அஞ்சலிக்குறிப்பு: மரணத்துள் வாழ்ந்து மறைந்த மருத்துவர் பொன். சத்தியநாதன் நினைவுகள்! –

மருத்துவர் பொன். சத்தியநாதன் தமிழே மூச்சாக வாழ்ந்தவரின் இறுதி மூச்சு அடங்குவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பராமரிப்பு நிலையத்தில் அவரைப்பார்த்தபோது, அவரது பார்வை நிலைகுத்தியிருந்தது. அருகிலிருந்த அவரது அன்புத்துணைவியார் மருத்துவ கலாநிதி நளாயினி, ” அப்பா… யார் வந்திருக்கிறார்கள் தெரிகிறதா..?” எனக்கேட்கிறார். அவரது நீண்ட கால நண்பர் சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரனும், படைப்பாளியும் ஊடகவியலாளருமான தெய்வீகனும், விக்ரோரியா ஈழத்தமிழ்ச்சங்கத்தலைவர் பரமநாதனும் –  நானும் அவரை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். ஆனால், தம்மை பார்க்க வந்திருப்பது யார் என்பது அவருக்குத் தெரியுமா…? தெரியாதா…? என்பதும் எமக்குத்தெரியாது. அவர் கடந்த சில வருடங்களாகவே மரணத்துள் வாழ்ந்துகொண்டிருந்தவர் என்பது மாத்திரமே எமக்குத்தெரியும். எமது நினைவுகளில் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பற்றாளர், மருத்துவர் பொன். சத்தியநாதன் கடந்த சில வருடங்களாகவே நினைவு மறதி உபாதையினால் பாதிக்கப்பட்டு, மரணத்துள் வாழ்ந்து – பராமரிப்பிலிருந்து கடந்த 15 ஆம் திகதி வெள்ளியிரவு மரணவாழ்வுக்கும் விடைகொடுத்து மறைந்துவிட்டார். இலங்கையில வடபுலத்தில் கரவெட்டியில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்திருக்கும் இவர்,  தமது இளம் பராயத்திலேயே பகுத்தறிவுச் சிந்தனை வயப்பட்டவராக தமது ஆசான்களுடனும் மதபீடத்தினருடனும் வாதம் செய்திருக்கும் முற்போக்காளர். மார்க்சீயப்  பற்றேதுமின்றியும்  பெரியாரிஸம்  பேசாமலும் கடவுள் மறுப்புக்கொள்கையுடன் வாழ்ந்தவர். அவர் பற்றுக்கொண்டிருந்தது தமிழில்தான். தமிழுக்காக  எதனையும் செய்யும் இயல்பும் அவரிடமிருந்தமையால், அவர் இழந்ததும் அதிகம். தியாகம் செய்ததும் அதிகம்.

Continue Reading →

கவிதை: இலக்கிலாது சஞ்சரித்தேன் நான் I wandered Lonely as a cloud – William Wordsworth)

கவிதை: இலக்கிலாது சஞ்சரித்தேன் நான் I wandered Lonely as a cloud – William Wordsworth)

இலக்கிலாது சஞ்சரித்தேன் நான்
பள்ளத்தாக்கின் மீதும், மலை மீதும், உயர மிதக்கும்
ஒரு வான்முகில் போல்,
கண்டேன் நான் அவ்வமயம்
ஒருமருங்கே அனைத்தையும்
ஒரு பெருந்திரள் கூட்டமாய் பொன் வண்ண எழிலில் டாப்போடில்ஸ் மலர்கள்
ஏரியின் அருகாமையில், மரங்களின் கீழ்நிழலில்
மென்காற்று அலையில்
சிலிர்த்துப் படபடத்துக்கொண்டும், நர்த்தனமாடிக்கொண்டும் அவைகள்.

Continue Reading →