ஆய்வு: காப்பிய கதைகளினூடான கதைச்சொல்லிகள் (சிலப்பதிகாரத்தில் உளவியல் பார்வை)

- ச.அன்பு, M.A.,M.Phil.,(Ph.D.,), தலைவர் - தமிழ்த்துறை, விஸ்டம் கலை & அறிவியல் கல்லூரி, அனக்காவூர் – 604 401.-         காப்பியம் என்பது காப்புடையது. பொருள் தொடர் நிலையில் அமைவது. அதாவது ஒரு மொழியை சிதைக்காமல் காப்பது காப்பியம். இதையே இலக்கண மரபு, மரபின் இயல்பு வழுவாமல் காத்தல் என்று கூறுகிறது.

காப்பு – என்னும் சொற்பொருள்
பொதுவாக தமிழில் தக்க கருத்தியல்களைத் தரும் இலக்கியங்களாகத் திகழ்வன இதிகாசங்கள் என்று சொல்லத்தகும் மகாபாரதமும், இராமாயணமும்; காப்பியங்கள் என்று அழைக்கப்படும் பெருங்காப்பியப் பண்புகளுக்குட்பட்ட காப்பியங்களும்; சங்க இலக்கியங்கள் என்று அழைக்கப்படும் எட்டுத்தொகை பத்துப்பாட்டு நூல்களும் அதன் அமைப்பியலை ஒத்த சிற்றிலக்கிய நூல்களும் தான். இவற்றில் கூட முதலாவதாகச் சொல்லப்பட்ட இதிகாசங்கள் தான் நமக்கான எல்லா கருத்தியல்களையும் சொல்லுகின்றன.

இதிகாசங்களால் சொல்லப்பட்ட நமக்கான பண்பாட்டு – கலாச்சார – பழக்கவழக்கங்கள் யாவும், புனைகதைகளாகவும் (கட்டுக் கதைகளாகவும்), தொல்புராண கதைகளாகவுமே சொல்லப்பட்டுருப்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தொல்புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்தியல்கள் தான் பின்னால் வந்த காப்பியங்கள் மூலம் காட்சிகளாக – நாடகப்பாங்கில் காட்டப்பட்டுள்ளன அல்லது விளக்கப்பட்டுள்ளன. இப்படி காப்பியங்களால் விளக்கப்பட்ட காட்சியுருக்களே சங்க இலக்கியங்கள் மூலமாகவும் அதைத் தொடர்ந்து வந்த பிற இலக்கியங்கள் மூலமாகவும், ஒருவித விமரிசன நோக்கில் பிரித்தறியப்பட்டது. இப்பிரிவுகள் அனைத்தும் அதன் தன்மையை அல்லது உட்பொருளை விளங்கிக்கொள்ள வந்தவையாகும். எனவே தான் சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் தனது எல்லா கருத்துரைகளையும் அகம் – புறம்; காதல் – வீரம்; களவு – கற்பு; தலைவன் – தலைவி என இரண்டு வகைமைக்குள் அடக்கி இருக்கக்காண்கிறோம். இவையல்லாமல் எழுந்த மற்ற இலக்கியங்கள் யாவும் புதிதாக எதையும் சொல்வதாக இல்லை. மாறாக ஏற்கனவே தொன்றியுள்ள இதிகாசங்கள், காப்பியங்கள், இலக்கியங்கள் என்ற மூன்று வகைமைக்குள் இருக்கும் உண்மைகளைத் தேடுவதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் அடிப்படையில் தான் தமிழ் நூல்கள் அனைத்தும் இலக்கியங்கள், காப்பியங்கள் என்ற இரண்டே வகைமைக்குள் அடக்கப்பட்டுள்ளன.

Continue Reading →

வாசகர் கடிதங்கள் சில..

வாசகர் கடிதங்கள் சில.Anbu Sivaram <mythreanbu@gmail.com>
Sep 9 at 5:44 AM
அன்புடையீர் வணக்கம். பதிவுகள் இணைய இதழில் பல நண்பர்களின் படைப்புகள் வெளிவந்திருப்பதை, கேள்வியுற்று சமீபத்தில் நான் இவ்விதழில் இடம்பெற்றுள்ள பல விஷயங்களை வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் நான் தேடி அலைந்துக்கொண்டிருக்கும் வீதி நாடகங்கள் குறித்த சில கட்டுரைகளும், பதிவுகளும் கிடைத்தன. மிக்க நன்றி. நான் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டத்தில், அமைந்துள்ள அனக்காவூர், விஸ்டம் மகளீர் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருகிறேன். எனது நண்பர் பூ.பெரியசாமி அவர்களின் கட்டுரையைப் படிக்க தேடியே நான் தங்கள் இணைய இதழுக்குள் வந்தவன். ஆனால் இப்பதிவில் இருக்கும் பல விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. பல நல்ல பயனுள்ள தகவல்களும் கிடைக்கப்பெற்றன.


sathya devi <bpsstree@gmail.com>
Sep 8 at 2:50 PM

வணக்கம். என் பெயர் சத்யா தேவி தமிழ் இலக்கியம் மீது பற்று உடையவள். உங்கள் பதிவுகள் குறித்த அறிமுகம் ஒரு தோழர் மூலம் கிடைத்தது அதை படித்து மகிழ்ந்தேன். நன்றி

Continue Reading →

ஆஸ்திரேலியா: எழுத்தாளர் முருகபூபதியின் ‘சொல்லவேண்டிய கதைகள்’ நூல் வெளியீடு! ‘ரஸஞானி’ ஆவணப்படம் திரையிடல்!

இலக்கியப்படைப்பாளரும் பத்திரிகையாளருமான லெ.முருகபூபதியின் புதிய நூல் சொல்லவேண்டிய கதைகள் வெளியீட்டுநிகழ்வும் முருகபூபதியின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் ரஸஞானி ஆவணப்படம் திரையிடலும் எதிர்வரும்   30-09-2017 ஆம் திகதி  சனிக்கிழமை…

Continue Reading →