ஆய்வு: பண்டைத் தமிழ்ச் சூழலும், பெண்ணடிமைத் தனத்திற்கு எதிரான இன்குலாப்பின் குரலும்.

- பா.பிரபு M A., M.Phil., P.hd, உதவிப் பேராசிரியர், ஸ்ரீ மாலோலன் கல்லூரி, மதுராந்தகம் - 603306. -எந்த வகை இலக்கியமாயினும் முற்போக்கு சிந்தனையோடு படைக்கும் போது தான் நிலை பெறுகின்றது.  முக்காலத்திய ஆய்வில் கடந்த கால உண்மைகளை வெளிக் கொணர்வதும், நிகழ்கால பார்வையோடு சுட்டி உரைப்பதும், அவை எதிர்காலத்திய தேவை மற்றும் புரிதலுக்கானதாகவும் அமையும் போது அஃது முற்போக்கு இலக்கியமாய் வலம் வரும்.  அவ்வகை தன்மையில் ‘இன்குலாப்பின் ஒளவை’ 20 -ஆம் நூற்றாண்டின் சிறந்த கலைப்படைப்புகளுள் ஒன்றாகக் கொள்ள முடியும்.

இதற்குரிய அடிப்படை காரணம் என்னவெனில், அவர் பண்டைய கால தமிழகச் சூழலை பார்க்கும் கோணமே முதன்மைச் சிறப்பு.  சமூகத்துள் நிகழ்ந்த பெண்ணுடிமைத் தனத்திற்கு எதிரான அவரின் குரல், மக்களின் பார்வையும், மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுப்பதற்கான கூர்மைச் சிந்தனையும் முதன்மை அம்சம் பெற்று ‘ஒளவை நாடகம்’ திகழ்கின்றது.  கேள்விகளை முன் வைப்பதோடு காரணங்களையும் முன் வைத்து விமர்சன ரீதியாக பண்டைத் தமிழகத்தை ஆய்ந்தே இந்நூல் ஆக்கப்பட்டுள்ளது. 

இலக்கியம் மக்களுக்கானதாக இருக்கும் பட்சத்திலேயே அவை சிறந்த கலைப் படைப்பாக அமைய முடியும் என்பதை நோக்காகக் கொண்டுள்ளார்.   அவ்வகையில் அவர் சமூகத்திற்கு பல கருத்துக்களை முன் வைத்துள்ளார்.  அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

1.    பண்டைய இனக்குழு சமூகத்தின் மிச்ச சொச்சமும் மன்னர் உடைமை சமூகத்தின் அதிகார மையமும்.
2.    பாணர்களின் நிலையும், ஐந்நில மக்களின் வாழ்வும்.
3.    ஒளவையின் கருத்தியலும், ஒளவைப் பற்றிய பார்வையின் சிக்கலும்.
4.    பெண்ணடிமைத் தனமும் விடுதலைக்கான முன்னேற்பாடும்.

என 4 வகையில் அடிப்படையாக இந்நூலை வகைப்படுத்த முடிகின்றது.

Continue Reading →

கட்டுரை: ‘கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) தொகுப்பு …. வ.ந.கிரிதரன் –

– கடந்த ஆண்டு வெளியான ‘கணையாழிக் கட்டுரைகள் (1995 – 2000) ‘ என்னும் தொகுப்பு நூல் பற்றிய எனது விமர்சனம் செப்டம்பர் 2017 ‘கணையாழி’ இதழில் வெளியாகியுள்ளது. ஒரு பதிவுக்காக அக்கட்டுரை இங்கு மீள்பிரசுரமாகின்றது. – வ.ந.கி –


கணையாழிக் கட்டுரைஅண்மைககாலத்தில் வெளிவந்து நான் வாசித்த கட்டுரைத்தொகுதிகளில் சிறந்த தொகுதிகளிலொன்றாகக் ‘கணையாழிக்கட்டுரைகள் (1995-2000) தொகுதியினைக் கருதுவதில் எனக்கு எந்தவிதத்தயக்கமுமில்லை. இந்தக்கட்டுரைதொகுதி என்னைக் கவர்வதற்குக் காரணமாக  இத்தொகுப்பு உள்ளடக்கியுள்ள கட்டுரைகளின் கூறுபொருள், கட்டுரைகளின் மொழிநடை ஆகியவற்றையே குறிப்பிடுவேன்.

கட்டுரைகளின் கூறுபொருள்
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகளின் கூறுபொருள் பன்முகத்தன்மை வாய்ந்தவை. கலை, இலக்கியம், அறிவியல், அரசியல் எனக் கட்டுரைகள் பல விடயங்களைப்பற்றிக் கூறுபவை. இலக்கியத்தை என்னும் அதை மேலு பல உபபிரிவுகளாகப் பிரித்துப் பார்க்கலாம். கவிதை, படைப்பாளிகளின் படைப்புத்தன்மை, நாடகம், மொழிநடை (வட்டாரத்தமிழ் போன்ற), மேனாட்டு இலக்கிய அறிமுகம், நூல் அறிமுகம் இவ்விதம் இலக்கியத்தின் பன்முகப்பிரிவுகளிலும் கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றது தேர்வாளர்களின் கடும் உழைப்பினை வெளிப்படுத்துகின்றது. இப்பிரிவிவில் வெளியான கட்டுரைகள் வெளிப்படுத்தும் விடயங்கள், தகவல்களும் பற்பல.

படைப்பாளிகளைப்பற்றிய கட்டுரைகளாகச் சா.கந்தசாமியின்  ‘ஒரு படைப்பாளியின் நடைப்பயணத்தில்’ , ‘ஆருயிர் கண்ணாளுக்கு’ (எழுத்தாளர் புதுமைப்பித்தன் மனைவிக்கு எழுதிய நெஞ்சினைத் தொடும் கடிதம்), ‘கருத்துக்குளத்தில் கல்லெறிந்த கலகக்காரர்'(பிரபஞ்சனின் கலைஞர் படைப்புகள் பற்றிய பார்வை), சா.கந்தசாமியின் ‘இலக்கிய சரிதம்’ , தஞ்சை ப்ரகாஷின் ‘எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்’, விக்கிரமாதித்யனின் ‘நவீன கவிதை பிரமிளுக்கு முன்னும் பின்னும்’ , ஞானக்கூத்தனின் ‘டி.எஸ்.இலியட்டும் தமிழ் நவீன இலக்கியமும்’ , அசோகமித்திரனின் ‘சக பயணி’ போன்ற கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன.

அசோகமித்திரனின் கட்டுரைகளில் கூறப்படும் பொருளுடன் பல்வேறு தகவல்களும் காணப்படுவது வழக்கம். இங்கும் ‘சக பயணி’ என்னும் அவரது சிறு கட்டுரை கோமல் சுவாமிநாதனைப்பற்றி குறிப்பாக அவரது நாடக, சினிமா முயற்சிகளைபற்றி, அவர் ஆசிரியராகவிருந்து வெளியிட்ட ‘சுபமங்களா’ பற்றி, கோமலின் இறுதிக்காலத்தைப்பற்றிச் சுருக்கமாகப் பதிவு செய்யும் கட்டுரை அறுபதுகளில் நடிகர் சகஸ்ரநாம் சேவா ஸ்டேஜ் நாடகக் குழு பற்றி, அறுபதுகளில் உஸ்மான் சாலையின் தென்பகுதியிலிருந்த தி.நகர் பஸ் ஸ்டாண்ட் பற்றியெல்லாம் மேலதிகத் தகவல்களைத் தருகின்றது.\

தஞ்சை ப்ரகாஷின் ‘எம்.வி.வெங்கட்ராம் எனும் நிரூபணம்’ என்னும் கட்டுரை எம்.வி.வி.யின் வாழ்க்கையை வெளிப்படுத்தும் சமயம், எழுத்தாளர் நீலமணி பற்றியும், சுதேசமித்திரன் பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றியும் எடுத்துரைக்கின்றது. பொருளியல்ரீதியில் எவ்வளவோ சிரமங்களை இருப்பு அவருக்குக் கொடுத்தபோதும் எம்.வி.வி ஒருபோதுமே ‘அவர் வியாபார எழுத்தில் , வெகுஜன ரசனையில் என்றுமே ஈடுபாடு வைத்ததில்லை’ என்றும் கட்டுரையாளர் சுட்டிக்காட்டுவார்.

Continue Reading →

எழுத்தாளர் கி. ரா.வின் 95-ஆவ்து பிறந்த நாள் விழா!

அன்புடையீர், வணக்கம்!  எழுத்தாளர் கி. ரா.வின் 95-ஆவ்து பிறந்த நாள் விழா 16 செப்டெம்பர் 2017, சனிக்கிழமை அன்று காலை 9 முதல் இரவு 9 வரை புதுச்சேரி பொறியியல் கல்லூரி எதிரில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் நடைபெறவுள்ளது. அழைப்பிதழ் இணைத்துள்ளோம்.அனைவரும் வருகை  தருமாறு கேட்டுகொள்கிறோம்.

அன்புடன்,
பா.செயப்பிரகாசம் | க.பஞ்சாங்கம்,| சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்.

Continue Reading →