒளிப்பதிவாளர்கள்தான். உலகில் ஒளிப்பதிவை பொறுத்தவரை தமிழர்களின் தொழில்நுட்பத்திறன் வியக்கத்தக்கது. அதில் மிக முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். எந்நேரமும் விமானத்தில் பறந்துக்கொண்டே இருப்பார். அவருக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டுக்காக தமிழ் ஸ்டுடியோ நடத்தும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். இதுவரை இயக்குநர்களோடு மட்டுமே கலந்துரையாடியுள்ளோம். முதல்முறையாக பியூர் சினிமா புத்தக அங்காடியில் ஒளிப்பதிவாளரோடு ஒரு கலந்துரையாடல். தமிழில் ஆட்டோகிராப், வேட்டையாடு விளையாடு, தசாவதாரம், அந்நியன் உள்ளிட்ட படங்களுக்கும், ஹிந்தியில் மிகவும் புகழ்பெற்ற பர்ஃபி, ராம் லீலா போன்ற படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்த ரவிவர்மன், தற்போது மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். ரவிவர்மன் எதிர்வரும் ஞாயிறு பியூர் சினிமா புத்தக அங்காடியில் பார்வையாளர்களுடனான கலந்துரையாடலில் பங்கேற்கிறார். ஒளிப்பதிவு பற்றியும், அதன் தொழில்நுட்பம், சினிமா ரசனையில் ஒளிப்பதிவின் பங்கு, ஒளியமைப்பு குறித்தும், அதன் தேவை குறித்தும் ரவிவர்மனோடு உரையாடலாம். அனைவரும் வருக…

Continue Reading →