ஆய்வு: சங்கப் பாலைத்திணைக் கவிதைகளில் தொல்காப்பியரின் பயன் கோட்பாடு

கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை அறிவியல் கல்லூரி, திருமலையாம்பாளையம், கோயமுத்தூர் - 105. -சங்க காலத்தில் மாந்தர்களிடையே நிலவிய அகப்புற உணர்வுகளை உணர்த்துவதற்குத் தேவையான புலப்பாட்டு முறைகளையும் கொள்கைகளையும் வரையறை செய்துகொண்டு அவற்றிற்கிணங்க இயற்றப்பட்ட தமிழ் இலக்கிய மரபினை எடுத்துரைக்கும் பகுதி பொருளிலக்கணமாகும். இப்பொருளிலக்கணத்தில் தொல்காப்பியர் தன் காலத்தில் நிலவிய இலக்கியங்களைத் தரவுகளாகக் கொண்டு செய்யுளியலில் இலக்கியத்தின் வடிவம், உள்ளடக்கம், உத்திகள், வகைமை ஆகியவற்றைப் படைத்துள்ளார் எனலாம். பிற்காலத்தில் இவைகள் அனைத்தும் இலக்கியக் கோட்பாடுகளாகத் தோற்றம் பெற்றன. செய்யுளியலின் உறுப்புகள் இலக்கியக் கோட்பாடுகளாகத் திகழ உரையாசிரியர்களின் உரைகள் நமக்கு ஏதுவாக அமைகின்றன. தொல்காப்பியரின் பயன் கோட்பாடு சங்க காலச் சமூக இயங்கியல் தளத்தில் தலைவன், தலைவி காதல் வாழ்வில் நிகழ்ந்த மாற்றம் மற்றும் சமுதாயத்திற்குத் தேவையான நற்பயன்களை இலக்கியம் படிக்கும் வாசகனைச் சென்றடையும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் இன்றைய நவீன இலக்கியங்களான நாவல், கவிதை, சிறுகதை போன்றவைகளிலும் தொல்காப்பியரின் பயன் கோட்பாட்டினைப் பொருத்திப் பார்க்கலாம் என்பது இக்கட்டுரையின் நோக்கமாகும். ஓவ்வொரு இலக்கிய வகையும் ஏதோ ஒரு பயனைச் சமுதாயத்திற்கு விட்டுச்செல்கிறது  அவற்றினை இனம்கண்டு வெளிக்கொண்டு வரலாம்.

தொல்காப்பியரின் பயன் கோட்பாடு
தமிழில் தோற்றம் பெற்ற படைப்புகள் அனைத்தும் வாசிக்கும் வாசகனுக்கு ஏதாவதொரு பயன் நல்குமாறு அமைகின்றன. அப்படைப்பினைச் சமூக இயங்கியல் தளத்தோடு பொருத்தும் போது ஏதாவதொரு நற்பயனை விட்டுச் செல்லும். இதற்குத் தொல்காப்பியர் இலக்கணம் படைத்துள்ளார். இதனை,

“இதுநனி பயக்கு மிதனா னென்னுந்
தொகைநிலைக் கிளவி பயனெனப் படுமே”  (தொல்.பொருள்.பேரா.நூ.515)

என்ற நூற்பாவில் ஒவ்வொரு படைப்பினையும் தொகுத்துரைத்தால் ஏதாவதொரு பயனை நல்கும் என்று தொல்காப்பியர் பயன் என்னும் உறுப்பினை திறம்படக் கையாண்டுள்ளார் எனலாம். இதற்கு “யாதானும் ஒரு பொருளைப் பற்றிக் கூறியவழி இதனாற் போந்த பயன் இதுவென விரித்துக் கூறாது முற்கூறிய சொல்லினாலே தொகுத்துணர வைத்தல் பயன் என்னும் உறுப்பாம்.”1 என்று க.வெள்ளைவாரணன் தனது ஆய்வுரையாகக் கொடுத்துள்ளார்.

Continue Reading →