எம் .ஜெயராமசர்மா (மெல்பேண், அவுஸ்திரேலியா)கவிதைகளிரண்டு!

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -

1. வீணாக்கார் தம்முயிரை !

பிறப்பிக்கும் இறப்புக்கும் பெரும்போரே நடக்கிறது
பிறந்துவிட்ட யாவருமே இறந்துவிடல் நியதியன்றோ
இறப்பதற்கு எவருமே ஏக்கமுடன் இருப்பதில்லை
இருந்துவிட வேண்டும் என்னும் ஏக்கமதேயிருக்கிறது
வருந்தியமன் அழைத்தாலும் வரமாட்டேன் என்றழுத்தி
யமனுக்கே போக்குக்காட்டும் நாடகத்தை ஆடுகிறார்
விருந்துண்டு நாள்முழுக்க மேதினியில் வாழ்வதற்கே
மருந்துண்டு மருந்துண்டு வாழ்நாளை பார்க்கின்றார் !

எத்தனையே வைத்தியங்கள் அத்தனையும் பார்க்கின்றார்
சத்திர சிகிச்சையெலாம் தான்செய்து நிற்கின்றார்
நித்திரையை வரவழைக்க  நிறையப்பணம் கொடுக்கின்றார்
அத்தனைக்கும் அவர்வசதி உச்சமதில் இருக்கிறது
சொத்தெல்லாம் வித்தாலும் சுகம்பெறவே விளைகின்றார்
சத்தான உணவையெல்லாம் தானவரும் உண்ணுகிறார்
மொத்தமுள்ள வைத்தியரை குத்தகைக்கே எடுக்கின்றார்
முழுமையாய் வாழ்வதற்கே முழுக்கவனம் செலுத்துகிறார் !

Continue Reading →

சக்தி மகாத்மியம்! – வ.ந.கிரிதரன் –

மானுட சிந்தனை: சக்தி மகாத்மியம்! - வ.ந.கிரிதரன் -

எங்கும் விரவிக்கிடக்கின்றாய். உனைத்தவிர
என்னால் வேறெதனையும் இக்’காலவெளி’யில்
காணமுடியவில்லை.
இங்கு விரிந்து செல்லும் வான்வெளி,
இரவு வான், சுடர்கள், மதி என்று
அனைத்துமே.
இங்கு வாழும் மானுடர், மற்றும் பல்லுயிர்கள்
அனைத்துமே,
உனது நடனங்களே! நீ மீட்டிடும் இசையே!
நான் அவ்விதமே உணர்கின்றேன்.
நீயொரு கடல்.
உன்னில் ஓயாதெழுந்து வீழும்
அலைகளே எனக்கு எல்லாமும்.
என்னையும் உள்ளடக்கித்தான் நானிதைக்
கூறுகின்றேன்.
உறுதியான நிலையும், இடமும் அற்ற
விந்தையான பொருள் நீ!
அலையும் நீயே!

Continue Reading →

மலரும் நினைவுகள்! – வ.ந.கிரிதரன் –

மலரும் நினைவுகள்!- வ.ந.கிரிதரன் -

வாரணமிசைத்து வரவேற்றிடும்
ஊர்விழிக்கும் அதிகாலைப்பொழுதொன்றில்,
மலரே நீ பூத்துச்சிரித்தாய்.
சிரித்தென் சிந்தையில் பதிந்தாய்.
காலம் கடந்துமின்னும்
அன்று பூத்த அதிகாலை மலராய்
மணம் வீசிச்சிறக்க வைக்கின்றாய்.
மலரே ! உன் வனப்பும், நகைப்பும்
என் பொழுதுகளை வனப்பாக்கின.

Continue Reading →

எளநீர் மனசழகி எதுக்கு இந்த எளஞ்சிரிப்பு! ( கிராமியப் பாடல்)

- பா வானதி வேதா. இலங்காதிலகம், டென்மார்க் -

எளநீர் மனசழகி எதுக்கிந்த எளஞ்சிரிப்போ!
வளமான கிராமத்து வனப்பெண்ணிச் சிரிக்கிறியோ!
குளத்தோரக் காற்றின் குளுகுளுப்பில் கும்மாளமோ!
களவான எண்ணத்துக் குறுகுறுப்பில் சிரிக்கிறியோ!
அளந்து வெச்சயிந்த அழகான எளஞ்சிரிப்போ!

எடுத்த வெச்ச மச்சான் வரிக்கு
எசப்பாட்டுத் தேடறியோ!
எகத்தாள வரியெடுத்து ஏளனஞ் செய்வாயோ!
எதிர்காலம் எப்படியோவென்று எண்ணங்கள் தடுமாறுதோ!
எடுத்துச் சொல்லடி ஏனிந்த எளஞ்சிரிப்போ!

தனியே சிரிச்சாக்க தப்பாக நினைப்பாக
குனிந்ததலை நிமிராத குலவிளக்கா இருக்கோணுமடி!
கனிமரம் நீயடி கலகலப்பைக் குறைச்சிடடி!
செனிச்ச பயன் சீராகச் சிறப்பைச் சேரடியோ!
தனிமை எதுக்கடி தண்ணிக்கொடம் நிறைச்சிடடி!

Continue Reading →

ஆய்வு: பழந்தமிழரின் வானியல் அறிவுநுட்பம்

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -இன்றைய அறிவியல் உலகில் அண்டவெளி பிரபஞ்சத்தை பற்றி (Universal) நொடியொரு பொழுதும் ஆராய்ந்து கொண்டே வருகின்றனர்.  நீண்ட மனித வாழ்வின் அறிவியல் தேடலும், நவீன அறிவியல் கருவிகளின் வரவுமே இவ்வுலகை இன்று ‘அறிவியல் யுகமாய்’ மாற்றியிருக்கின்றது.  ஆனால் பண்டைய காலம் அப்படி இல்லை.  ஊழி காலத்துள் (பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு) வாழ்வதற்கான போராட்டம் மிகப்பெரும் சவாலாக விளங்கியது.  பின்னர் தேவைகள் ஒருபுறம் பூர்த்தியாக மற்றொரு புறம் இயற்கையைப் பற்றி ஆய்வினில் இறங்கினர்.  அதனால் இயற்கைக்கு உட்பட்ட இயல்பான வாழ்வினை அதனோடு இயற்கைப் புறவெளியையும் ஆய்ந்தனர்.  அறிவியலுள் ‘வானியல் அறிவும் பண்டைத் தமிழகத்துள் மிகுந்திருந்தது.  வான்வெளியில் நிகழும் மாற்றங்கள், கோள்களின் இயக்கப் போக்குகள் அதனால் புவியில் ஏற்படும் மாற்றங்கள், பருவ மாற்றங்கள் என பலவற்றையும் ஆராய்ந்து அதற்கேற்ப தங்கள் வாழ்க்கையை அமைத்தனர்.

பண்டைய இந்தியாவிலும், ‘வானியல் அறிவு’ சிறப்பாக இருந்தது என்பர்.  “ரிக் வேதத்தின் மூலம் வேதகாலத்து இந்தியர்கள் வானியல் சிந்தனைகள், சூரியனின் பாதை சந்திரனின் பருவங்கள், கோள்களின் இயக்கம் போன்றவற்றைப் பற்றிய தேவையான அறிவைப் பெற்றிருந்தனர் என்று பொதுவாகக் கருதப்படுகிறது.  சந்திரனை அடிப்படையாக வைத்து மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன.  சந்திரனுக்கு ‘மாச கிருத்தா அல்லது மாதத்தை உருவாக்குபவர்’ என்ற பெயரும் உண்டு.  சந்திர மாதங்களின் பெயர்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் பௌர்ணமி ஏற்படுகிறதோ அந்தந்த நட்சத்திரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டன.  ‘சந்திரனின் வீடுகள்’ (Iunarmansions) என்றழைக்கப்படும் நட்சத்திர இராசி முறை இந்தியாவிற்கே உரித்தான ஒன்றாகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
(பக். 67 கு.வி. கிருட்டிணமூர்த்தி, அறிவியலின் வரலாறு)

தமிழ் மாநிலத்துள் ஐநில மக்களின் வாழ்வும் இயற்கைச் சூழலுக்கேற்ப அமைந்திருந்தது.  கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகிய 6 – வகை பருவங்களை வகுத்து, அப்பருவங்களுக்கு ஏற்ப வாழ்வு அமைத்து இயற்கை வாழ்வு வாழ்ந்தனர்.  ஞாயிறு, திங்கள் பிற கோள்கள், நட்சத்திரங்களின் இயல்புகள் சிலவற்றை கண்டறிந்தனர்.  அதன் அடிப்படையில் கால கணிதம் தோற்றுவித்தே ஒவ்வொரு நிகழ்வினையும் செய்தனர்.  பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள் வரையும் வானின் செயல்களை வைத்தே நிகழ்வினை செய்தனர்.

Continue Reading →