எம். ஜெயராமன் (ஆஸ்திரேலியா) கவிதைகள்!

- எம் . ஜெயராமன், மெல்பேண், அவுஸ்திரேலியா -1. முத்தமிழ் வித்தகர் !

மட்டுநகர் வாவியிலே மீன்கள் பாடும்
மகளிரது தாலாட்டில் தமிழ் மணக்கும்
கட்டளகர் வாயிலெல்லாம் கவி பிறக்கும்
களனிகளில் நெற்பயிர்கள் களித்து நிற்கும்
இட்டமுடன் கமுகு தென்னை ஓங்கிநிற்கும்
இசைபாடிக் குயில்களெங்கும் மயக்கி நிற்கும்
எத்திக்கும் இயற்கைவளம் தன்னைப் பெற்ற
எழில் பெற்ற இடமே கிழக்கிலங்கையாகும் !

ஈழத்தின் கிழக்காக இருக்கின்ற காரைதீவில்
ஞானமாய் வந்துதித்தார் நம்துறவி விபுலாநந்தர்
துறவியாய் ஆனாலும் தூயதமிழ் துறக்காமல்
அமைதியாய் பணிசெய்து அவருயர்ந்து நின்றாரே !

விஞ்ஞானம் படித்தாலும் விரும்பியே தமிழ்படித்தார்
நல்ஞானம் அவரிடத்தில் நயமோடு இணைந்ததுவே
சொல்ஞானம் சுவைஞானம் எல்லாமும் சேர்ந்ததனால்
செல்லுமிட மெல்லாமே  சிறப்பவர்க்குச் சேர்ந்தனவே !

Continue Reading →

கவிப்புயல் இனியவன் கவிதைகள்!

கவிதை படிப்போமா?1. குறுங்கவிதைகள்

1.
அவள்
ஒரே ஒருமுறை….
கண் அசைத்தாள்…..
ஆயிரம் முறை …..
கவிதை எழுதி விட்டேன்……

ஒரே ஒருமுறை …..
சிரித்தாள் நான் ….
சிதறிய தேங்காய்…
ஆகிவிட்டேன்…..!!!

2.
என் கவிதையை நீ
காதலிக்கவில்லை ….
அதனால் தான் உனக்கு …..
காதல் வரவில்லை …..!!!

Continue Reading →

கவிதை: பெண் குழந்தை இல்லாதவனின் பிரார்த்தனை

கவிதை: பெண் குழந்தை இல்லாதவனின் பிரார்த்தனைஜவுளிக்கடையில் கண்கவரும்
பெண்பிள்ளை ஆடைதனை காண்கையில்
அதைவாங்கி அணிவித்து அழகுபார்க்க
ஆசைப்பட்டுவிடும் மனது .

எவருடையதாயினும் பெண்குழந்தையை
தூக்கி எடுத்துக் கொஞ்சிவிட்டுத்
திருப்பிக் கொடுக்கையில் ஒட்டிக்கொள்ளும்
பிரியங்களின் நிறங்களை பிரிப்பது சிரமமாகிறது

அக்கா அக்கா என்று சற்றே வயதுள்ள
அடுத்தவீட்டுப் பெண்குழந்தையுடன்
விளையாடிவிட்டு வீட்டுக்குள் நுழைந்து
ஏம்ப்பா எனக்குமட்டும் அக்கா இல்லை
என்று வருந்தும் மகனிடம் காரணமில்லாத
பொய்சொல்ல வேண்டி வந்துவிடுகிறது

Continue Reading →

கவிதை: பெயரும், சாதியும்!

கவிதை: பெயரும், சாதியும்!

எலேய்…. சாதி, அசிங்கம்டா….
பேருக்கு பின்னாடி சாதி போடுரது
பெரிய அசிங்கம்டான்னு  சொன்னேன்…
இல்ல இல்ல… அதுதான் எங்க பாரம்பர்யம்…
அதுதான் எங்க குலவழக்கம்…
காலம் காலமாய் எங்களுக்கான
அடையாளம் பெயரோட
சாதி போடுறதுதான்னு
உணர்ச்சி வசப்பட்டு பேசுச்சு பயபுள்ள…

அட, இம்புட்டு டென்சன் ஆவுரானே…
நெசமாத்தான் இருக்கும் போலுக்கோன்னு நம்பீட்டேன்…
சரிடா தமிழ்க்காரந்தான நீயி?
உன் மூதாதையர் யாருன்னு பாப்போம்னு தேடினேன்….
சங்ககாலப்பெயரில் 473 பேர் கிடைத்தது.
ஒரு பய கூட தன் பெயருக்குப் பின்னால்
வன்னியர் – தேவர்- கவுண்டர் – நாடார் –
ஐயர்- ஐயங்கார் என்று போட்டிருக்கவில்லை.

சங்கம் மருவிய காலப்பெயர்களையும் பார்த்தேன்.

கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் – திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் – கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் – ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை
ஊகூம்…. இங்கும் சாதிப் பெயரைக் காணோம்.

Continue Reading →

கவிதை: கிராமத்து வீடே! கிளறுகின்றாய் என் நினைவுகளை!

– எனது சிறு பராயத்தில் கைதடி, தச்சன்தோப்பிற்கருகே உள்ள கோவிலாக்கண்டி என்ற சிற்றுரில் கிடைத்த அனுபவங்களின் வெளிப்பாடே இக்கவிதையின் தளம்.=  குருஜி நித்தி கனகரத்தினம் –

நித்தி கனகரத்தினம்

கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.

வைக்கோல் பட்டடைக்குள் ஒளித்த நாட்கள்
வேர்வையில் கலந்த கூலத்துத் தினவகற்ற
வயற்கிணற்றினிற் குளித்த நாட்கள்
வரம்புகளில் தடுக்கி விழுந்த நாட்கள்

கிராமத்து வீடே
கிளறுகின்றாய் என் நினைவுகளை.
தென்னங்கீற்றும், இளநீரும் பசுக்கன்றும்,
என்னை வா என்கின்றன..
வரவேற்கின்றன.

Continue Reading →

ஆரம்பிக்கிறது சர்வதேச புத்தகக் கண்காட்சி. செல்ல நீங்கள் தயாரா?

“A reader lives a thousand lives before he dies, said Jojen. The man who never reads lives only one.”
― George R.R. Martin, A Dance with Dragons, Chapter 34

இலங்கையின் இலக்கிய மாதமான செப்டம்பரின் ‘சர்வதேசப் புத்தகக் கண்காட்சி’ 16.09.2016 முதல் கொழும்பில், BMICH (Bandaranaike Memorial International Conference Hall – பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம்) இல் ஆரம்பமாகவிருக்கிறது. இக் கண்காட்சி எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடரவிருக்கிறது.

இத் தினங்களில் தினசரி காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறுவதோடு, கண்காட்சியின் இறுதி நாளான 25 ஆம் திகதி, இரவு 12 மணி வரைக்கும் கடைகள் திறந்திருக்கும். இம் முறை 410 புத்தகக் காட்சியறைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் வாசகர்களுக்காக புத்தகங்களை வழங்க தயாராக உள்ளதோடு, அவற்றுள் 60 விற்பனை நிலையங்கள் வெளிநாட்டு பதிப்பகங்களுக்கானவை. அனுமதிக் கட்டணம் ஒருவருக்கு 20/= மாத்திரமே. அத்தோடு இங்கு விற்கப்படும் அனைத்துப் புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 20% கழிவு கிட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வருடம்தோறும் நடைபெறும் மிகப் பெரிய அளவிலான புத்தகக் கண்காட்சி இதுவாகும். ஆகவே தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் இக் கண்காட்சியில் ஒன்று கூடுவர். எங்கும் சன நெரிசலும், புத்தகங்களுமே நிறைந்திருக்கும் இக் கண்காட்சியில் நீங்கள் வாங்க விரும்பும் புத்தகங்களை எளிதாகப் பெற்றுக் கொள்ள சில வழிமுறைகளை அனுபவ ரீதியில் குறிப்பிட விரும்புகிறேன்.

Continue Reading →

அயராமல் இயங்கிய ஆளுமைக்கு அஞ்சலிக்குறிப்பு: ஈழத்து இலக்கியக் குடும்பத்தின் மூத்த சகோதரி ‘குறமகள்’ வள்ளிநாயகி ( 1933 – 2016)

குறமகள் (வள்ளிநாயகி இராமலிங்கம்)இரண்டு  வயதில்  வாசிக்கத்தொடங்கி,  நான்கு வயதில் கட்டுரை எழுதி, பதினேழு வயதில் சLateKuramagalிறுகதை படைத்து, உயர்கல்வியில் தேர்ச்சியடைந்து, ஆசிரியராகி, வெளிவாரி பட்டப்படிப்புடன் நாடகத்துறையிலும் பயின்று,  எழுத்தாளராக, பெண்ணிய ஆளுமையாக, சமூகச்செயற்பாட்டளராக, பேச்சாளராக பரிமளித்து அயற்சியின்றி  இயங்கி,   கனடாவில்  மௌனமாக  விடைபெற்ற  ஈழத்தின்  மூத்த எழுத்தாளர் பற்றி அறிந்திருக்கிறீர்களா…? அவர்தான் வள்ளிநாயகி என்ற இயற்பெயருடனும் குறமகள் என்ற புனைபெயருடனும்  வாழ்ந்து தமது 83 ஆவது வயதில்  இம்மாதம் 15 ஆம் திகதி கனடா ரொரண்டோவில் மறைந்த இலக்கியவாதி.

இலங்கையின் வடபுலத்தில் 1933 ஆம் ஆண்டு ஒரு மத்தியதரக்குடும்பத்தில் பிறந்த வள்ளிநாயகியையும் அன்றைய சமூக அமைப்புத்தான் ஒரு படைப்பாளியாக்கியிருக்கிறது. ” வாழ்வின் தரிசனங்களே தாம் எழுதும் படைப்புகள் ” என்றுதான் எழுத்தாளர்கள் சொல்வார்கள். வள்ளிநாயகியும்  இதற்கு விதிவிலக்கல்ல.  அவருக்கு  பன்னிரண்டு வயதிருக்கும்போது அவர் வீட்டுக்கு   அயலில்  ஒரு  குடும்பத்தில்  நிகழ்ந்த  மனதை  உருக்கும் சம்பவத்தால்  மனதளவில்  பெரிதும்  பாதிப்படைந்திருந்து  ஐந்து ஆண்டுகள்  கடந்தும்  அந்தச்சம்பவம்  தந்த  அழுத்தத்தினால் தமது  17 வயதில் அவர்  எழுதிய  முதலாவது  சிறுகதைதான்  போலி கௌரவம். அந்நாளில் வடக்கில் வெளிவந்த  ஈழகேசரியில் பதிவாகியது.

ஒரே  குடும்பத்தைச்சேர்ந்த  ஒரு  அண்ணனும்  தங்கையும்  திருமணச் சீதனப்பிரச்சினையால் அடுத்தடுத்து   தற்கொலை செய்துகொள்கின்றனர். அப்பொழுது அந்தத்தங்கை நிறைமாதக்கர்ப்பிணி. சீதனம் கேட்டு தொல்லை தந்த அவள் கணவனால் அந்தக்குடும்பத்தில் நேர்ந்த பேரவலம் 12 வயதுச்சிறுமியான வள்ளிநாயகியை பாதித்திருக்கிறது. சமூகம் இப்படித்தான் இருக்கும். ஆனால்,  சமூகம் எப்படிருக்கவேண்டும் என்பதை அந்த இளம்வயதிலேயே சிந்தித்து,  அவர் எழுதிய  முதல்கதையில் சீதனப் பேச்சுவார்த்தையில் ஈடுபடாமல் கொடுத்ததை வாங்கிக்கொள்ளும் நாயகனை அவர் படைத்துக்காண்பித்திருக்கிறார்.  பின்னர் சீதன முறையை ஆதரிக்கும்  சமூகச்சீர்கேட்டுக்கு  எதிராக  தனது  எழுத்துக்களை போர்க்குரல் ஆக்கியிருக்கிறார்.

Continue Reading →