ஆய்வு: : வள்ளுவர் வகுத்த வணிகவியலும் நிதிமேலாண்மைக் கொள்கையும்

 பா.கனிமொழி, முனைவர் பட்ட ஆய்வாளர், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், இலாஸ்பேட் – புதுச்சேரி – 08 -உலகமொழிகள் எல்லாம், வார்த்தைகளுக்கு தடுமாறிக் கொண்டிருந்த பொழுது நம் தமிழ் மொழியானது இலக்கண இலக்கியங்களை தன்னகத்தே உருவாக்கி செழிப்புற்றிருந்தது. அதில், குறிப்பாக உலகப்பொதுமறை எனப்போற்றப்படும் திருக்குறள் எல்லா துறைகள் பற்றிய உள்ளடக்கத்தையும் கொண்டிருந்தது. அண்மைக்காலத்தில் உலகநாடுகளில் அரசு மற்றும் தனியார் துறைகளில் வெற்றிக்குரிய தொழிலாக போற்றப்படும் வணிகம், வர்த்தகம், நிர்வாகம், நிதிமேலாண்மை போன்றவற்றின் அடிப்படைக்கொள்கைகள் நூற்றுக்கும் மேற்பட்ட உலகமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளில் இடம்பெற்றுள்ள கருத்துகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.        

வணிகம் அல்லது தொழில் தொடங்கும் முறை
எந்த ஒரு செயலையும் திட்டமிடாமல் தொடங்குவது பயனற்றதாகும். அதிலும் வர்த்தகம் செய்ய விரும்பினால் மிகுந்த கவனத்தோடு கள ஆய்வுப்பணி செய்து தான் தொடங்க வேண்டும். ஏனெனில், நாம் எதை வணிகம் செய்யப் போகிறோம், எப்படிச் செய்யப் போகிறோம், எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம், வரவு செலவு எவ்வாறு அமையும் என்பது பற்றிய தீர்மானத்திற்குப் பிறகு தான் வணிகம் செய்ய தொடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதனையே,

“அழிவதுவும் ஆவதுவும் ஆகி வழிபயக்கும்
ஊழியமும் சூழ்ந்து செயல்”             ( குறள் : 461 )

என்ற குறட்பாவில் எடுத்துரைக்கிறார். மேலும், எந்தத் தொழிலையும் செய்யத் தொடங்கும் பொழுது அதற்கு முதலில் ஏற்படும் செலவையும், செலவுக்குப் பின் உண்டாகும் வரவையும், எதிர்காலத்தில் அத்தொழில் கொடுக்கும் இலாபத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆராய்ந்து ஏற்புடையதாக இருந்தால் அத்தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நிதி மேலாண்மையின் கொள்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது இக்குறளின் கருத்தாகும்.

Continue Reading →

எதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா?

(* ஆகஸ்ட் 2016 காலச்சுவடு 200வது இதழில் வெளியாகியுள்ள ‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’ என்ற கட்டுரையை முன்வைத்து சில கருத்துப்பகிர்வு)


எதிர்வினை: படைப்பாளிகள் என்ன கிள்ளுக்கீரைகளா?

- லதா ராமகிருஷ்ணன் -

சமீபத்தில் இறந்த மூத்த எழுத்தாளர் கோமதி தனது புதினம் ஒன்றை பல வருடங்களுக்கு முன்பு ஒரு பெரிய பத்திரிகைக்கு அனுப்பிவைத்திருந்த தாகவும், பல மாதங்களுக்குப் பிறகு அந்தக் கையெழுத்துப்பிரதி சாவகாசமாகத் திருப்பியனுப்பப்பட்டு, அதன்பின் பின் அதே புதினம் சில நுட்பமான மாற்றங்களோடு (?!?!?!?!!!) இன்னொரு பெரிய எழுத்தாளரின் பெயரில் வெளிவர ஆரம்பித்ததாகவும் மிகவும் வருத்தத்தோடு தெரிவித்தார். எழுத்தாளர் சூடாமணியின் சிறுகதை ஒன்று சில நுட்பமான (?!?!?!?!!!) மாற்றகளோடு வேறொருவர் பெயரில் திரைப்படமாக வெளிவந்ததாக சூடாமணியின் மறைவின்போது எழுதப்பட்டிருந்த அஞ்சலிக் கட்டுரை ஒன்று குறிப்பிட்டிருந்தது. மொழிபெயர்ப்புப் பிரதிகள் விஷயத்திலும் இதேவிதமான நுட்பமான மாற்றங்கள் (அதாவது, வெட்கங்கெட்ட திருட்டுகள்) நடந்ததுண்டு; நடந்துவருவதுண்டு. இப்பொழுது, காலச்சுவடு மேலே குறிப்பிட்டுள்ள கட்டுரையை வெளியிட்டிருப்பதன் மூலம் ஒரு படி மேலே போய், மூலப் படைப்பாளரை (இந்த விஷயத்தில், காலச்சுவடு வெளியீடான ஆத்மாநாம் கவிதைகள் என்ற நூலின் தொகுப்பாசிரியரான கவிஞர் பிரம்மராஜனை) மதிப்பழித்து, கேவலப்படுத்தி அவருடைய உழைப்பை ‘சல்லி’சாக அபகரித்துக்கொள்ளும் நூதனமான வழியைத் தேர்ந்துகொண்டிருக்கிறது. இல்லையெனில், மேற்குறிப்பிட்ட அவதூறுக் கட்டுரையை வெளியிட்ட அதே இதழிலேயே, குறைந்தபட்சம் ‘ஆத்மாநாம் தொகுப்பை வெளியிட்டு மூன்று நான்கு பதிப்புகள் ‘உள்ளது உள்ளபடி’ வெளியிட்டிருக்கும் பதிப்பகம் என்ற பொறுப்பேற்போடு காலச்சுவடு பதிப்பகமே சில கருத்துகளை வெளியிட்டிருக்க முடியும். அதைச் செய்யவில்லை. தொகுப்பாசிரியரிடம் அந்தக் கட்டுரையை அனுப்பி அதற்கான சில பதில்களைப் பெற்றிருக்க முடியும். ஆனால், அதைச் செய்யவில்லை. ஆக, அந்தக் கட்டுரை காலச்சுவடில் வெளியிடப் பட்டிருப்பதற்கான உள்நோக்கம் வெளிப்படை.

வாடகை வீடு மாறும்போது புத்தகங்களை மூட்டை மூட்டையாய்க் கொண்டுபோய் இறக்கினால் வீட்டு உரிமையாளர்கள் பயந்துபோய்விடுகிறார்கள் என்பதால் புத்தகங்களைச் சின்னச்சின்னப் பையில் குவித்து எடுத்துப்போய் பாத்திர பண்டங்களைப் போல் சாதுவாக அவற்றை இறக்கி கட்டிலின் கீழ் போட்டாயிற்று. ஆனால், மேதகு ‘ஆத்மாநாம் ஆய்வாளர்’ திரு. கல்யாணராமன் திறனாய்வு என்ற பெயரில் இப்படிக் கிறுக்கித் தள்ளியிருக்கிறாரே, அச்சுப்பிழைகளை யெல்லாம் தீவிரவாத சதித்திட்டமாய், நவீன தமிழ்க் கவிதைகளுக்குப் பொருள்கூற இவர்தான் ‘அத்தாரிட்டி’ என்பதுபோல் என்னென்னவோ உளறிக்கொட்டி யிருக்கிறாரே, இவர் மாதிரி ஆட்களுக்கெல்லாம் பதிலளிக்கவேண்டிய நிலைக்கு சிற்றிதழ் வாசகர்களும் படைப்பாளிகளும் ஆளாக்கப்பட்டிருக்கிறோமே, அதற்காக பேசாமலிருந்தால் இப்படிப்பட்ட அரைகுறைத் திறனாய்வு களுக்கு அங்கீகாரம் வழங்கினாற்போலாகிவிடுமே என்று மனதில் பலவாறாய் எண்ணங்கள் ஓட, புத்தகங்கள் இருந்த பைகளைத் துழாவி ஆத்மாநாம் சம்பந்தப்பட்ட புத்தகங்களைத் தேடி வெளியே எடுத்தேன்.

Continue Reading →

வாழ்த்துகிறோம்: இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவனமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து வழங்கும் இரா. உதயணன் இலக்கிய விருது-2016

இலண்டன் எழுத்தாளர் நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்கள் எழுதிய ‘காலத்தை வென்ற காவிய மகளிர்’ (Women of the Epics who outdated their times)  என்ற…

Continue Reading →